Nifty 16-08-2010

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சந்தைகள் புதிய எட்ட்ரதுடன் பயணிக்க வாய்ப்பு கூடியுள்ளது 5475 கடந்தால் 5650 வரை செல்லும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை பவர் வங்கி ரியல் எஸ்டேட் , ப்ஹர்ர்மா மற்றும் ஆட்டோ ,மெட்டல் பங்குகள் விலை கூட வாய்புள்ளது புதிய முதலிடுகள் தவிர்க்கவும் .

STOCKS TO WATCH

RELIANCE
BHARTHI
LANCO INFRA
DENA BANK
KFA
SUN TV
IOB
STERLITE INDUS
MUNDRA PORT
PHIPAVAV SHIPYARD
UNION BANK
POWER GRID
BIOCON
ALLAHABAD BANK
CANARA BANK
CPCL
HERO HONDA
EXIDE INDUS
STERLING BIO
LNT
OPTO CIR
GUJNRE COKE
COLGATE PAL
HUL
TATA CHEM
EKC
GMDC
JINDAL STEEL
TATA STEEL
GAIL
MRPL
PETRONET LNG
CROMPTON GRE
ABAN
JP ASSO
JAI PRAKASH POWER
LUPIN
HCC
IFCI
MAH&MAH FIN
REL CAP
LIC FIN
ADITYA BIRLA NUVO
IDEA
CAIRN
BOMBAY DYEING

சரிந்து கொண்டிருந்த சந்தை, எப்படி நிமிர்ந்தது என்பது எல்லாருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இரண்டு, மூன்று நல்ல காலாண்டு முடிவுகள், சந்தையை நிமிர வைக்கும் என்பதற்கு, இவ்வார சந்தை ஒரு உதாரணம். ஸ்டேட் பாங்க், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய மிகப்பெரிய கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள், சந்தையை நிமிர வைத்தன; முதலீட்டாளர்களையும் தான். ஸ்டேட் பாங்கின் முடிவுகளை தொடர்ந்து, எல்லா வங்கிப் பங்குகளும் மேலே சென்றன.
வியாழனும், வெள்ளியும் சேர்ந்து, மும்பை பங்குச் சந்தை, 96 புள்ளிகள் கூடி முடிந்தது. வெள்ளியன்று மட்டும் மும்பை பங்குச் சந்தை, 93 புள்ளிகள் கூடி, 18 ஆயிரத்து 167 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 35 புள்ளிகள் கூடி, 5,452 புள்ளிகளுடனும் முடிந்தது.ஸ்டெர்லைட் - கெய்ர்ன் இந்தியா கெய்ர்ன் இந்தியா கம்பெனியை வாங்க ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் முயற்சிக்கிறது என்பது தான், சந்தையின் தற்போதைய, 'ஹாட் டாபிக்!' இந்தியாவில் பல எண்ணெய் கிணறுகளை வைத்துள்ள கெய்ர்ன் இந்தியா, மேலும் பல இடங்களில் ஆய்வுகள் நடத்தி வருகிறது.

லாபத்தில் நடக்கும், ஒரு எண்ணெய் இக்கம்பெனியை ஸ்டெர்லைட் வாங்குவதற்கு முயலுகிறது என்ற செய்தி, சந்தையை இரண்டு நாட்களாக கலக்கிக் கொண்டிருக்கிறது.இதே போல, தென் கொரியாவில் திவாலான மோட்டார் கம்பெனியான, 'சாங்யாங்' என்ற கம்பெனியில், 70 சதவீதத்தை வாங்க, மகேந்திரா அண்ட் மகேந்திரா கம்பெனி முயற்சிக்கிறது. இக்கம்பெனி சிறிய மோட்டார் வாகனங்களை தயாரித்து வருகிறது.புதிய வெளியீடு குஜராத் பிப்பாவ் போர்ட் கம்பெனியின் புதிய வெளியீடு இந்த மாதம் வருமென தெரிகிறது. எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் வெளியீடு வந்துவிட்டது. சிறிய முதலீட்டாளர்களில் ஏழு பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு, 16ல் ஏழு பேருக்கும், 14 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு 10ல் எட்டு பேருக்கு, எட்டு பங்குகளும், அதற்கு மேல், விண்ணப்பித்தவர்களுக்கு குறைந்தபட்சம் எட்டு பங்குகளும் கிடைத்துள்ளன. 50 ரூபாய் அதிகமாக பட்டியலிடப்படலாம்.இன்ஜினியர்ஸ் இந்தியா வெளியீடு வெளிவந்து விட்டது. இது கிடைத்தவர்களுக்கு, நல்ல லாபங்கள் கிடைத்துள்ளன.உஜாலா ஜோதி லாபரெட்டரீஸ் (உஜாலா) கம்பெனி, 250 கோடி முதலீட்டில் இயங்கிக் கொண்டிருக்கும், இரண்டு கம்பெனிகளை வாங்கப் போவதாக அறிவித்து உள்ளது. சமீபகாலத்தில் இந்தக் கம்பெனியின் பங்குகள், நல்லவிதமாக மேலே சென்று கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. சரிவுகளில் வாங்கலாம்.
இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார குழுமமாக டாடா குரூப் நிறுவனம் உருவெடுத்துள்ளது.

முகேஷ் அம்பானி நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட டாடா குரூப்பின் மதிப்பு மிக அதிகமாகும். டாடா குரூப்பின் சொத்துக்கள் மார்க்கெட் நிலவரப்படி ரூ. 3,71,000 கோடியாகும்.

2வது இடத்தை முகேஷ் அம்பானியின் ரிலைன்ய்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குரூப் பெறுகிறது. இதன் மதிப்பு ரூ. 3, 21, 750 கோடியாகும். 3வது இடத்தை அனில்அகர்வாலின் ஸ்டெர்லைட் குரூப் பெறுகிறது. அதன் மதிப்பு ரூ. 1,35,300 கோடியாகும்.

4வது இடத்தில் இருக்கிறார் அனில் அம்பானி. இவரதுநிறுவனத்தின் மதிப்பு ரூ. 1,25,000 கோடியாகும். சுனில் மிட்டலின் பார்தி குரூப் ரூ 1,20,500 கோடியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

காலாண்டு முடிவுகள் டாடா மோட்டார்சின் நல்ல காலாண்டு முடிவுகளைத் தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்தாண்டு இதே காலாண்டை விட, இவ்வருடம் ஜூன் காலாண்டில் 25 சதவீதம் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது. மற்ற வருமானங்கள் கூடியுள்ளதால், இந்த லாபம் கிடைத்துள்ளது.இது தவிர, டாடா ஸ்டீல், மைக்ரோ டெக்னாலஜிஸ், ஆப்டோ சர்க்கியூட், எஸ்டி அலுமினியம், அதுனிக் மெட்டல்ஸ் கம்பெனிகளும், கடந்தாண்டு இதே காலாண்டை விட, இந்தாண்டு ஜூன் வரை காலாண்டில் நல்ல முடிவுகளை தந்துள்ளன.மேக் மை டிரிப்'மேக் மை டிரிப்' என்ற டிராவல் போர்ட்டல் கம்பெனி தன் ஏ.டி.ஆரை, அமெரிக்காவில் ஒரு ஏ.டி.ஆர்.,க்கு (அமெரிக்கன் டேபொசிடோரி ரெசிப்ட்) 14 அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் விற்றது. இது, அங்கு பட்டியலிடப்பட்ட போது, 75 சதவீத லாபத்தை பெற்றது. இந்தியர் ஒருவர் நடத்தி வரும் கம்பெனி இது என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவிலும் டிராவல் சம்பந்தமாக புக்கிங்குகள்செய்ய, இக்கம்பெனியின் ஆன்-லைன் வெப்சைட் உதவுகிறது.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்:சந்தையில் சிறிது தெம்பும், முன்னேற்றமும் தெரிகிறது. ஆசிய அளவிலும் சந்தைகள் மேலே சென்றுள்ளன. இது, சந்தையை அடுத்த வாரம் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா விலகக் கூடாது என்று டாடா நிறுவனப் பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை பதவி விலகினாலும், கவுரவ தலைவராகத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

வரும் டிசம்பர் 2012-ம் ஆண்டு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தனது தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்குள் அவரது இடத்துக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி ஆரம்பித்துள்ளது.

தனக்குப் பிறகு தலைவர் பதவிக்கு வரும் நபர் முற்றிலும் தகுதி வாய்ந்தவராக இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார் என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.

இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ரத்தன் டாடா பதவி விலகக் கூடாது என்று கோரியுள்ளனர்.

"டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து தாங்கள் விலகக் கூடாது என்பதே எங்கள் ஒருமித்த கோரிக்கை. ஒருவேளை தாங்கள் விலகுவதாக இருந்தாலும். டாடா குழுமத்தின் கவுரவத் தலைவராக தொடர வேண்டும். முக்கிய பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டும்.

டாடா குழுமத்துக்கு தங்களின் பங்களிப்பு அசாதாரணமானது. உலகின் 10வது பெரிய ஸ்டீல் நிறுவனமாக டாடா ஸ்டீலை உருவாக்கிய பெருமை உங்களுக்கே உரியது..." என்று பங்குதாரர்கள் கூறினர்.

பின்னர் டாடா கூறுகையில், "தலைவர் பதவிக்கான பொருத்தமான நபர் தேர்வு குறித்து இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். டாடா ஸ்டீலைப் பொறுத்த வரை, கோரஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது உலகில் பெரிய நிறுவனங்களுள் டாடா ஸ்டீலும் ஒன்றாக மாற உதவியது...," என்றார்.




- சேதுராமன் சாத்தப்பன் -


இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளை சர்வதேச அளவில் கட்டிப்போட்டுள்ள பெப்சிகோ நிறுவனம், டயட் ‌கோலா பிரிவில் புதியதெரு 'நோ சுகர்' கோலா மேக்சை அறிமுகப்படுத்துகிறது. இதன் முதற்கட்டமாக, பெப்சிகோ இந்தியா நிறுவனம், டில்லியில் கோலா மேக்சை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம், ஏற்கவவே, டயட் பெப்சியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெப்சிக‌ோ இந்தியா நிறுவன மார்க்கெட்டிங் பிரிவின் நிர்வாக இயக்குனர் புனிதா லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டிலான குளிர்பான சந்தையில், ஒரு சிறுபிரிவாக டயட் ‌கோலா பிரிவை துவக்கி உள்ளதாகவும், ஆண்டிற்கு 3 மில்லியன் கேஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தங்கள் நிறுவனம், உற்பத்தி மற்றும் விற்பனையை பன்மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, டில்லியில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 250 மிலி, 300 மிலி மற்றும் 500 மிலி பெட் பாட்டில்களில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், 2011ம் ஆண்டின் முற்பகுதியில், இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அவர் அதில் தெரிவித்திருந்‌தார்.

பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட நுகர் பொருள் துறையைச் சேர்ந்த பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.32.83 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.47.37 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.731.24 கோடியிலிருந்து ரூ.912.83 கோடியாக அதிகரித்துள்ளது

விமானப் போக்குவரத்தில் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தியா. முன்பு தூங்கி வழிந்து கொண்டிருந்து இந்திய விமான நிலையங்கள் மகா சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கின்றன. முக்கிய, பெரிய விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீனப்படுத்தி வருகிறது விமானப் போக்குவரத்து இயக்ககம். இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக ஹைதராபாத்தை தேர்வு செய்துள்ளது. வாடிக்கையர் திருப்தி, விமானங்களின் வருகை, செக் இன் செய்யப்படும் முறை என பல்வேறு விஷயங்களில் பயணிகளின் திருப்தியை அடிப்படையாகக் கொண்டு ஹைதராபாத்துக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது இந்த நிறுவனம். இது தவிர இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்களையும் அறிவித்துள்ளனர். ஆனால் இவற்றுக்கு ரேங்க் எதுவும் வழங்கப்படவில்லை. இந்தியாவின் சிறந்தவிமான நிலையங்களில் ஐந்தாம் இடத்தை சென்னை சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது. நகருக்குள்ளேயே அமைந்துள்ள ஒரே விமான நிலையம் என்ற பெருமை கொண்டது சென்னை விமான நிலையம். புதிதாக இரண்டாவது டெர்மினல் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ 2350 கோடி செலவில் அதிநவீனமயமாக்கப்பட்டு வருகிறது.கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளைக் கயாளும் திறன் கொண்ட முன்னணி விமான நிலையமாகத் திகழவிருக்கிறது சென்னை.

