தேசிய அனல்மின் கழகம்

சனி, 30 ஜனவரி, 2010

தேசிய அனல்மின் கழகம்


வரும் நிதி ஆண்டில், விரிவாக்கத்துக்காக ரூ.29,000 கோடி முதலீடு செய்ய திட்டம்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு


மும்பை
என்.டி.பி.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய அனல்மின் கழகம், வரும் 2010&11&ஆம் நிதி ஆண்டில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.29,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., அதன் மின்சார உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் இந்த மாபெரும் முதலீட்டை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பங்கு வெளியீடு
என்.டி.பி.சி. நிறுவனம் இரண்டாவது பங்கு வெளியீட்டில் இறங்க தயாராகி உள்ளது. இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில், இந்நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) ஏ.கே.சிங்கால் இத்தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், Òவரும் நிதி ஆண்டில், நிறுவனம் மேலும் 4,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அதன் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதனையடுத்து ரூ.29,481 கோடி முதலீடு செய்ய தயாராகி வருகிறதுÓ என்று தெரிவித்தார்.
நடப்பு 2009&10&ஆம் நிதி ஆண்டில், என்.டி.பி.சி. நிறுவனம் அதன் மின் உற்பத்தி திறனை 3,300 மெகா வாட் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. எனினும் இந்நிறுவனத்தின் சிபாட் மின் திட்டத்தின் முதல் பிரிவு இவ்வாண்டு ஆகஸ்டு மாதத்தில்தான் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டுக்கான இலக்கு எட்டப்படவில்லை. சிபாட் மின் திட்டம் 1,320 மெகா வாட் திறன் கொண்டதாகும். இத்திட்டம் தலா 660 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு பிரிவுகளாக உருவாக்கப்படுகிறது.
வணிக கடன்கள்
மாபெரும் முதலீட்டுச் செலவை மேற்கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், இத்தொகையின் ஒரு பகுதியை வெளிநாட்டு வணிகக் கடன்கள் மூலமாகவும், மற்றொரு பகுதியை இந்திய வங்கிகளிடம் கடன் பெற்றும் திரட்ட என்.டி.பி.சி. முடிவு செய்துள்ளது. இதில் வங்கிக் கடன்கள் சுமார் ரூ.26,000 கோடியாகவும், வெளிநாட்டு வணிக கடன்கள் ரூ.1,900 கோடியாகவும் இருக்கும்.
என்.டி.பி.சி. நிறுவனத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 30,644 மெகா வாட்டாக உள்ளது. இதனை, 2017&ஆம் ஆண்டுக்குள் 75,000 மெகா வாட்டாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்குப் பிறகு, ஆண்டுதோறும் 4,500 முதல் 6,500 மெகா வாட் வரை மின் உற்பத்தி திறனை அதிகரிக்க உத்தேசித்துள்ளது.

நடப்பு ஜனவரி மாதத்தில் ரூ.30,820 கோடி திரட்டப்பட்டது


புதிய பங்கு வெளியீடுகளில் Ôபிரிக்Õ நாடுகள் முன்னிலை



பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை Ôபிரிக்Õ நாடுகளாகும். நடப்பு ஜனவரி மாதத்தில் புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொண்டதில் இந்த நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
26 நிறுவனங்கள்
இந்நாடுகளிலுள்ள 26 நிறுவனங்கள் நடப்பு ஜனவரி மாதத்தில் இதுவரையில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக 670 கோடி டாலர் (ரூ.30,820 கோடி) திரட்டி உள்ளன. ஜனவரி மாதத்தில் நிறுவனங்கள் இந்த அளவிற்கு நிதி திரட்டியது இதுவே முதல் முறையாகும்.
நடப்பு ஜனவரி மாதத்தில் உலக அளவில் பங்கு வியாபாரத்தில் மந்தநிலை உருவாகி உள்ளபோதிலும், Ôபிரிக்Õ நாடுகளிலுள்ள நிறுவனங்கள் அதிக நிதியை திரட்டி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம் மற்றும் பங்கு வர்த்தகத்தில் எழுச்சி ஏற்பட்டிருந்த கடந்த 2007&ம் ஆண்டில் Ôபிரிக்Õ நாடுளில் உள்ள நிறுவங்கள் 23 புதிய பங்கு வெளிடுகள் வாயிலாக 390 கோடி டாலர் திரட்டி இருந்தன.
கடந்த 2008&ஆம் ஆண்டில் 22 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக 350 கோடி டாலர் திரட்டின. எனவே நடப்பு ஜனவரி மாதத்தில் Ôபிரிக்Õ நாடுகளிலுள்ள நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டு நடவடிக் கைகளில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இது, உலக அளவில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதியில் 76 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இது 5.6 சதவீதமாக இருந்தது.
Ôபிரிக்Õ நாடுகளில், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதியில் சீனாவின் பங்களிப்பு 67 சதவீதமாகும். சீனா நாட்டு நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் பங்கு வெளியீடுகளை மேற்கொண்டுள்ளன. அதிக தொகைக்கு நிதி திரட்டியதில் ரஷ்யாவைச் சேர்ந்த உருக்கு உற்பத்தி நிறுவனமான ரூசால் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 220 கோடி டாலர் திரட்டி உள்ளது.
உலோக துறை
புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக நிதி திரட்டுவதில் உலோகத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. சென்ற 2009&ஆம் ஆண்டில் Ôபிரிக்Õ நாடுகளில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக 6,300 கோடி டாலர் (ரூ.2,89,800 கோடி) திரட்டப்படன.

சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்


செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டியது



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சென்ற டிசம்பர் மாதத்தில் 52 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இது ஒரு மாபெரும் சாதனை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அத்தியாயம்
சென்ற 2009&ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.76 கோடி அதிகரித்து இருந்தது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் புதிதாக செல்போன் சேவையில் 1.91 கோடி பேர் இணைந்து, செல்போன் சேவைத்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளனர். Ôடிராய்Õ அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
ஆக, சென்ற டிசம்பர் மாதம் வரையிலுமாக நாட்டில் செல்போன் சேவையை (சி.டீ.எம்.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம்.) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 52.52 கோடியாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நவம்பர் மாதத்தில் 50.60 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது.
பார்தி ஏர்டெல்
ஒரே வாடிக்கையாளர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் இணைப்புகளை பெறுவது அதிகரித்துள்ளது. இதனால் சென்னை, புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் மக்கள்தொகை யையும் விஞ்சிடும் வகையில் செல்போன் இணைப்பு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் செல்போன் சேவைத் துறையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 28.50 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 11.80 கோடி என்ற அளவில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 9.40 கோடி என்ற அளவில் உள்ளது. இதனையடுத்து இத்துறையில் இந்நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள வோடாபோன் எஸ்ஸார் நிறுவனமும் சென்ற டிசம்பர் மாதத்தில் 27 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துக் கொண்டுள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 9.10 கோடியாக உள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் சென்ற நவம்பர் மாதத்தில் கூடுதலாக 25 லட்சம் வாடிக்கையாளர்களையும், டிசம்பர் மாதத்தில் 17 லட்சம் வாடிக்கையாளர்களையும் இணைத்துக் கொண்டது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 5.80 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் நான்காவது இடத்தில் உள்ளது.
இருப்பினும் கடந்த 5 மாதங்களாக அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 30 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஒரு நொடிக்கு ஒரு காசு திட்டத்தை அறிவித்த பிறகு இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிறுவனம் சி.டீ.எம்.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் செல்போன் சேவையை அளித்து வருகிறது.இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5.70 கோடியாக உயர்ந்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த எம்.டி.என்.எல். மற்றும் பீ.எஸ்.என்.எல். ஆகிய இரு நிறுவனங்களுமாக கூடுதலாக 20 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இவற்றுள் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 48 லட்சம் என்ற அளவிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6.28 கோடி என்ற அளவிலும் உள்ளது. செல்போன் சேவையில், இந்நிறுவனம் ஆறாவது இடத்தில் உள்ளது.
ஏர்செல்
ஏர்செல் நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் 16 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.10 கோடியாக உள்ளது. செல்போன் சேவைத் துறையில் இந்நிறுவனம் ஏழாவது இடத்தில் உள்ளது.
அண்மையில் புதிதாக செல்போன் சேவையில் களமிறங்கிய சிஸ்டெமா ஷியாம் நிறுவனம் சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் சேவை அளித்து வருகிறது. இந்நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் புதிதாக நான்கு லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது.
யூனிநார் நிறுவனம்
யூனிநார் நிறுவனம் ஜி.எஸ்.எம். செல்போன் சேவையில் களமிறங்கி உள்ளது. இந்நிறுவனத்தை, இந்தியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் குழுமமும், நார்வேயைச் சேர்ந்த டெலினார் நிறுவனமும் இணைந்து தொடங்கி உள்ளன. இந்நிறுவனம் சென்ற டிசம்பர் மாதத்தில் புதிதாக 12 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. சென்ற மாதத்தில் இந்நிறுவனம் ஏழு தொலைதொடர்பு வட்டங்களில் செல்போன் சேவையை தொடங்கி உள்ளது

