தேசிய நிஃப்டி

செவ்வாய், 29 டிசம்பர், 2009

நமது சகோதரர்களுக்கு புத்தாண்டு வாழத்துக்கள் .
இந்த வலை பூவுக்கு கடந்த ஒரு மாத காலத்தில் வருகை தந்து உங்கள் ஆலோசன்கல்கு நன்றி
தொடருந்து ஆதரவு தரவும்.
இப்படிக்கு
BULLMARKETINDIAA


வருட கடைசி விற்பதற்கு f ii கல் விடுமுறையில் இருகிறார்கள் ஆகவே நமது சந்தைகள் நமக்கு 2009 கடைசி நாட்கள்தேசிய நிஃப்டி 5300 ஆருகில் முடிய வாய்ப்புகள். இன்றைய சந்தைகள் காளைகள் கைகளில் இருக்க .தேசிய நிஃப்டி 5190ஐ தாண்டவேண்டும் அப்படி தாண்டினால் 5200 -5235 -5270 வரை செல்லகூடிய வாய்புகள் இருக்கும் இன்று தேசிய நிஃப்டிஇன் தாங்கு நிலை 5130 சப்போர்ட் லெவல் கில் சென்றால் 5110 - 5085 வரை கில் நோக்கிய பயணம் இருக்கும்
சந்தை புதிராக இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு லாபமாகவே இருந்து வருகிறது. சங்கீத சீசனில் காதில் இசை என்ற இன்ப வெள்ளம் தான் தேனாக ஓடும். ஆனால், இந்த குளிர் சீசனிலும், சந்தை கதகதவென இருக்கிறது.
இது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியையே தருகிறது. இந்த வருடம் முதலீட்டாளர்களுக்கு நல்ல தீபாவளியாகவும், நல்ல வருடமாகவும் இருந்து வந்திருக்கிறது. புதனின் அசாத்திய ஏற்றத்தை தொடர்ந்து, வியாழனும் ஏற்றத்திலேயே முடிந்தது.


உச்சத்தில் இருந்த சந்தை: புதனன்று 539 புள்ளிகள் பெற்று உச்சத்தில் இருந்த சந்தை, தொடர்ந்து வியாழன்றும் 129 புள்ளிகள் உயர்விலேயே முடிவடைந்தது. இது, மும்பை பங்குச் சந்தையை, 17,360 புள்ளி என்ற அளவிற்கு கொண்டு சென்றது. இது, பங்குச் சந்தையின் கடந்த 19 மாத உச்சம். மும்பை பங்குச் சந்தை இதுவரை, 80 சதவீத லாபத்தை இந்த வருடத்தில் தந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை, 5,178 புள்ளிகளில் முடிவடைந்தது.


புதிய வெளியீடுகள்: பெரிய வெளியீடுகள் வந்திருந்தாலும், அது முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான பெரிய பயனையும் தரவில்லை. ஆங்கர் முதலீட்டாளர்கள் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. அதுவும் பெரிதாக எவ்வித பயனையும் தரவில்லை. 2010ல் பல புதிய வெளியீடுகள் வரக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவை, முதலீட்டாளர்களுக்கு எப்படி லாபங்களை தரப்போகிறது என்று பார்ப்போம்.


சாப்ட்வேர் பங்குகளும் சந்தையும்: சந்தை இந்த வருடம் நன்கு முன்னேற, சாப்ட்வேர் பங்குகளும் ஒரு காரணம். சந்தை கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகமாகி இருப்பதற்கு, பல சாப்ட்வேர் பங்குகள் 100 முதல் 300 சதவீதம் வரை கூடியுள்ளதே காரணம்.


வீட்டுக் கடன்கள்: வீட்டுக் கடன்கள் மிகக் குறைந்த வட்டியில் கிடைக்கின்றன. அதாவது 8 சதவீத வட்டியில் பல வங்கிகள், கம்பெனிகள் அளிக்கின்றன. இது தான் வீட்டுக் கடன் வாங்க நல்ல சமயம்.

ஆனால், வீடு வாங்க நல்ல சமயமா என்று யோசிக்க வேண்டும். வீடுகள் விலை கடந்த ஒரு வருடத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை கூடியுள்ளது. பொருளாதாரம் நிலையாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கூடும் வாய்ப்புகளும் உள்ளது.


உள்ளே வரும் வெளிநாட்டு முதலீடுகள்: அதிகமாக வரும் வெளிநாட்டு முதலீடுகள் தான் சந்தையின் தொடர் ஏற்றத்துக்கு காரணம். கடந்த நவம்பரில் மட்டும் 174 கோடி ரூபாய் வந்துள்ளது. இது, கடந்த வருட நவம்பர் மாதத்தை விட 60 சதவீதம் கூடுதல்.


மியூச்சுவல் பண்ட்களின் புதிய வெளியீடுகள்: ஏஜன்டுகளுக்கு கமிஷன் குறைந்ததால், மியூச்சுவல் பண்ட்களின் புதிய வெளியீடுகள், கடந்த காலத்தைப் போல பணங்களைச் சேர்க்க முடியவில்லை. கடந்த மூன்று மாதத்தில் வெளியான வெளியீடுகள் சேர்த்த பணம், இதற்கு முன் வெளியான வெளியீடுகளை விட பாதி குறைந்துள்ளது.


இந்த வருடத்தின் கடைசி வாரம். சிறிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால், சந்தையின் 2009 முடிவு, எல்லாருக்கும் திருப்திகரமாகவே இருக்கும்; இருந்திருக்கும். .

உலகம் முழுவதும் பண்டிகை கொண்டாட்டங்கள். ஆதலால், சந்தைகள் சத்தமின் றியே இருக்கும். கிறிஸ்துமஸ் முடிந்து புதுவருடம் துவங்கிய பின் தான் சந்தையில் மறுபடி களை கட்டும். இரண்டு காரணங்கள்: உலகச் சந்தைகள் மறுபடி செயல்படத் துவங்கும். பின் காலாண்டு முடிவுகளும் வரத்தொடங்கும். அதன் பின் சந்தைகள் சிறிது ஏறும்.
இன்றய சந்தைகளை பார்மா,, ,டெலிகாம் , FMCG .பேங்க் ரியாலிட்டி மெட்டல் பங்குகள் வழி நடத்தும் புதுவருடம்வரை பொறுமை இழந்தே காணப்படும் .
குறையும் பட்சதில் வாங்கி சேகரித்து கொள்ளுங்கள்
STOCKS TO WATCH
L&T
3 IN INFOTECH
RELIANCE
GLAXO SMITHKILNE
EDUCOMP
GODREJ INDUSTRIES
WESPUN GUJARAT
JAIN IRIGATION
BIOCON
HUL
JETAIRWAYS
IFCI
ADITYA BIRLA NUVA
BANK OF INDIA
HINDALCO
NALCO
ITC
HDIL
FORTIS HEALTH CARE
NAGARJUNA CONSTRUCTION
HAPPY TRADING
BULLMARKETINDIAA

பங்குகளின் சந்தை மதிப்பு பன்மடங்கு அதிகரிப்பு


முன்னணி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துள்ள 3 நிறுவனங்கள்


ஷிகா சர்மா
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
கடந்த 2000&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையில், அதாவது 10 ஆண்டுகளாக, முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் மூன்று நிறுவனங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இதற்கு, இந்த நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு பன்மடங்கு அதிகரித்ததே காரணமாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், எண்ணெய் மற்றும் துரப்பண பணிகளில் ஈடுபட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ஆகியவையே அந்த மூன்று நிறுவனங்களாகும்.
அரசியலில் ஏற்பட்ட மாற்றம், உலக அளவில் பொருளாதாரத்தில் உருவான கடும் பின்னடைவு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்நிறுவனங்கள் அவற்றின் அந்தஸ்தை நிலைநிறுத்தி, முதலீட்டாளர்களுக்கும் அதிக ஆதாயம் அளித்துள்ளன.
முதலிடம்
முதலீட்டாளர்களுக்கு அதிக ஆதாயம் அளிப்பதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்.ஐ.எல்), இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2000&ஆம் ஆண்டு ஜனவரி 3&ந் தேதி அன்று இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) ரூ.23,563.17 கோடியாக இருந்தது. இது, நடப்பு 2009&ஆம் ஆண்டு டிசம்பர் 21&ந் தேதி அன்று 14 மடங்கு அதிகரித்து ரூ3,34,097.92 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்நிறுவனப் பங்குகளின் விலை ஆண்டுக்கு சராசரியாக 30 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த 2000&ஆம் ஆண்டில், இந்தியாவின் முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த இந்நிறுவனம், தற்போது முதலிடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.3.10 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இவ்வாறு பங்குகளின் விலை உன்னதமான அளவில் அதிகரிப்பதால்தான், இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் தலைசிறந்த தலைமைச் செயல் அதிகாரிகளுள், ஐந்தாவது முன்னணி தலைமைச் செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.2.20 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அதாவது, இந்நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.30,365.26 கோடியிலிருந்து ரூ.2,51,723.91 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2000&ஆம் ஆண்டில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்நிறுவனம், தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.
இன்போசிஸ்
இதே காலத்தில், இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பும் ரூ.51,844.55 கோடியிலிருந்து 177 சதவீதம் உயர்ந்து ரூ.1,43,809.51 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2000&ஆம் ஆண்டில், முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இருந்த விப்ரோ மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் தற்போது முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பீ.எச்.இ.எல்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறாதிருந்த, பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல். நிறுவனம், தற்போது இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதற்கு, நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே காரணமாகும்.
கனரக மின் உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பீ.எச்.இ.எல். நிறுவனத்தின் செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், கடந்த 2000&ஆம் ஆண்டில் ரு.5,500 கோடியாக இருந்த இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 10 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரித்து ரூ.1,12,014.41 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
யூனிடெக்
இது மட்டுமின்றி, இப்பட்டியலில் இடம் பெறாத இதர நிறுவனங்களின் பங்குகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் யூனிடெக் நிறுவனப் பங்குகளின் விலை கடந்த 10 ஆண்டுகளில் 240 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1,000 முதலீடு செய்திருந்தால், இதன் மதிப்பு தற்போது ரூ.2,40,000&ஆக உயர்ந்து இருக்கும்.
இதே காலத்தில், கச்சா எண்ணெய் துரப்பணம் மற்றும் உற்பத்தி திட்டங்களில் டிரில்லிங் பணியில் ஈடுபட்டு வரும் அபான் ஆஃப்சோர் (166 மடங்குகள்), கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் எரா இன்ஃப்ரா இன்ஜினீயரிங் (152 மடங்குகள்), இரும்புத்தாது ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் சேசகோவா (134 மடங்குகள்), நிலக்கரி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் குஜராத் என்.ஆர்.இ. கோக் (106 மடங்குகள்) மற்றும் நவபாரத் வென்ச்சர்ஸ் (103 மடங்குகள்) ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையும் 100 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சுமார் ரூ.56.40 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ஆறு மடங்கு அதிகரித்து ரூ.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, பொருளாதார வளர்ச்சியையும் விஞ்சும் வகையில் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

பங்கு விற்பனை மூலம் ரூ.14,000 கோடி திரட்ட அரசு திட்டம்
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

தேசிய கனிமவள மேம்பாட்டு கழகம்
மும்பை என்.எம்.டீ.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய கனிமவள மேம்பாட்டு கழகம், இரும்புத் தாது உற்பத்தியில் நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளில் 8.38 சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.14,000 கோடி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்குகள் ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆக, இந்நிறுவனம் தற்போது இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
நவரத்னா நிறுவனம்
என்.எம்.டீ.சி., Ôநவரத்னாÕ அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் மத்திய அரசு தற்போது 98.38 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 1.62 சதவீத பங்கு மூலதனம் பொதுமக்களிடம் உள்ளது. இந்நிலையில் அரசு, இரண்டாவது பங்கு வெளியீட்டின் வாயிலாக மேலும் 8.38 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இப்போது என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்கு ஒன்றின் விலை சுமார் ரூ.415 என்ற அளவில் உள்ளது.
நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து இன்று வரை மத்திய அரசு மூலதனச் சந்தையில் இருந்து 180 கோடி டாலர் (சுமார் ரூ.8,400 கோடி) திரட்டிக் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில், இதுவரையிலான காலத்தில் பொதுத் துறை நிறுவனங்களான என்.எச்.பி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகியவை பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல்
இந்நிலையில் மத்திய அரசு, என்.டி.பி.சி., சட்லஜ் ஜால் வித்யூத் நிகம் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீட்டுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. செயில், ஷிப்பிங் கார்ப்பரேஷன் மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வெளியிடவும் அரசு தயாராகி உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளும் மார்ச் 31&ந் தேதிக்கு முன்னர் நிறைவடையும் எதிர்பார்க்கப்படுகிறது.


போர்டிஸ் ஹெல்த்


விரிவாக்கத்திற்காக ரூ.250 கோடி முதலீடு


மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வரும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, வரும் நிதி ஆண்டிற்குள் ரூ.250 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தாவில் 414 படுக்கைகளுடனும் பெங்களூரில் 120 படுக்கைகளுடனும் புதிதாக இரண்டு பல்துறை சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவதற்கும், மும்பையில் உள்ள மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்கும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்று ஃபோர்டிஸ் ஹாஸ்பிட்டல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால்பாலி தெரிவித்தார்.
ஃபோர்டிஸ் நிறுவனம், அண்மையில் வோக்கார்டு நிறுவனத்தை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் 39 மருத்துவமனைகளும், 5,180 படுக்கை வசதிகளும் உள்ளன.


3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2010 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது
டெல்லி: 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன், வீடியோ சாட்டிங் உள்ளிட்ட 3ஜி தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்டு, போட்டிகளின் மூலம் சுலபமாக கிடைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே இந்த அலைவரிசைகள் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தவிர்த்து மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அலைவரிசைகளை ஏலத்தில் விற்க அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, மொத்தம் நான்கு ஸ்லாட்டுகளை விற்க அரசு முடிவு செய்தது.

இதன்மூலம் ரூ.25ஆயிரம் கோடி வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ஏலத்துக்கு தடைபோட்டுக்கொண்டிருந்தது.

இதுதொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட பின், ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சம் ஒப்புதல் தந்தது.

இதையடுத்து, வரும் 2010 ஜனவரி மாதம் 14ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏலம் மேலும் ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் குறுக்கிட்டதால், திட்டமிட்டபடி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோட்டீஸ் இன்னும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எந்தெந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான பணிகள் ஜனவரி மாத மத்தியில் தான் முடிவடையும். அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏலம் நடைபெற மார்ச் மாதமாகிவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2010 மார்ச் மாதத்தில் ஏலம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

ஏலத்திற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் 500 மில்லியன்!
டெல்லி: இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்துடன் 500 மில்லியன் என்ற இலக்கைத் தாண்டியது.

தொலைபேசித் ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்படி நவம்பர் மாத முடிவில் 543.20 மில்லியன் மக்கள் இந்தியாவில் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

நவம்பர் வரை 44.87 சதவிகிதமாக இருந்த தொலைத் தொடர்பு அடர்த்தி (Teledensity), இப்போது 46.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

செல்போன் பயன்பாட்டைப் பொறுத்தவர் 506 மில்லியன் மக்கள் இணைப்புகளைப் பெற்றுள்ளனர். அதிக வாடிக்கையாளர் கொண்ட செல்போன் நிறுவனங்களில் இப்போதும் தனியார் நிறுவனமான ஏர்டெல்தான் முதலிடம் வகிக்கிறது. 116 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.

பிஎஸ்என்எல் இன்றும் நான்காவது இடத்திலேயே உள்ளது. அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 60.78 மில்லியன்.

பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் 7.40 மில்லியனிலிருந்து 7.67 மில்லியனாக உயர்ந்துள்ளது.

பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் இந்தியா
இவ்வங்கி பங்கின் விலை குறைவாக உள்ள நிலையில், செயல்திறன் சிறப்பாக உள்ளது. நீண்ட கால அடிப்படையில் இவ்வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