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் மூடப்பட்டுள்ளதால், சென்னை துறைமுகத்தில் அவற்றின் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை துறைமுகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், இரும்பாக மாற்றப்பட்டு, 'ஸ்டீல்' பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், கட்டிகள் மற்றும், துகள்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன.இதில், கட்டியான கற்கள் போன்ற தோற்றம் கொண்ட இரும்புத் தாது. நம் நாட்டில், ஒரிசா மாநிலம், கியாஞ்சோர் மாவட்டத்தில் உள்ள, பர்ப்பில் சுரங்கத்தில், முதல் தர இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன.தென் மாநிலங்களில், கர்நாடக மாநிலம் பெல்லாரி, ஹாஸ்பெட், ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபலாபுரம் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இரும்புத் தாதுக்கள் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டு, ஜப்பான், கொரியா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மத்திய அரசு சார்பு நிறுவனமாக செயல்பட்ட, 'மினரல் மெட்டல் டிரேடிங் கார்பரேஷன்' (எம்.எம்.டி.சி.,) மூலம் மட்டுமே இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கும் பணி முன்பு நடந்தது. அப்போது, துகள்களாக உள்ள தாதின் பயன்பாட்டை உணராமல், உள் நாட்டிலும் அது பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய கொள்கை மூலம், 2003ம் ஆண்டுக்கு பின், தனியாரும் சுரங்கத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, இங்கிருந்து சீன நாட்டிற்கு, கட்டிகள் போன்ற இரும்புத் தாது ஏற்றுமதி துவங்கியது. சீன நாட்டின் இறக்குமதியாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, துகள் தாதுகளும் ஏற்றுமதியாகத் துவங்கியது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் ஆந்திர மாநிலம் ஓபலாபுரம் சுரங்கங்களில், கடந்த ஆண்டு ஜூலை முதல் அரசியல் காரணங்களுக்காக இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு வந்த இரும்புத் தாதுக்கள், சென்னை துறைமுகம் வழியாகவே, அதிகளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதற்காக நாள்தோறும் அங்கிருந்து தலா 50 வேகன் கொண்ட ஐந்து சரக்கு ரயில்கள் மூலம் 11 ஆயிரத்து 200 டன் அளவிற்கு இரும்புத் தாதுக்கள் இங்கு எடுத்து வரப்பட்டன.இதுபோல் ஆண்டிற்கு சராசரியாக சென்னை துறைமுகத்தில் இருந்து 80 லட்சம் டன் வரை, சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்றுமதி தொழிலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், சென்னை துறைமுகத்தில், 'பிளாட்' எனப்படும் யார்டுகளை டெண்டர் மற்றும் வாடகைக்கு எடுத்து அங்கு ரயில் மூலம் எடுத்து வரப்படும் இரும்புத் தாதுக்களை தேக்கி வைத்து ஏற்றுமதி செய்து வந்தனர். இவர்களின் வசதிக்காக சென்னை துறைமுகத்தில் 24 யார்டுகள் உள்ளன. ஒவ்வொரு யார்டு மூலமும் மாதத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு வருமானமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்ததால், யார்டுகளை ஏற்றுமதியாளர்கள் துறைமுக பொறுப்பு கழகத்திடம் திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் துறைமுக பொறுப்பு கழகத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி இரும்புத் தாது சரக்குகளை கையாள்வதன் மூலம் ஆண்டிற்கு 83 கோடியே 20 லட்சம் ரூபாய், சென்னை துறைமுகத்திற்கு வருமானமாக கிடைத்தது. ஓர் ஆண்டாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருமானமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஏற்றுமதி மூலம் துறைமுகத்திற்கு மட்டுமின்றி, இரும்புத் தாதுக்களை ஏற்றி வந்ததன் மூலம் ரயில்வே துறைக்கு மாதம்தோறும் கிடைத்து வந்த மூன்று கோடியே 75 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, மத்திய வருவாய்த் துறைக்கு ஒரு டன் இரும்புத் தாது ஏற்றுமதி மூலம் கஸ்டம்ஸ் வரியாக 650 ரூபாயும், 'செஸ்' வரி மூலம் ஒரு ரூபாயும் கிடைத்து வந்தது. இவ்வாறு, மாதம் பல கோடி ரூபாய் அளவிற்கு கிடைத்த இந்த வருமானமும் முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும், இரும்பு தாது ஏற்றுமதியாளர்களுக்கும் அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மருந்து துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு 2010-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவில் மருந்துகள் விற்பனை வாயிலாக அதிக வருவாயை ஈட்டியதில் அமெரிக்காவைச் சேர்ந்த அப்பாட் லேபரட்டரீஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டின் முதல் ஐந்து முன்னணி மருந்து நிறுவனங்களில், மூன்று இடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. நாட்டின் மருந்துகள் விற்பனை வாயிலான மொத்த வருவாயில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு 15 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு 2010-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள், இந்தியாவில் மருந்துகள் விற்பனை வாயிலாக ஈட்டப்பட்ட மொத்த வருவாய், சென்ற ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 19.6 சதவீதம் அதிகரித்து ரூ.21,895 கோடியாக உயர்ந்தள்ளது. சென்ற ஆண்டிலும் மருந்துகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. மருந்துகள் வர்த்தகத்தில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இத்துறையில் பின்தங்கிய நிலையில் உள்ளன. இதுபோன்ற காரணங்களால், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திடும் வகையில் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தி வருகின்றன.