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை


வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான கடன் கொள்கை ஆய்வு அறிக்கையை பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ. சுப்பாராவ் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டார். அதில் சி.ஆர்.ஆர். என்றழைக்கப்படும் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன்
இந்த விகிதம் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் வீடு, வாகனம் மற்றும் கல்விக் கடனிற்கான வட்டிவிகிதத்தை வங்கிகள் உயர்த்தாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) உயர்த்தப்படவில்லை. மேலும் வங்கிகள், அவற்றின் உபரிநிதியை பாரத ரிசர்வ் வங்கியில் அவ்வப்போது இருப்பு வைப்பதற்காக பாரத ரிசர்வ் வங்கியால் வழங்கும் வட்டிக்கான விகிதத்திலும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்திடும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி, இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் நிதி பற்றாக்குறை மிகவும் உயர்ந்துள்ளது. பணவீக்க விகிதமும் அதிகரித்து வருகிறது. இது, நாட்டிற்கு சவால்களாக அமைந்துள்ளன என்று சுப்பாராவ் தெரிவித்தார்.
வங்கிகள் அவற்றால் திரட்டப்படும் டெபாசிட்டுகளில் குறிப்பிட்ட சதவீதத்தை பாரத ரிசர்வ் வங்கியில் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும். இதற்கு வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் என்று பெயர். இந்த விகிதத்தை பாரத ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் உயர்த்தி உள்ளது.
இரண்டு கட்டங்களில்...
முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 13&ந் தேதியிலிருந்து 0.50 சதவீதமும், இரண்டாவது கட்டமாக பிப்ரவரி 27&ந் தேதியிலிருந்து 0.25 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. இந்த நடவடிக்கையால், வங்கிகள் அவற்றால் திரட்டப்படும் டெபாசிட்டுகளில் கூடுதலாக ரூ.36,000 கோடியை வங்கிகளில் இருப்பு வைக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் நாட்டில் பணப்புழக்கம் குறைந்து, பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.) உயர்த்தப்பட்டுள்ளது குறித்து, பட்டேல் இன்ஜினீயரிங் நிறுவனத்தின், தலைமை செயல்பாட்டு அதிகாரி சோனல் பட்டேல் கூறும்போது, Òபாரத ரிசர்வ் வங்கி, சி.ஆர்.ஆர். விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, பாரத ரிசர்வ் வங்கி இந்த விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தி உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது நாட்டில் பணப்புழக்கம் மிகவும் நன்றாக உள்ளது. எனவே கடனிற்கான வட்டிவிகிதம் உயர வாய்ப்பில்லைÓ என்று தெரிவித்தார்.
பணவீக்கம்
சர்க்கரை, உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருள்கள் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. எனவே உணவு பொருள்களுக்கான பணவீக்க விகிதம் ஜனவரி 16&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 17.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து செப்டம்பர் மாதத்தில் 0.46 சதவீதமாக இருந்த, அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம், சென்ற டிசம்பர் மாதத்தில் 7.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பாரத ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பீடு செய்து இருந்தது. தற்போது உணவு பொருள்களின் விலை மிகவும் உயர்ந்து வருவதால், இது 8.5 சதவீதமாக உயரும் என தற்போதைய ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, சென்ற 2008&ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2009&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் ரூ.1.60 லட்சம் கோடி அளவிற்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் மத்திய அரசும் மூன்றுமுறை சலுகை திட்டங்களை அளித்தது. இதுபோன்ற காரணங்களால் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு 2009&10&ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி முன்னறிவிப்பு செய்துள்ளது. இதற்கு முன்னர் இது, 6 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டு இருந்தது.
கடன் வளர்ச்சி
நடப்பு நிதி ஆண்டில் வங்கிகளால் வழங்கப்படும் கடன் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்க வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளதார பின்னடைவிலிருந்து, உலக நாடுகள் இன்றும் முழுமையான அளவில் மீளவில்லை. எனவே பொருளதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதை லட்சியமாகக் கொண்டு பாரத ரிசர்வ் வங்கி, ரெப்போரேட் (4.75 சதவீதம்) மற்றும் ரிவர்ஸ் ரேப்போரேட் (3.25 சதவீதம்) ஆகியவற்றை உயர்த்தவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக