பெட்ரோல்-ரூ.3 , டீசல்-ரூ.2, சிலிண்டர்-ரூ.50 விலை உயர்கிறது

வியாழன், 11 பிப்ரவரி, 2010

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3ம், டசல் ரூ.2ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.50ம் உயர்த்தப்படும் என தெரிகிறது. இந்த வாரத்திலேயே மத்திய அமைச்சரவை கூடி இதுபற்றி இறுதி முடிவெடுக்க உள்ளது.

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயம் குறித்து கிரித் பாரிக் கமிட்டி அளித்த அறிக்கையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அடுத்த சில நாட்களில் அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய இக்கமிட்டியின் பிரிந்துரைகள் குறித்து பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கிரித் பாரிக் கமிட்டி அறிக்கையை பெட்ரோலிய அமைச்சகம், மத்திய அமைச்சரவையின் முன் வைக்கும்.

இந்த வாரத்திலேயே தாமதமின்றி அறிக்கையை அமைச்சரவையின் முன் சமர்ப்பித்து விடுவோம் என பெட்ரோலியத் துறை செயலாளர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு பற்றிய இக்கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து அரசு வட்டாரங்களிலேயே பல்வேறு தகவல்கள் நிலவுகின்றன.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய வகையில் சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணை விலையை உயர்த்த காங்கிரஸ் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

கிரித் பாரிக் பரிந்துரைப்படி சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100ம், மண்எண்ணை லிட்டருக்கு 6ம் உயர்த்தினால், சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையாக அது அமையும் என கருதப்படுகிறது.

ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மட்டும் தவிர்க்கமுடியாதாக இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.100க்கு பதில் 50 ரூபாய் உயர்த்தலாம் என பெட்ரோலிய அமைச்சகம் தரப்பில் வழங்கப்பட்ட ஆலோசனையை பிரதமர் மன்மோகனும் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

எனினும் இதுகுறித்த இறுதி முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் தான் மேற்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல் டீசல் மற்றும் மண்எண்ணை விற்பனையில் தற்போது நாளொன்றுக்கு ரூ.180 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் முழுவதும் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் மொத்தமாக சுமார் ரூ.46 ஆயிரத்து 30 கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளது.

இந்த சுமையை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டாத வகையில் புதிய நிவாரண திட்டங்கள் எதையேனும் வகுக்க முடியுமா எனவும் மத்திய அரசு சிந்தித்து வருகிறது.


நடப்பு 2010&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்


தனியார் பங்கு முதலீடு மற்றும் இணைத்தல் ஒப்பந்தங்களின் மதிப்பு 2 மடங்கு உயர்வு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த பின்னடைவால், இந்தியாவில் தனியார் பங்கு முதலீடு குறைந்து வந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்த முதலீடு சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
நிறுவன பங்குகள்
சென்ற 2009&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் 19.10 கோடி டாலர் (சுமார் ரூ.880 கோடி) முதலீடு செய்து இருந்தன. இது, இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் 2 மடங்கு அதிகரித்து 38.60 கோடி டாலராக (சுமார் ரூ.1,776 கோடி) உயர்ந்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளிடமிருந்தும் மற்றும் அதிக நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்களிடமிருந்தும், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நிதி திரட்டி, அந்த நிதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன. தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், ஒரு துறைக்கு உள்ள வளமான வர்த்தக வாய்ப்பு, நிறுவனங்களின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சீர்தூக்கி பார்த்து அதன் அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்கின்றன. முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன.
அடிப்படை கட்டமைப்பு வசதி
எனவே, இந்நிறுவனங்கள் எந்தத் துறையில் அதிகமாக முதலீடு செய்கிறதோ, அந்த துறை வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று கருதலாம். சென்ற ஜனவரி மாதத்தில், இந்நிறுவனங்கள் வாயிலாக அதிக முதலீடுகளை பெற்றுள்ளதில் அடிப்படை கட்டமைப்பு வசதித் துறை முதலிடத்தில் உள்ளது. இத்துறையில், இந்நிறுவனங்கள் 6.10 கோடி டாலர் (சுமார் ரூ.281 கோடி) மதிப்பிற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.
சாலை போக்குவரத்து
பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழும் சாலை போக்குவரத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், இத்துறையில் ரூ.22.50 லட்சம் கோடி மதிப்பிற்கு முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய திட்டக்குழு தெரிவித்துள்ளது.
இதனால்தான், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.
அடிப்படை கட்டமைப்பு வசதி துறைக்கு அடுத்தபடியாக, ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் அதிக அளவில் தனியார் பங்கு முதலீட்டை ஈர்த்துள்ளன. இத்துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 5.90 கோடி டாலராக (சுமார் ரூ.272 கோடி) உள்ளது.
இந்தியாவில் தொலை தொடர்பு துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. செல்போன் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மாதந்தோறும் வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இத்துறை நிறுவனங்களில், சென்ற ஜனவரி மாதத்தில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் 5.80 கோடி டாலர் (சுமார் ரூ.267 கோடி) மதிப்பிற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த முதலீட்டில், இந்த மூன்று துறைகளும் ஈர்த்த தொகை 45 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைத்தல் நடவடிக்கைகள்
சென்ற ஜனவரி மாதத்தில், இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பும், 2009&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்வகை ஒப்பந்தங்களின் மதிப்பு 126 சதவீதம் உயர்ந்து 280 கோடி டாலராக (ரூ.12,880 கோடி) அதிகரித்துள்ளது. ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து 32&லிருந்து 53&ஆக வளர்ச்சி அடைந்துள்ளது.
எளிதில் சாதனை
ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்துவதால், சர்வதேச அளவில் வலுவாக காலூன்ற முடியும். புதிதாக ஒரு துறையில் களமிறங்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே அத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தை இணைத்துக் கொள்வதால், அத்துறையில் எளிதில் சாதனை படைக்க முடியும்.
கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் இணைத்தல் நடவடிக்கைகளும் அடங்கும்.
நான்கு மடங்கு உயர்வு
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், உள்நாட்டு நிறுவனங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, சென்ற ஆண்டின் ஜனவரி மாதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கிற்கு மேல் அதிகரித்து 58.90 கோடி டாலரிலிருந்து (ரூ.2,709 கோடி) 230.30 கோடி டாலராக (ரூ.10,594 கோடி) உயர்ந்துள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்தத்தில், தொலை தொடர்பு, சரக்கு போக்குவரத்து, வங்கி, நிதி மற்றும் காப்பீடு ஆகிய சேவைத் துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கிடையில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எல் & டி இன்போடெக்


பங்கு வெளியீட்டில் களம் இறங்க திட்டம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் சேவை அளிப்பு துறையில் ஈடுபட்டு வரும் எல் & டி இன்ஃபோடெக் நிறுவனம், பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் கடந்த 2008&ஆம் ஆண்டில் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடிவு செய்திருந்தது. ஆனால், சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால் அத்திட்டத்தை ஒத்திப்போட்டது.
தற்பொழுது, உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால், இந்நிறுவனம் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுதிப் பானர்ஜி தெரிவித்தார்.
நிறுவனம், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலுமாக அதிக அளவில் ஆர்டர்களை பெற்று வருகிறது. மேலும், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் திட்டப்பணிகளை அமல்படுத்தும் வகையில் ஏலப்புள்ளிகளில் கலந்து கொள்கிறது. நிறுவனம், ரூ.5&25 கோடி மதிப்பிற்கான திட்டங்களிலும் பங்கேற்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல் & டி இன்ஃபோடெக் நிறுவனம், ரயில்வே, மின்சாரம், கல்வி என பல்வேறு துறைகளுக்கான சாஃப்ட்வேர் தீர்வுகளை வழங்கி வருகிறது.

மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி உபரி நிதி ரிசர்வ் வங்கியில் இருப்பு

மத்திய அரசு, அதன் செலவினம் போக எஞ்சியுள்ள தொகையை பாரத ரிசர்வ் வங்கியிடம் ரொக்கமாக இருப்பு வைக்கிறது. இந்த வகையில், சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில், இவ்வங்கியில் மத்திய அரசு வைத்துள்ள இருப்பு நிதி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் முறையே ரூ.69,391 கோடி மற்றும் ரூ.58,460 கோடியாக இருந்த இந்த உபரி நிதி, டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் ரூ.1,03,438 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனை குறைக்கும் வகையில், மத்திய அரசு செலவினங்களை கட்டுக்குள் வைத்து வருகிறது. இதனால்தான் பாரத ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு வைத்துள்ள இருப்பு நிதி மிகவும் உயர்ந்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் 2012&ஆம் ஆண்டிற்குள்


இந்தியா, உருக்கு உற்பத்தியில் இரண்டாவது இடம் பிடிக்கும்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, வரும் 2012&ஆம் ஆண்டிற்குள், உருக்கு பொருள்கள் உற்பத்தியில், உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் வீரபத்ரசிங் தெரிவித்தார்.
5.70 கோடி டன்
இந்தியாவில், தற்போது ஆண்டுக்கு 5.70 கோடி டன் உருக்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வகையில், உலக அளவில் தற்போது இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன. இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நம் நாட்டில் உருக்கு உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உள்ளது.
இது குறித்து வீரபத்ரசிங் கூறும்போது, Òவரும் 2012&ஆம் ஆண்டிற்குள் நாட்டின் உருக்கு உற்பத்தியை 12.40 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியா உருக்கு உற்பத்தியில் தலைசிறந்து விளங்குவதுடன், சர்வதேச அளவில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளையும் விஞ்சி இரண்டாவது இடத்தை பிடிக்கும். இந்தியாவில் உருக்கு பயன்பாடும் வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறதுÓ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் புதிதாக உருக்குத் தொழிற்சாலைகளை உருவாக்குவதற்காக, நிறுவனங்கள் 8,000 கோடி டாலர் (ரூ.3,68,000 கோடி) மதிப்பிற்கு முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்து வருகின்றன. இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், உருக்கு உற்பத்தியில் பெரும் எழுச்சி ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Ôசெயில்Õ நிறுவனம்
இந்தியாவில் உருக்கு உற்பத்தியில் பொதுத் துறையைச் சேர்ந்த Ôசெயில்Õ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், அதன் உருக்கு பொருள்கள் உற்பத்தியை 100 சதவீதம் அதிகரித்து 3 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதுபோன்று மேலும் பல நிறுவனங்களும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி உள்ளன. உருக்கு பொருள்கள் உற்பத்தி அதிகரிப்பதால், நாட்டின் தொழில் துறை மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும்.


அரசு அதிகாரிகள் சூட்கேஸ் வாங்க, ரூ 5000 அலவன்ஸ்!!
சென்னை: அரசு உயர் அதிகாரிகள் சூட்கேஸ் வாங்கிக் கொள்வதற்கான தொகை ரூ.440 லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.​

தலைமைச் செயலகத்தில் சார்புச் செயலாளர் முதல் கூடுதல் செயலாளர் நிலைக்கு மேல் உள்ளவர்களுக்கு வரை இந்தச் சலுகை பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்,​​ அதிகாரிகளுக்கு பல்வேறு படிகள்,​​ சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.​ அவற்றில்,​​ எழுதுபொருள்,​​ சூட்கேஸ் போன்ற பொருள்கள் வாங்குவதற்கான படிகளும் அடங்கும்.

அரசு அதிகாரி ஒருவருக்கு சூட்கேஸ் பெற்றுக் கொள்வற்கான தொகை ரூ.440 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.​ இந்தத் தொகை இப்போது அதிகாரிகளின் தகுதி நிலைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.

சூட்கோஸ் அலவன்ஸ் பெறும் அதிகாரிகள் யார் யார்?

சார்பு,​​ ​ துணைச் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரமும்,​​ இணை,​​ கூடுதல் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.3,500-ம் வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

கூடுதல் செயலாளர் நிலையில் மேல் உள்ளவர்களுக்கு இத் தொகை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சூட்கேஸ் வாங்கிக் கொள்ள ஒரு அதிகாரிக்கு ரூ.440 என்கிற உச்ச வரம்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.​ இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஒரு அதிகாரி சூட்கேஸ் வாங்கியதற்கான தகவல் அவரது பணி பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.​ சூட்கேஸை ரிட்டயர் ஆன பிறகும் வைத்துக் கொள்ளலாம்.​ அதில்,​​ ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கான செலவை சம்பந்தப்பட்ட அதிகாரியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.​

ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு அதிகாரி ஒருவர் மாற்றப்படும்போது,​​ சூட்கேஸ் பெற்றுக் கொண்டதற்கான தகவலை அவர் மாற்றப்படும் துறையிடம் சம்பந்தப்பட்ட துறை தெரிவிக்க வேண்டுமாம்.

4ஜி மொபைல் சேவைக்கான பணிகளை துவக்கியது 'டிராய்'
டெல்லி: 3ஜி மொபைல் சேவைக்கான அலைக்கற்றை ஏலம் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்ட தொழில்நுட்பமான 4ஜி தொலைத்தொடர்பு சேவை குறித்த பரிசீலனையை டிராய் அமைப்பு துவக்கியுள்ளது.

3ஜி சேவையை மிஞ்சும் வகையில் வைஃபை மற்றும் வைமேக்ஸ் கலவையுடன், மிகத்துல்லியமான வீடியோ, அதிவிரைவான டிஜிட்டல் பரிமாற்றம் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகள் ஈடுபட்டுள்ளன.

மோட்டோரோலா மற்றும் எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் தங்கள் உபகரணங்களில் 4ஜி சேவைகளை சோதித்தும் பார்த்துவிட்டன. இந்நிலையில், 3ஜி சேவையில் இந்தியா பின்தங்கிய நிலைமை 4ஜி சேவைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என 'டிராய்' கருதுகிறது.

இதனால், இப்போதே 4ஜி சேவைக்கான அலைவரிசை மற்றும் இதர விவகாரங்கள் குறித்து இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான 'டிராய்' ஆராயத் தொடங்கியுள்ளது.

'டிராய்' தலைவர் ஜே.எஸ்.சர்மா இதுபற்றி தெரிவிக்கையில், '2ஜி, 3ஜிக்கு அடுத்தபடியாக, ஜிகா பைட் வேகத்தில் மொபைலில் இணைய சேவை வழங்குவது உள்ளிட்ட உயர் நோக்கங்களுடன் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

4ஜி டெலிகாம் சேவைகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கான பரிந்துரைகள் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

இதனால் 3ஜி பணிகளை ஓரங்கட்டிவிட்டதாக நினைக்கக்கூடாது. 3ஜி ஏலம் அடுத்த சில மாதங்களில் கண்டிப்பாக நடைபெறும்.

3ஜி விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் 4ஜிக்கு ஏற்படக் கூடாது என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

பொதுத் துறை நிறுவனங்கள்


பங்குகள் விற்பனை மூலம் அரசு ரூ.30,000 கோடி திரட்டுகிறது
சுரபி
புதுடெல்லி
மத்திய அரசின் நிதி பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீதத்தை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த வழிமுறையில், வரும் 2010&11&ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.30,000 கோடி திரட்டும் என மத்திய அரசின் பங்குகள் விற்பனைத் துறை தெரிவித்துள்ளது.
உற்பத்தி வரி
மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்திடும் வகையில், கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களில் உற்பத்தி வரியை மொத்தம் 6 சதவீதம் குறைத்தது. மேலும், சேவை வரியை 2 சதவீதம் குறைத்தது. சமூக நலத்திட்டங்களுக்காக அதிக செலவினங்களை மேற்கொண்டது. இதுபோன்ற காரணங்களால், நடப்பு 2009&10&ஆம் நிதி ஆண்டில், நிதி பற்றாக்குறை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமாகும். இதனை வரும் 2010&11&ஆம் நிதி ஆண்டில் 5.5 சதவீதமாக குறைக்க முடியும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
Ôசெயில்Õ & எம்.எம்.டி.சி.
அவரது நம்பிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில், Ôசெயில்Õ இந்துஸ்தான் காப்பர், மாங்கனீஸ் வோர் இந்தியா, எம்.எம்.டி.சி. உள்ளிட்ட சுமார் 15 பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக மத்திய அரசு ரூ.30,000 கோடியை திரட்ட உள்ளது.
பொதுத் துறையை சேர்ந்த Ôசெயில்Õ மற்றும் எம்.எம்.டி.சி. நிறுவனங்களில் மத்திய அரசு முறையே 85.82 சதவீதம் மற்றும் 99.30 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இவற்றில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக கணிசமான தொகை திரட்டப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்துஸ்தான் காப்பர் மற்றும் மாங்கனீஸ் வோர் இந்தியா ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக முறையே ரூ.2,000 கோடி மற்றும் ரூ.3,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பங்கு வெளியீடுகளுக்கு விண்ணப்பம்


கவனத்துடன் செயல்படும் சில்லரை முதலீட்டாளர்கள்



விஜய் கவுரவ்
மும்பை
நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளின்போது, பங்குகள் வேண்டி விண்ணப்பிப்பதில் பரஸ்பர நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற நிதி நிறுவனங்களைக் காட்டிலும் தற்போது சில்லரை முதலீட்டாளர்கள் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருவதாக அண்மைக் கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
என்.டி.பி.சி. நிறுவனம்
சில தினங்களுக்கு முன்பாக பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இப்பங்கு வெளியீட்டில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஒரு லட்சத்திற்கு சற்று அதிகமானோரே இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.
எனினும் எல்.ஐ.சி. நிறுவனம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் ஆதரவுடன் இந்த வெளியீடு வெற்றி பெற்றது. வெளியிடப்பட்ட மொத்த பங்குகளில் இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டும் சுமார் 50 சதவீத பங்குகள் வேண்டி விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 1.2 மடங்கிற்குதான் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ்
இதே போன்று அண்மையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 18,300 சில்லரை முதலீட்டாளர்கள்தான் விண்ணப்பித்தனர். 10 லட்சம் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது, இந்நிறுவனம் சில்லரை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கீடு செய்த மொத்த பங்குகளில் 36 சதவீதம் மட்டுமே.
ஜனவரி மாதம் 5&ந் தேதியன்று கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. அன்றைய தினம், இப்பங்கு அதன் வெளியீட்டு விலையான ரூ.490&க்கு மேல் 4 சதவீதம் உயர்ந்தது. எனினும் பங்கின் விலை தற்போது 4 சதவீதம் குறைந்துள்ளது.
ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி
அண்மைக் காலத்தில் மூலதனச் சந்தையில் களமிறங்கிய ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி மற்றும் எம்.பீ.எல். இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளிலும் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
சென்ற 2009&ஆம் ஆண்டில் 22 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. இவற்றுள் 13 நிறுவனங்களின் பங்குகள், நடப்பு ஆண்டில், முதலீட்டாளர்களுக்கு 4 முதல் 27 சதவீதம் வரை ஆதாயம் அளித்து வருகின்றன. இதர நிறுவனங்களின் பங்குகளின் விலை 3 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
கடந்த 2007&ஆம் ஆண்டு, பங்கு வர்த்தகத்திற்கு பொற்காலமாக இருந்தது. அவ்வாண்டில் சுமார் 100 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டபோது பங்குகளின் விலை 82 சதவீதம் முதல் 175 சதவீதம் வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு சில நிறுவனங்களின் பங்குகளின் விலை, வெளியீட்டு விலையைக் காட்டிலும் சற்று சரிவடைந்தது.
ரூ.1 லட்சம் கோடி
நடப்பு ஆண்டில், ஸ்டெர்லைட் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்குகள் விற்பனை வாயிலாக 3,000 கோடி டாலர் (சுமார் ரூ.1 லட்சம் கோடி) திரட்ட திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், வெளியீட்டு விலையை நிர்ணயம் செய்வதில் நிறுவனங்கள் கவனத்துடன் செயல்படவில்லையென்றால் பங்குகள் பட்டியலிடப்படும்போது விலை குறைந்து போக வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் அண்மைக் கால வெளியீடுகளில் வாங்கியுள்ள பங்குகள் ஆதாயம் அளிக்காத நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் மட்டுமின்றி நிறுவன முதலீட்டாளர்களும் புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்க தயக்கம் காட்டுவார்கள் என அவர்கள் குறிப்பிட்டனர்.


நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில்


இந்திய காப்பீட்டு துறை நிறுவனங்கள் பங்குகளில் ரூ.34,000 கோடி முதலீடு

அபூர்வ் குப்தா
மும்பை
நடப்பு 2009&10&ஆம் நிதி ஆண்டில், முதல் பத்து மாதங்களில் இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் ரூ.34,000 கோடி முதலீடு செய்துள்ளன.
அன்னிய நிதி நிறுவனங்கள்
அன்னிய நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. சென்ற மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதனால், சிறந்த முறையில் செயல்படும் நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்து இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திடும் வகையில், தொலை நோக்கு அடிப்படையில், இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.13,500 கோடிக்கு பங்குகளில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், சென்ற ஜனவரி மாதத்தில்தான் இந்நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கி குவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இம்மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,100 கோடி நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அன்னிய நிதி நிறுவனங்கள், சென்ற ஜனவரி மாதத்தின் முதல் இரு வார காலத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளில் ரூ.6,000 கோடி முதலீடு செய்துள்ளன. அதேசமயம், அம்மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் ரூ.8,000 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன. அன்னிய நிதி நிறுவனங்கள், குறுகிய கால அடிப்படையில் செயல்படுகின்றன. அதேசமயம், காப்பீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன.
இது குறித்து பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி விக்ரம் கோட்டக் கூறும்போது, Òசென்ற மூன்று ஆண்டுகளாக அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த 2007&08&ஆம் நிதி ஆண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் 1,270 கோடி டாலர் (சுமார் ரூ.58,420 கோடி) நிகர மதிப்பிற்கு பங்குகளில் முதலீடு செய்தன. அதேசமயம், சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனங்கள் 1,070 கோடி டாலர் (சுமார் ரூ.49,200 கோடி) நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்தனÓ என்று தெரிவிதார்.
அவர் மேலும் கூறும்போது, Òநடப்பு நிதி ஆண்டில், ஜனவரி மாதம் வரையிலான 10 மாத காலத்தில் 1,950 கோடி டாலர் (ரூ.89,700 கோடி) நிகர மதிப்பிற்கு இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதேசமயம், இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் பங்கு வர்த்தகத்திற்கு இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளதுÓ என்றார்.
வருமான வரி சலுகை
ஒவ்வொரு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டிலும், முதலீட்டாளர்கள் வருமான வரிச் சலுகை பெற, அதிக அளவில் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இதனையடுத்து, நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில், காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் சிறப்பான அளவில் அதிகரிக்கும். இந்நிறுவனங்களுக்கு, இக்காலாண்டில் சுமார் ரு.18,400 கோடி (400 கோடி டாலர்) வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனங்களிடம் தற்போது சுமார் ரூ.13,800 கோடி (300 கோடி டாலர்) கையிருப்பு உள்ளது. இதனையடுத்து, நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில், இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் மேலும் சுமார் ரூ.18,500 கோடி முதலீடு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, நடப்பு நிதி ஆண்டிலும் இந்நிறுவனங்களின் பங்கு முதலீடு, சென்ற நிதி ஆண்டைப் போன்று ரூ.53,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த முதலீடு
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் 2,580 கோடி டாலர் (சுமார் ரூ.1,18,680 கோடி) மதிப்பிற்கு பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இது குறித்து கோட்டக் மேலும் கூறுகையில், Òஅடுத்த 2&3 ஆண்டுகளில், நிறுவன பங்குகளில் இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஓர் ஆண்டிற்கான சராசரி முதலீடு, கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டிற்கு சமமாக இருக்கும்Ó என்றார்.
சென்ற இரண்டு ஆண்டுகளாக நிறுவனப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் மொத்த முதலீட்டில் காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2007&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பீ.எஸ்.இ. 200 நிறுவனங்களின், பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) காப்பீட்டு நிறுவனங்கள் கொண்டிருந்த பங்குகளின் மதிப்பு 4.2 சதவீதமாக இருந்தது. இது, சென்ற 2009&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 6.8 சதவீதமாக உயர்ந்தது.
எல்.ஐ.சி. நிறுவனம்
காப்பீட்டு நிறுவனங்களில், ஆயுள் காப்பீட்டுச் சேவையில் ஈடுபட்டு வரும் எல்.ஐ.சி. நிறுவனம் அதிக அளவில் பங்குகளில் முதலீடு செய்து வருகிறது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போது, இந்நிறுவனம் அதிக அளவில் பங்குகளில் முதலீடு மேற்கொள்கிறது. பொதுத் துறை நிறுவனங்கள், பங்குகளை வெளியிடும்போதும், இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையில் அவற்றின் பங்குகளை வாங்குகிறது. பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம், சென்ற வாரம் இரண்டாவது முறையாக பங்குகளை வெளியிட்டபோது, எல்.ஐ.சி. நிறுவனம், அதிக பங்குகள் வேண்டி விண்ணப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உருக்கு துறை அமைச்சகம்