கரண் சேகல்
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
பேங்க் ஆஃப் இந்தியா, நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இது, பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) அடிப்படையில் மூன்றாவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாகும். சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டு வரை, அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வங்கிகளுள் ஒன்றாக இது விளங்கியது. அதேசமயம், நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இவ்வங்கி ஈட்டிய லாபம் 58 சதவீதம் குறைந்துள்ளது. இதனையடுத்து, இவ்வங்கிப் பங்கின் விலை குறைந்துள்ளது. அதேசமயம், வங்கியின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது இவ்வங்கி பங்கின் விலை நியாயமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செயல்திறன்
கடந்த 2006&07 மற்றும் 2008&09&ஆம் நிதி ஆண்டுகளுக்கிடையில் இவ்வங்கி ஈட்டிய நிகர லாபம் ஆண்டுக்கு சராசரியாக 63 சதவீதம் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இதர பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி மிகவும் உயர்ந்ததாகும்.
இதே நிதி ஆண்டுகளுக்கிடையில், இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் வரம்பு ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதர வங்கிகளுடன் ஒப்பிடும்போது இதுவும் இவ்வங்கியின் செயல்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதே காலத்தில், இவ்வங்கியின் நிகர வாராக்கடன் விகிதமும், வங்கி வழங்கிய மொத்த நிகர கடனில் 0.6 சதவீதம் என்ற அளவில் குறைவாக உள்ளது. ஆக, கடனை வசூலிப்பதிலும் வங்கி சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது.
சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில், இவ்வங்கிக்கு ஒரு பணியாளர் வாயிலாக ஈட்டப்படும் வருவாய் ரூ.8.30 கோடியாக இருந்தது. இது, பாரத ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகளைக் காட்டிலும் அதிகமானதாகும்.
வட்டி வருவாய்
சென்ற நிதி ஆண்டில் இவ்வங்கி அதிக வட்டியில் நிதியை திரட்டியது. இதனையடுத்து, நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் வரம்பு 3.2 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இவ்வங்கி ஈட்டிய லாபம் 31 சதவீதம் குறைந்துள்ளது.
அதேசமயம், இனிவரும் காலாண்டுகளில் இவ்வங்கி ஈட்டும் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் வங்கிகள் அதிக வட்டியில் டெபாசிட்டுகள் திரட்டுவதை குறைத்துக் கொண்டுள்ளன. இதனால், இனிவரும் காலாண்டுகளில் வங்கிகளின் நிகர வட்டி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் வரம்பு, முந்தைய காலாண்டைக் காட்டிலும் 0.15 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவ்வங்கியின் இதர அம்சங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, இதன் செயல்திறன் நன்றாக உள்ளது என்று கூறலாம். உதாரணமாக, சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இவ்வங்கி வழங்கிய கடன் 16.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, ஒட்டுமொத்தத்தில் வங்கிகளின் கடன் வளர்ச்சிக்கு சமமாக உள்ளது.
மதிப்பீடு
சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இவ்வங்கி ஈட்டிய லாபம் சரிவடைந்துள்ளதால், இவ்வங்கி பங்கின் விலை குறைந்துள்ளது. இவ்வாண்டு அக்டோபர் 17&ந் தேதி அன்று இவ்வங்கி பங்கின் விலை ரூ.475&ஆக இருந்தது. இது, 20 சதவீதம் குறைந்து, தற்போது ரூ.378 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. இது, ஒரு பங்கின் புத்தக மதிப்புடன் ஒப்பிடும்போது 1.7 மடங்கு என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் இந்த விகிதம் 1.9 மடங்காக உள்ளது. ஆக, வங்கியின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது இவ்வங்கி பங்கின் விலை குறைவானதாகும்.
மேலும், இவ்வங்கி பங்கின் தற்போதைய விலையில் (ரூ.378) 2.1 சதவீதம் டிவிடெண்டாக கிடைக்கிறது. இந்நிலையில், அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும், இவ்வங்கி பங்கின் விலை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, நீண்ட கால அடிப்படையில் இப்பங்குகளில் முதலீடு செய்யலாம்.
பேங்க் ஆப் இந்தியா

இவ்வங்கி பங்கின் விலை குறைவாக உள்ள நிலையில், செயல்திறன் சிறப்பாக உள்ளது. நீண்ட கால அடிப்படையில் இவ்வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

மெர்கேட்டர் லைன்ஸ்
சரக்கு கப்பல் துறையைச் சேர்ந்த இந்நிறுவனம், இதர நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதால், இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

அம்ரிதேஷ்வர் மாத்தூர்
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
இந்திய சரக்கு கப்பல் போக்குவரத்து துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக மெர்கேட்டர் லைன்ஸ் விளங்குகிறது.
கச்சா எண்ணெய்
தற்பொழுது, உலக அளவில், பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சரக்கு போக்குவரத்து துறை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வது உள்ளிட்ட இதர சரக்கு கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் விறுவிறுப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.
இந்நிறுவனம், சரக்கு கப்பல்கள் சேவை தவிர, மாற்று தொழில் நடவடிக்கையாக, கடல் பகுதிகளில் துரப்பண பணிகளை மேற்கொள்வதற்கான ரிக்குகள் மற்றும் கடல்களில் மணல் அள்ளும் கப்பல்கள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் (2009&10) முதல் ஆறு மாத காலத்தில் ஈட்டிய நிகர விற்றுமுதலில், சரக்கு கப்பல்களின் மூலமான வருவாய் 74.30 சதவீதமாக உள்ளது. கடந்த 2006&07 மற்றும் 2008&09&ஆம் ஆண்டுகளுக்கிடையில், இந்நிறுவனம் அதன் திறன் அதிகரிப்பு மற்றும் மாற்று தொழில் நடவடிக்கைகளுக்காக ரூ.4,472.40 கோடியை முதலீடு செய்துள்ளது.
இதே ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் ரொக்க வரத்து ரூ.2,882 கோடி அளவிற்கு இருந்தது. மேலும், இதே காலத்தில், இந்நிறுவனம் பெற்ற கடன்கள் 54.6 சதவீதம் அதிகரித்து ரூ.2,835.60 கோடியாக உயர்ந்துள்ளது.
நிதி நிலை
செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாப விகிதம் 26.70 சதவீதம் சரிவடைந்து, 22.7 சதவீதமாக குறைந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர விற்பனை 47 சதவீதம் குறைந்திருந்தது.
இந்த நிலையில், தற்பொழுது உலக நாடுகள் பொருளாதார சுணக்கநிலையிலிருந்து விடுபட்டு வருவதால், இனிவரும் காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் செயல்பாடு மேம்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு
மெர்கேட்டர் லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்று, தற்பொழுது ரூ.57.15 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. இது, இந்நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது 5.7 மடங்குகள் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், ஜி.இ. ஷிப்பிங் நிறுவனப் பங்கின் விலை, அதன் ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது ஆறு மடங்குகள் என்ற அளவிலும், ஷிப்பிங் கார்ப்பரேஷனின் பங்கின் விலை 11.3 மடங்குகள் என்ற அளவிலும் உள்ளது.
மேற்கண்டவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், இந்நிறுவனப் பங்குகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் டிசம்பர் வரை

புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதி ரூ.20,000 கோடி இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில், 21 இந்திய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக ரூ.20,000 கோடி திரட்டியுள்ளன.
50 சதவீத நிறுவனங்கள்
இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், நடப்பு ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டில் இறங்கிய நிறுவனங்களுள், 50 சதவீத நிறுவனங்களின் பங்குகள், அவற்றின் வெளியீட்டு விலையை விட குறைவாகவே தற்போது கைமாறி வருகின்றன. இவ்வாண்டில், பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களுமாக மேற்கொண்ட 21 புதிய பங்கு வெளியீடுகளில், அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய சில்லரை முதலீட்டாளர்கள் கைவசம் உள்ள பங்குகளின் மதிப்பு ஒட்டுமொத்த அளவில் இப்போது ரூ.20 கோடிதான் உயர்ந்துள்ளது. அதாவது, சில்லரை முதலீட்டாளர்கள் தங்கள் கைவசம் உள்ள அனைத்து பங்குகளையும் தற்போது விற்பனை செய்தால் மொத்தத்தில் ரூ.20 கோடியே லாபமாக கிடைக்கும்.
புதிய வெளியீடுகள்
சென்ற 2008&ஆம் ஆண்டு முழுவதுமே பங்கு வர்த்தகத்திற்கு மிகவும் சோதனையான காலமாக இருந்தது. சில நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் படுதோல்வியைச் சந்தித்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் மூலதனச் சந்தையில் களம் இறங்க தயக்கம் காட்டின. எனினும் அவ்வாண்டில் 30 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் வாயிலாக நிறுவனங்கள் மொத்தம் ரூ.17,000 கோடி திரட்டின. அதே சமயம், முந்தைய 2007&ஆம் ஆண்டில் சுமார் 100 புதிய பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்ட தொகை ரூ.32,000 கோடிக்கும் அதிகமான அளவில் இருந்தது. பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு, கடந்த 2007&ஆம் ஆண்டில் நாட்டின் பங்கு வர்த்தகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டிருந்தது.
முன்னேற்றம்
பங்குச் சந்தைகளில் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்த நிலையில் 2009&ஆம் ஆண்டு பிறந்தது. மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டு நடவடிக்கை கள் மீண்டும் விறுவிறுப்படைந்தன. என்.எச்.பி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகிய பொதுத் துறை நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி வெற்றிகரமாக நிதி திரட்டிக் கொண்டன.
மேலும் பல பொதுத் துறை நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களமிறங்க தயாராகி வருகின்றன. பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாண்டில் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்குகளின் விலை, தற்போது அதன் வெளியீட்டு விலையைக் காட்டிலும் உயர்ந்துள்ளது.
இதே போன்று மகிந்திரா ஹாலிடே ரிசார்ட்ஸ் மற்றும் காக்ஸ் அண்டு கிங்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களின் பங்குகளும் அவற்றின் வெளியீட்டு விலையைக் காட்டிலும் ஓரளவு உயர்ந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு இப்பங்குகள் ஆதாயமளிப்பவையாக உள்ளன. அதே சமயம் அண்மைக் காலத்தில் பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாகவே இப்பங்குகளின் விலை உயர்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஏனென்றால் இப்பங்குகள் பட்டியலிடப்பட்டபோது எதிர்பார்த்த அளவிற்கு இவற்றின் மதிப்பு உயரவில்லை. வெளியீட்டு விலையைக் காட்டிலும் தற்போது பங்கின் விலை அதிகரித்துள்ள நிறுவனங்களுள் எட்சர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ், திங்க்சாஃப்ட் போன்ற சில சிறிய நிறுவனங்களும் அடங்கும்.
என்.எச்.பி.சி.
அதே சமயம் பொதுத் துறையைச் சேர்ந்த என்.எச்.பி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் வெளியீட்டு விலையை காட்டிலும் குறைவாகவே விலை போய்க் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களுள் எக்செல் இன்ஃபோவே, அதானி பவர், குளோபஸ் ஸ்பிரிட்ஸ், பிபாவவ் ஷிப்யார்டு, ஈரோ மல்டிவிஷன், இந்தியாபுல்ஸ் மற்றும் டென் நெட்ஒர்க்ஸ் ஆகியவையும் அடங்கும். பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டின் போது பங்கின் வெளியீட்டு விலையை அளவுக்கதிகமாக நிர்ணயம் செய்ததுதான் தற்போது விலை சரிவடைந்து போனதற்கு முக்கிய காரணம் என ஸ்பைஸ் குழுமத்தின் நிதிச் சேவைகள் வணிகப் பிரிவின் தலைவர் சுதீப் பண்டாபாத்யாயா தெரிவித்தார்.
உலக பொருளாதாரம்
புத்தாண்டில், உலக பொருளாதாரம் முழுமையாக வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ளும் வகையில் மூலதனச் சந்தையில் இறங்க உள்ளன. குறிப்பாக அடுத்த ஆண்டில் பல பொதுத் துறை நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளன. இதனால் 2010&ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகத்தில் எழுச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
சில்லரை முதலீட்டாளர்கள் மீண்டும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் நிறுவனங்கள் பங்கின் வெளியீட்டு விலையை குறைவாக நிர்ணயம் செய்தாலே சில்லரை முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்க முடியும். பங்கு வர்த்தகம் சோம்பிக் கிடந்த 2008&ஆம் ஆண்டிலும் இதே கருத்தைத்தான் ஆய்வாளர்கள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கின் வெளியீட்டு விலையைக் குறைவாக நிர்ணயிக்கும் பட்சத்தில், நிறுவனங்கள் திரட்டும் நிதி சற்று குறையலாம். ஆனால், பங்குகளில் முதலீடு செய்துள்ளோருக்கு அவை பெரும்பாலும் தகுந்த ஆதாயம் அளிப்பவையாக இருக்கும். இல்லையென்றால் நிறுவனங்கள் திரட்டி கொள்ளும் நிதிக்கும், அந்த நிறுவனங்களின் பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்புக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்படும்.

ஆப்பிள் நிறுவன தலைவரின் ஆண்டு ஊதியம் 1 டாலர் சியாட்டில் : ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், 2009ல் தனது ஆண்டு சம்பளமாக 1 டாலரை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார். அதேபோல வருடாந்திர போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் 2009ம் ஆண்டு அவருக்கு தரப்படவில்லை. ஆப்பிள் நிறுவனத்தை 1976ல் நிறுவியவர் ஜாப்ஸ்.இடையில் இந்த நிறுவனத்திலிருந்து விலகியவர், 1997ல் மீண்டும் இணைந்தார். அன்று முதல் தனது சம்பளமாக ஆண்டுக்கு 1 டாலரை மட்டுமே பெறுகிறார் ஜாப்ஸ்.
உலகின் டாப் சிஇஓ என ஹார்வர்டு பிஸினஸ் ரிவிவ் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், 2009ம் ஆண்டு தனது பயணப்படியாக 4000 டாலரை மட்டுமே பெற்றுள்ளார். இதற்கு முந்தைய ஆண்டில் இவர் பெற்ற பயணப்படி 8,71,000 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஸ்டீவ் தலைமையில் இயங்கும் மற்ற நிர்வாகிகள் நால்வருக்கு தலா 1 லட்சம் டாலர் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 5.5 மில்லியன் பங்குகள் உள்ளன. இது தவிர, வால்ட் டிஸ்னியிலும் அவருக்கு 7.4 மில்லியன் பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டும் 4.5 பில்லியன் டாலர்கள். ஸ்டீவின் காலத்தில்தான் ஆப்பிள் பங்குதாரர்களுக்கு மிக அதிகபட்ச வருவாய் கிடைத்தது.

மார்ச் மாதத்திற்குள் 25,000 ஏடிஎம்.,கள் : ஸ்டேட் பேங்க்
நெல்லை: வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25,000 ஏடிஎம்களை திறக்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார பொது மேலாளர் விஜி கண்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது இத்தகவலை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது : தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் கடந்த 2 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர ஒவ்வொரு கிளையும் ஆண்டுக்கு இரு குழந்தைகளை தத்தெடுத்து கல்வி செலவை அளித்து வருகின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25 ஆயிரம் ஏடிஎம்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 1,388 ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பயோ மெட்ரிக் எடிஎம்களை திறக்கவும் வங்கி ஏற்பாடு செய்து வருகிறது. இம்முறையில் வாடிக்கையாளர்கள் தங்கள் கைரேகையை ஏடிஎம்மில் பதிவு செய்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். ஒருவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பணம் எடுக்க முடியாது. ஏற்கனவே இத்தகைய ஏடிஎம் சென்டர்கள் மதுரை, மேலூர், செய்யாறு ஆகிய இடங்களில் திறக்கப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏடிஎம்மில் பணம் எடுக்க பழகி கொள்ள வேண்டும். மாதத்தின் முதல் வாரத்திலேயே மொத்த பணத்தையும் எடுக்க முயற்சிக்க கூடாது. ஏனெனில் ஒரு மிஷினில் ரூ.32 லட்சம் மட்டுமே வைக்க முடியும் என்றார்.

அனைவருக்கும் திருப்தியை தந்த 2009ம் ஆண்டு
Posted by bullmarketindiaa on December 27, 2009

சந்தை புதிராக இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு லாபமாகவே இருந்து வருகிறது. சங்கீத சீசனில் காதில் இசை என்ற இன்ப வெள்ளம் தான் தேனாக ஓடும். ஆனால், இந்த குளிர் சீசனிலும், சந்தை கதகதவென இருக்கிறது.
இது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியையே தருகிறது. இந்த வருடம் முதலீட்டாளர்களுக்கு நல்ல தீபாவளியாகவும், நல்ல வருடமாகவும் இருந்து வந்திருக்கிறது. புதனின் அசாத்திய ஏற்றத்தை தொடர்ந்து, வியாழனும் ஏற்றத்திலேயே முடிந்தது.

உச்சத்தில் இருந்த சந்தை: புதனன்று 539 புள்ளிகள் பெற்று உச்சத்தில் இருந்த சந்தை, தொடர்ந்து வியாழன்றும் 129 புள்ளிகள் உயர்விலேயே முடிவடைந்தது. இது, மும்பை பங்குச் சந்தையை, 17,360 புள்ளி என்ற அளவிற்கு கொண்டு சென்றது. இது, பங்குச் சந்தையின் கடந்த 19 மாத உச்சம். மும்பை பங்குச் சந்தை இதுவரை, 80 சதவீத லாபத்தை இந்த வருடத்தில் தந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை, 5,178 புள்ளிகளில் முடிவடைந்தது.

புதிய வெளியீடுகள்: பெரிய வெளியீடுகள் வந்திருந்தாலும், அது முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான பெரிய பயனையும் தரவில்லை. ஆங்கர் முதலீட்டாளர்கள் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. அதுவும் பெரிதாக எவ்வித பயனையும் தரவில்லை. 2010ல் பல புதிய வெளியீடுகள் வரக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவை, முதலீட்டாளர்களுக்கு எப்படி லாபங்களை தரப்போகிறது என்று பார்ப்போம்.

சாப்ட்வேர் பங்குகளும் சந்தையும்: சந்தை இந்த வருடம் நன்கு முன்னேற, சாப்ட்வேர் பங்குகளும் ஒரு காரணம். சந்தை கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகமாகி இருப்பதற்கு, பல சாப்ட்வேர் பங்குகள் 100 முதல் 300 சதவீதம் வரை கூடியுள்ளதே காரணம்.

வீட்டுக் கடன்கள்: வீட்டுக் கடன்கள் மிகக் குறைந்த வட்டியில் கிடைக்கின்றன. அதாவது 8 சதவீத வட்டியில் பல வங்கிகள், கம்பெனிகள் அளிக்கின்றன. இது தான் வீட்டுக் கடன் வாங்க நல்ல சமயம்.

ஆனால், வீடு வாங்க நல்ல சமயமா என்று யோசிக்க வேண்டும். வீடுகள் விலை கடந்த ஒரு வருடத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை கூடியுள்ளது. பொருளாதாரம் நிலையாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கூடும் வாய்ப்புகளும் உள்ளது.

உள்ளே வரும் வெளிநாட்டு முதலீடுகள்: அதிகமாக வரும் வெளிநாட்டு முதலீடுகள் தான் சந்தையின் தொடர் ஏற்றத்துக்கு காரணம். கடந்த நவம்பரில் மட்டும் 174 கோடி ரூபாய் வந்துள்ளது. இது, கடந்த வருட நவம்பர் மாதத்தை விட 60 சதவீதம் கூடுதல்.

மியூச்சுவல் பண்ட்களின் புதிய வெளியீடுகள்: ஏஜன்டுகளுக்கு கமிஷன் குறைந்ததால், மியூச்சுவல் பண்ட்களின் புதிய வெளியீடுகள், கடந்த காலத்தைப் போல பணங்களைச் சேர்க்க முடியவில்லை. கடந்த மூன்று மாதத்தில் வெளியான வெளியீடுகள் சேர்த்த பணம், இதற்கு முன் வெளியான வெளியீடுகளை விட பாதி குறைந்துள்ளது.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : இது, இந்த வருடத்தின் கடைசி வாரம். சிறிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால், சந்தையின் 2009 முடிவு, எல்லாருக்கும் திருப்திகரமாகவே இருக்கும்; இருந்திருக்கும்.