இணையதளம் மூலம் தொலைபேசி சேவை தரும் நிறுவனமான வோனேஜ் நிறுவனம், பேஸ்புக் நண்பர்களுக்குள்ளே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து, வோனேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இணையதளத்தின் மூலமமான தொலைபேச வசதியை பிரபலப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் ‌போன்களில் இந்த வசதி அறிமுகப்படு்த்தப்பட உள்ளதாகவும், இந்த வசதியைப் பெற, வோனேஜ் இணையதளத்திற்கு சென்று, அதற்குரிய சாப்ட்வேரை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும், அதன்பின், அவர்கள் வழக்கம்போல, பேஸ்புக்கை லாக் இன் செய்தால், அதில் அவர்களின் நண்பர்களின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தகவல் தொலைதொடர்பு வரலாற்றின் முக்கிய மைல்கல் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

பில்வாரா எனர்ஜி நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக பங்கு வெளியீட்டில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. பில்வாரா எனர்ஜி நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 1,000 மெகா வாட் அளவிற்கு நீர் மின் திட்ட பணிகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. வரும் 2014-ஆம் ஆண்டிற்குள் அருணாச்சல பிரதேசம், நேபாளம் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் ரூ.8,000 கோடி முதலீட்டுச் செலவில் நீர் மின் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என பில்வாரா குழுமத்தின் தலைவர் ரவி ஜூஜூன்வாலா தெரிவித்தார். மொத்த திட்டச் செலவில், ரூ.2,500 கோடி பங்கு மூலதனமாக இடப்படுகிறது.இதில் பங்கு வெளியீட்டின் வாயிலாக ரூ.1,000-1,200 கோடி திரட்டப்பட உள்ளது. பங்கு வெளியீடு வரும் 2011-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என ஜூஜூன்வாலா மேலும் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னணி மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிகர லாபம் 32 சதவீதம் சரிவடைந்துள்ளதாக த‌ெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ. 16.82 பில்லியன் நிகர லாபமாக ஈட்டியுள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 24.75 பில்லியன் நிகர லாபமாக ஈட்டியதாகவும், சதவீதத்தின் அடிப்படையில் இது 32 சதவீதம் சரிவு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 137 மில்லியன் மக்களை வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்டெல் நிறுவனம், ஆப்ரிக்க நாடுகளில் செயல்பாட்டிற்காக, குவைத் ‌தொலைதொடர்பு நிறுவனமான ஜைய்னை 9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியதாகவும், இதன்மூலம், சர்வதேச அளவில் ஐந்தாவது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளதாகவும் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமல்லாமல், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் தங்களது சேவை உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கும் தலையாய நிறுவனங்களுள் ஒன்றான, வோடபோன் எஸ்ஸார், தமிழ்நாட்டில் உள்ள அதன் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு “வோடபோன் அவசர கிரெடிட்” திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. இச்சேவையின் வழியாக, வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள நிகர மதிப்பிலிருந்து தங்களது அன்புக்குரிய நபர்களது மொபைல் கணக்கிற்கு ரூ.5-ஐ மாற்ற முடியும். இந்த உடனடி “வோடபோன் அவசர கிரெடிட்” திட்டத்தின் வழியாக, நடுவழியில் ரயில் அல்லது பேருந்தில் பயணம் தடைபட்டு, தத்தளிக்கின்ற நிலைபோன்ற அவசரகால சூழல்களில்கூட வாடிக்கையாளர்கள், தடையற்ற தகவல் தொடர்பை பயன்படுத்த இயலும். 