- சேதுராமன் சாத்தப்பன் –

பங்கு வர்த்தகம் வீழ்ச்சியிலிருந்து எழுச்சி
நடப்பு 2009&ஆம் ஆண்டில் Ôசென்செக்ஸ்Õ 80% வளர்ச்சி

பார்கவ் திரிவேதி
அகமதாபாத்
நடப்பு 2009&ஆம் காலண்டர் ஆண்டில், டிசம்பர் 24&ந் தேதி வரையிலான காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ 80 சதவீதம் வளர்ச்சி கண்டு 17,360.61 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. சென்ற 2008&ஆம் ஆண்டின் இறுதி வர்த்தக தினத்தன்று இது 9,647.31 புள்ளிகளாக இருந்தது.
முதலீட்டாளர்கள்
கடந்த 2000&ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு Ôசென்செக்ஸ்Õ தற்போதுதான் ஒரே ஆண்டில் இந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். நடப்பு 2009&ஆம் ஆண்டில், இன்னும் மூன்று வர்த்தக தினங்களே உள்ளன.
நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக ஆதாயம் அளிப்பதில் ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டில், இதுவரையிலான காலத்தில், சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகத்தில் முறையே 73 சதவீதம், 50 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்திய பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் இவைகளையும் விஞ்சி உள்ளது.
பங்குகளின் சந்தை மதிப்பு
இந்தியாவிலுள்ள பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்), நடப்பு 2009&ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.29.61 லட்சம் கோடியிலிருந்து ரூ.60.16 லட்சம் கோடியாக (1.28 லட்சம் கோடி டாலர்) உயர்ந்துள்ளது.
இவ்வாண்டில், இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக மே 18&ந் தேதி அன்று, பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட எல்லை மீறிய வளர்ச்சியால், பங்கு வர்த்தகம் தடைபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் Ôசென்செக்ஸ்Õ 2,111 புள்ளிகள் அதிகரித்தது. அன்றைய தினத்தில் பங்கு வியாபாரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத எழுச்சியால், முதலீட்டாளர்களின் பங்குகளின் சந்தை மதிப்பு சராசரியாக ஒரு வினாடிக்கு ரூ.10,000 கோடி அதிகரித்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த 2008&ஆம் ஆண்டில், ஏற்பட்டிருந்த கடும் வீழ்ச்சியிலிருந்து, இந்திய பங்கு வர்த்தகம் அதிவேகமாக மீண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய நிறுவனப் பங்குகளில் ரூ.80,500 கோடி முதலீடு செய்துள்ளன. இந்திய பங்குச் சந்தை வரலாற்றில், ரூபாய் மதிப்பு அடிப்படையில், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்த ஆண்டில்தான் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2008&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அமெரிக்காவின் ஐந்தாவது மிகப் பெரிய முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸ் திவால் ஆனதையடுத்து, சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி உச்சநிலையை அடைந்தது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகளில் செய்திருந்த முதலீடுகளை விலக்கி கொண்டன. சென்ற 2008&ஆம் ஆண்டில் இந்நிறுவனங்கள் ரூ.52,900 கோடி மதிப்பிற்கு பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டை விலக்கி கொண்டன.
பொருளாதாரம்
இவ்வாறு முதலீடுகளை விலக்கி கொள்ளும் நிலை இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்கள் வரை நீடித்தது. மார்ச் மாத இறுதியிலிருந்து முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், அன்னிய நிதி நிறுவனங்கள் இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் ரூ.31,000 கோடி முதலீடு செய்துள்ளன. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.34,313 கோடி முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகள், பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு சலுகைத் திட்டங்களை வழங்கியதையடுத்து, அந்நாடுகளில் பணப்புழக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்களுக்கு அதிக நிதி கிடைக்கிறது.
நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால, வரும் 2010&ஆம் ஆண்டிலும் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என புதுடெல்லியைச் சேர்ந்த எஸ்.எம்.சி. கேப்பிட்டல்ஸ் நிறுவனத்தின் தலைவர் (நிறுவனப் பங்குகள்) ஜெகன்னாதம் துணு குண்டலா தெரிவித்தார்.
22,000 புள்ளிகள்
நாட்டின் பங்கு வர்த்தகத்தின் வளர்ச்சி குறித்து ஃபர்ஸ்ட்கால் இந்தியா ஈக்விட்டி அட்வைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் (இந்தியா) வி.வி.எல்.என். சாஸ்திரி தெரிவிக்கையில், Òஇந்தியாவில் வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதனால்தான் உலக பொருளாதாரம் உருக்குலைந்த போதும், இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாண்டில் 8,000 புள்ளிகளாக சரிவடைந்திருந்த Ôசென்செக்ஸ்Õ 17,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வரும் 2010&ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் Ôசென்செக்ஸ்Õ அதிகபட்சமாக 22,000 புள்ளிகளை எட்டும். இதில் சற்று சரிவு ஏற்பட்டாலும், அது நிரந்தரமாக இருக்காது. ஏனென்றால், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளனÓ என்று தெரிவித்தார்.

டிஸ்னி நிறுவன ஊழியர்களின் சம்பளம் 28% குறைப்பு
நியூயார்க் : பொருளாதார நெருக்கடி காரணமாக வால்ட் டிஸ்ட் நிறுவன ஊழியர்களின் சம்பளம் இந்த ஆண்டு 29 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 28 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நிறுவன தலைவர் ராபர்ட் ஐகர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 3ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டில் ராபர்ட், 29.03 அமெரிக்க டாலர்களை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளார். கடந்த ஆண்டு சம்பளத் தொகையான 30.62 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 28 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 13.95 டாலர்கள் ஊக்கத் தொகை பெற்றதாகவும், இந்த ஆண்டு9.26 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைந்தது
அமெரிக்காவில், சென்ற டிசம்பர் 19&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை, அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் 28,000 குறைந்து 4,52,000&ஆக சரிவடைந்துள்ளது. முந்தைய வாரத்தில் இது 4,80,000&ஆக இருந்தது. இது, அமெரிக்க பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
சென்ற 2008&ஆம் ஆண்டில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வந்தன. இதனால், பல லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம் உயர்ந்து வந்தது.
இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், அந்நாட்டு நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. இதனால்தான், சென்ற சில வாரங்களாக பலருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, சென்ற அக்டோபர் மாதத்தில் 10.2 சதவீதமாக இருந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை விகிதம், நவம்பர் மாதத்தில் 10 சதவீதமாக குறைந்துள்ளது.

2,300 பேரை நீ்க்குகிறது ஏஓஎல்!நியூயார்க்: அமெரிக்கன் ஆன்லைன் எனப்படும் ஏஓஎல் நிறுவனம், செலவுக் குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2300 பணியாளர்களை நீக்குகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் மட்டும் 200 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த முடிவு செய்துள்ளது ஏஓஎல். கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய நாள் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்த முறையான தகவல்களை அமெரிக்க பங்கு கட்டுப்பாட்டு மையத்திடமும் அளித்துள்ளது ஏஓஎல்.

சமீபத்தில்தான் ஏஓஎல் நிறுவனம் முழுமையான, தனி நிறுவனமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின் நடந்த முதல் இயக்குநர் குழு கூட்டத்தில் அதன் சிஇஓ டிம் ஆம்ஸ்ட்ராங் பங்கேற்றார்.

ஏஓஎல் நிறுவனத்தில் இப்போது 7000 பேர் பணியில் உள்ளனர். நிறுவனத்தை மறு நிர்மாணம் செய்யும் நோக்கில் இவர்களில் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களை நீக்குவதோடு, பல ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

சென்னையில் டாடா உருவாக்கும் ராமானுஜம் ஐடி சிட்டி
மும்பை: சென்னை யில் ரூ 3500 கோடி முதலீட்டில் ‘ராமானுஜம் ஐடி சிட்டி’ எனும் புதிய வளாகத்தை உருவாக்குகிறது டாடா நிறுவனம்.

டாடா ரியல்டி அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடட் (TRIL) உருவாக்கும் இந்த ராமானுஜம் ஐசி சிட்டி, சென்னை தரமணி அருகே 26 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. குடியிருப்புகள், மார்க்கெட் என அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த வளாகம் உருவாகிறது.

டிட்கோ மற்றும் இந்திய ஓட்டல்கள் நிறுவனமும் டாடாவுடன் இணைந்து இந்த ஐடி வளாகத்தை உருவாக்குகின்றன. கணித மேதை ராமானுஜத்தை கவுரவப்படுத்தும் வகையில் அவர் பெயரால் இந்த வளாகம் அமைந்துள்ளதாக டாடா நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சர்வதேசத் தரத்தில் உருவாகும் இந்த வளாகத்தில் உள்ள குடியிருப்புகள் கேம்பிரிட்ஜ் கிரீன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளன. மொத்தம் 150 ஃப்ளாட்டுகள் கொண்ட இந்த குடியிருப்புப் பகுதி, மே 2010-ல் பயன்பாட்டுக்கு தரப்படும். ஒவ்வொன்றும் 2000 முதல் 3000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளன.

‘சென்னை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு ஐடி நகரமாகிவிட்டது. மிக நவீன வீடு தேடுவோர் அதிகரித்துவரும் நிலையில், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த ராமானுஜம் ஐடி சிட்டி அமைக்கப்பட்டுள்ளது’ என TRIL நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் உபேல் தெரிவித்தார்.

இந்த வளாகத்தினை நியூயார்க் நகரைச் சேர்ந்த ஸ்கிட்மோர் ஓவிங்ஸ் மற்றும் மெர்ரில் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

2010ல் ஐடி துறையில் காத்திருக்கும் 50,000 புதிய வேலைகள்!
பெங்களூர்: கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய ஐடி துறையில் ஆட்கள் தேவை அறிவிப்புகள் எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் மிகவும் மங்கிக் காணப்படும் இந்த சூழலிலும் இந்தியாவில் மட்டும் 50000 புதிய பணிகள் ஐடி துறையில் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

வருகிற 2010-ம் ஆண்டு இந்த பணிகளுக்கான நியமனங்கள் நடக்கும் என்கிறார் லீடர்ஷிப் கேபிடல் சிஇஓ மூர்த்தி.

“2007-ல்தான் இந்திய ஐடி துறை அதிகபட்சமாக 3 லட்சம் இளைஞர்களை பணியமர்த்தியது. அதற்கடுத்த ஆண்டு 1.8 லட்சம் இளைஞர்கள் எடுக்கப்பட்டனர். 2009-ல் வேலை நியமனங்களை விட வேலை இழப்புகள் அதிகமாக இருந்தன.

ஆனால் 2010-ல் அதிகளவு வேலைவாய்ப்புகள் ஐடி துறையில் காத்திருக்கிறது” என்கிறார் மூர்த்தி. முதல் காலாண்டில் சற்று குறைவான வாய்ப்புகள் வந்தாலும், இரண்டாம் காலாண்டில் அதிக அளவு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள்” என்கிறார் இவர்.

ஆட்அஸ்த்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிருபமா, இப்படிச் சொல்கிறார்: “இதற்கு முந்தைய ஆண்டுகளில் காணப்பட்ட சுணக்க நிலையை விரட்டும் வகையில், சுனாமியாய் வரப் போகின்ற புதிய வேலை வாய்ப்புகள். இப்போதே பல நிறுவனங்கள் பெரிய அளவில் ஆளெடுப்புக்கு தயாராகி வருவதை நான் அறிவேன்” என்கிறார்.

“2010-ஐப் பொறுத்தவரை இந்திய இளைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க ஆண்டாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அல்ல… திறமையாளர்களுக்கு மட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்கிறார் சென்டியன்ட் கன்ஸல்டிங் சிஇஓ.