5ரூ. பேலன்ஸ் தொகையை நன்கொடையாளர் மாற்றமுடியும். இம்மாற்ற பரிவர்த்தணையை தொடங்குகின்ற நபர் கணக்கில் 1ரூ. கட்டணம் வசூலிக்கப்படும். இம்மாற்ற பரிவர்த்தனையை கொடுப்பவர் அல்லது பெறுபவர் யாராயினும் தொடங்க இயலும். இச்சலுகைத் திட்டத்தைப் பயன்படுத்த, தொடங்கிவைக்கும் நபரது கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ.6 இருக்கவேண்டும் மற்றும் பெறுபவர் மற்றும் தொடங்கி வைப்பவர் ஆகிய இருவரும் வோடஃபோன் நெட்வொர்க்கில் குறைந்தது 3 மாதங்கள் இணைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியாக இருந்த பாங்க் ஆப் ராஜஸ்தான் இன்று (ஆகஸ்ட் 13ம் தேதி) முதல், முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐயின் கிளையாக செயல்படும் ‌என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில், பாங்க் ஆப் ராஜஸ்தானும், ஐசிஐசிஐயும் இணைவதற்கான கோரிக்கையை ரிசர்வ் வங்கியிடம் அளித்திருந்ததது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்ததையடுத்து, இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த இணைப்பின் மூலம், தங்கள் வங்கியின் பிராஞ்ச் நெட்வொர்க் 25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தேசிய அளவில், தங்கள் வங்கிக்கு 2 ஆயிரம் கிளைகள் உள்ளதாகவும், பாங்க் ஆப் ராஜஸ்தானி்ற்கு 463 கிளைகள் உள்ளதாகவும், இனிமேல், இந்த 463 கிளைகளும், ஐசிஐசிஐ வங்கியின் கிளைகளாக செயல்படும் என்றும், இதன்மூலம், நாட்டின் வடக்கு ‌மற்றும் மேற்குப் பகுதிகளில், தாங்கள் காலூன்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஐசிஐசிஐ வங்கி கையகப்படுத்திக்கொள்ளும் மூன்றாவது பொதுத்து‌றை வங்கி என்ற பெருமையை பாங்க் ஆப் ராஜஸ்தான் பெறுவதாகவும், கடந்த 2004ம் ஆண்டில் பாங்க் ஆப் மதுராவையும், 2007ம் ஆண்டில், மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்ட சங்லி வங்கியையும் கையகப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள ஷைன் ஹோண்டா கார் ஷோரூமில் புதிய ரக 'ஹோண்டா ஜாஸ் கார் அறிமுக விழா நேற்று நடந்தது. ஷைன் ஹோண்டா ஷோரூமின் நிர்வாக இயக் குனர் வகிதா ஷாஜகான் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். பொதுப் பணித் துறை அமைச்சர் ஷாஜகான், ஹோண்டா ஜாஸ் காரை அறிமுகம் செய்து வைத்தார்.புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன், முதல் விற்பனையை துவக்கி வைத்து கார் சாவியை வாடிக்கையாளர் செல்வத்திடம் வழங்கினார்.ஹோண்டா ஜாஸ் காரில் புதிய சிறப்பு அம்சங்களாக கவர்ச்சியான உள்தோற்றம், வடிவமைப்பு, அலாய் வீல், ஆடியோ சிஸ்டத்துடன் கூடிய யு.எஸ்.பி. வசதி, டிரைவர் சீட் அட்ஜஸ் மென்ட், போக் லேம்ஸ் போன்றவற்றை கொண் டுள்ளது. புதிய கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.ஷைன் ஹோண்டா ஷோரூமில் ஹோண்டா ஜாஸ் மற்றும் அனைத்து ரக கார்களும் வாடிக்கையாளர்களுக்கு 'டெஸ்ட் டிரைவ்' வசதி செய் யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கார்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் தரமான சர்வீஸ் செய்து தரப்படுகிறது. ஹோண்டா கார்களின் வரிசையில் ஹோண்டா ஜாஸ், ஜாஸ் சிட்டி, சிவிக், சி.ஆர்.வீ., மற்றும் ஹோண்டா அக்கார்டு ஆகிய கார்கள் ஷோரூமில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.ஹோண்டா ஜாஸ் கார் அறிமுக விழாவிற்கான ஏற்பாடுகளை ஷைன் ஹோண்டா பொதுமேலாளர் ஸ்ரீதர் செய்திருந்தார்.

இந்தியாவின் உணவுப் பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. கடந்த வாரம் 9.53 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், இந்த வாரம் 11.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. பால் பொருள்கள், தானிய வகைள் மற்றும் பழங்களின் விலை அதிக அளவில் உயர்ந்ததன் காரணமாக உணவுப் பணவீக்கத்தில் இந்த அளவு அதிக உயர்வு ஏற்பட்டுள்ளது. அடிப்படை உணவுப் பொருள்களின் விலை 15.66 சதவீதமாக உயர்ந்ததும், தானிய வகைகளின் விலை 20.74 சதவீதம் உயர்ந்ததும், பால் 19.4 சதவீதமாக உயர்ந்ததும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும். மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப்பணவீக்கம், 10.55 சதவீதமாக உள்ளது

இந்திய கன்ஸ்ட்ரக்சன் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நாகார்ஜூனா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.41.38 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.56.23 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.1,363.33 கோடியிலிருந்து ரூ.1,085.06 கோடியாக குறைந்துள்ளது.

:வாடிக்கையாளர்கள் குறிப்பிடும் நேரத்தில் சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யும் புதிய சேவையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐ.ஓ.சி.,) நேற்று அறிமுகம் செய்தது.இது தொடர்பாக ஐ.ஓ.சி., நிர்வாக இயக்குனர்ஸ்ரீகுமார் கூறியதாவது:நகரங்களில் கணவன்-மனைவி இருவரும்வேலைக்கு செல்லும் வீடுகளில் சிலிண்டரை வினியோகம் செய்வதில் பிரச்னைகள் எழுந்தது.இதற்கு தீர்வு காணும் விதமாக புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வாடிக்கையாளர்கள் வசதிகேற்ப அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் சிலிண்டர்கள் வீட்டில்வினியோகம் செய்யப்படும். இந்த புதிய சேவை ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடைவர்.இதற்கு கட்டணமாக 25 முதல் 50 ரூபாய் வரைவசூலிக்கப்படும். இது தவிர இந்த புதிய சேவையின் மூலம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்கள் குடோன்களில் சிலிண்டர்களைமாற்றிக் கொண்டு புதிய சிலிண்டரை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

நிர்வாகத்தில் பெண்களை விட ஆண்களே சிறந்தவர்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகிஉள்ளது. இங்கிலாந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என மூன்றாயிரம் பேரிடம் நடத்திய கருத்துகணிப்பில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது : தலைமை பொறுப்பில் ஆண்கள் இருக்கும் பட்சத்தில் நிர்வாகத்திறமை சிறப்புடன் இருப்பதாக பலர் அதில் தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களது தலைமைப் பொறுப்பில் பெண்கள் இருப்பதை விரும்பவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் முடிவில், உயர் அதிகாரிகளாக பெண்கள் இருப்பதை 63 சதவீதத்தினர் ஆதரித்தும், ஆண்கள் உயர் அதிகாரிகளாக இருப்பதை 75 சதவீத த்தினர் ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்

ஸ்ரீரேணுகா சுகர்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.90.20 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.78.10 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.893.50 கோடியிலிருந்து ரூ.1,999.50 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.118 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் அதன் ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றை ரூ.5 முகமதிப்பில் இரண்டு பங்குகளாக பிரித்தளிக்க உள்ளது. மேலும், இந்நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு 30 சதவீத இறுதி டிவிடெண்டை வழங்க உள்ளது. இது தவிர, 75 சதவீத சிறப்பு டிவிடெண்டும் வழங்கப்பட உள்ளது.

சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.22.55 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 33 சதவீதம் அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.283.56 கோடியிலிருந்து ரூ.406 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியார் துறை காப்பீட்டு நிறுவனமான டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா ஏஐஜி லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, எலெக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர் (இஎப்டி) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த புதிய இஎப்டி திட்டத்தின் மூலம், பணபரிவர்த்தனை எளிதாக நடைபெறும் என்றும், நாடு முழுவதும், 62 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி கிளைகளில் இந்த இஎப்டி திட்டம் நடைமுறையில் உள்ளதால், அதன் மூலம், தங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள், பிரிமீயம் பணம் செலுத்துவது எளிதாகிறது என்றும், இந்த இஎப்டி திட்டத்தின் மூலம், அவர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், அதன் மூலமே, எளிதாக பணம் கட்டிவிடலாம் என்றும், இதன்மூலம், தேவையற்ற இடையூறுகள் தவிர்க்கப்படும் என்று அந்த செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டில் தேவை அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு உரங்களின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்ற ஜுலை மாதத்தின் பிற்பகுதியில், உலக சந்தையில் ஹீரியா, டீ.ஏ.பி., பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் ஆகிய முக்கிய உரங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது, விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கவலையளிப்பதாக உள்ளது. உலக அளவில், உரங்கள் இறக்குமதியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சர்வதேச அளவில் உரங்கள் விலை அதிகரித்தபோது, நம் நாட்டின் உர மானிய சுமை சுமார் ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு 2010-11-ஆம் நிதி ஆண்டில் நம் நாட்டில் உரங்களுக்கான தேவைப்பாடு 5 சதவீதம் உயர்ந்து 5.60 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டில் 5.34 கோடி டன்னாக இருந்தது. சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் நம் நாடு 50 லட்சம் டன்னுக்கும் அதிகமான அளவில் உரங்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 120 கோடி டாலராகும் (சுமார் ரூ.5,600 கோடி). அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 240 கோடி டாலர் மதிப்பில் 57 லட்சம் டன் உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஜுலை மாதத்தில், 16 முதல் 29-ந் தேதி வரையிலான இரண்டு வாரங்களில், பாஸ்பேட் உரம் மட்டும் டன் ஒன்றுக்கு 22 டாலர் (சுமார் ரூ.1,000) உயர்ந்து 533 டாலராக (ரூ.24,500) அதிகரித்துள்ளது. இறக்குமதியாகும் டீ.ஏ.பி. உரத்தின் விலை டன் ஒன்றுக்கு 20 டாலர் அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் ஹீரியாவின் விலை 10 டாலர் அதிகரித்து 280 டாலராக உயர்ந்துள்ளது. இது, ஜுன் மாத தொடக்கத்தில் 270 டாலராக இருந்தது. பொட்டாஷ் உரத்தின் விலை மட்டும் குறைந்தபட்சமாக 4-5 டாலர் மட்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது ஒரு டன் பொட்டாஷ் உரத்தின் விலை சுமார் 370 டாலராக உள்ளது. உலக அளவில் இதற்கான தேவை 5.50 கோடி டன்னாக உள்ளது. எனினும் உற்பத்தி 6 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த உரத்தின் விலை மட்டும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.வி.ஆர்.சி.எல். இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் - புராஜக்ட்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.28.07 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.35.11 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.1,080.71 கோடியிலிருந்து ரூ.1,106.15 கோடியாக உயர்ந்துள்ளது

கோயம்புத்தூரைத் தலைமையடமாகக் கொண்ட சுகுணா கோழிப்பண்ணை நிறுவனம், சர்வதேச அளவில் கால்நடை நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த லோக்மானுடன் கைகோர்க்கிறது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகுணா கோழிப்பண்ண‌ை நிறுவன நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் தெரிவித்துள்ளதாவது ; இந்த கைகோர்ப்பின் மூலம், புதியவகை கால்நடை ‌நோய் தடுப்பு மருந்துகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இது தங்கள் நிறுவன வளர்ச்சியின் மற்றொரு மைல்கல்லாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முதற்கட்டமாக, தாங்கள் புதிய கால்நடை ‌நோய் தடுப்பு மருந்துகளை புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்க உள்ளதாகவும், உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டிருப்பதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்

டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான டாட்டா பவர் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.311.67 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.572.65 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.4,701.70 கோடியிலிருந்து ரூ.5,151.62 கோடியாக உயர்ந்துள்ளது.

மும்பை அருகே பனாமா நாட்டு கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட எண் ணெய் கசிவால், இங்குள்ள துறைமுகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, பாரதிய ஜனதா உறுப்பினர் கோபிநாத் முண்டே கூறியதாவது:மும்பை அருகே கடந்த வாரம் பனாமா நாட்டு கப்பல் கள் சித்ராவும், கலீஜாவும் மோதிக் கொண்டதில் சித்ரா கப்பலில் இருந்து கசிந்த எண் ணெய், 100 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரவியுள்ளது. இதனால், மீனவர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மும்பை துறைமுகத்தில் ஒரு லட்சம் கன்டெய்னர்கள் தேங்கியுள்ளன.

மோசமான நாசத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். அரசு துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது தான் இதற்கு காரணம்.கப்பல்கள் மோதல் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு கோபிநாத் முண்டே கூறினார்.

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை 25 அடிப்படை கொள்ளைகளின் படி உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு 2 நாட்களில் அமலுக்கு வரும் எனவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான அசட் லையபிளிட்டி கமிட்டி நாளை அல்லது நாளை மறுநாள் கூட உள்ளதாக எஸ்.பி.ஐ., தலைவர் ஓ.பி.பட் தெரிவித்துள்ளார். எஸ்.பி.ஐ., வங்கி தனது முதல் காலாண்டு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் காலாண்டு வருமானம் பெருமளவில் அதிகரித்திருப்பதால், வட்டி விகிதத்தையும் உயர்த்த இவ்வங்கி தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்
HAPPY TRADING
BULLMARKETINDIAA