இரும்பு தாது மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய பரிந்துரை

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
உருக்கு தயாரிப்பில் இரும்புத்தாது முக்கிய மூலப் பொருளாகும். உள்நாட்டு உருக்கு நிறுவனங்களுக்கு இரும்புத்தாது தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், இரும்புத்தாது இறக்குமதி மீதான 2 சதவீத தீர்வையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உருக்கு அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
பரிந்துரை
இந்நிலையில், அனைத்து வகையான இரும்புத்தாது ஏற்றுமதி மீதான ஏற்றுமதி தீர்வையை 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் உருக்குத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து உருக்குத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, Òஉலக அளவில் உருக்கு பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், இரும்புத்தாது அதிக அளவில் தேவைப்படுகிறது. குறிப்பாக, சீனா, இந்தியாவிலிருந்து அதிக அளவில் இரும்புத்தாதுவை இறக்குமதி செய்கிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், இந்தியாவின் இரும்புத்தாது ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 20.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் நலன் கருதி, இரும்புத்தாது ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது அவசியமாகும்Ó என்று தெரிவித்தார்.
வாகன துறை
மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்ட எழுச்சியால், சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களின் உருக்கு பொருள்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், உள்நாட்டு உருக்கு நிறுவனங்களுக்கு அதிக அளவில் இரும்புத்தாது தேவைப்படுகிறது.
இது குறித்து இஸ்பத் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) அனில் சுரேகா கூறுகையில், Òபொருளாதாரம் முன்னேற்றப் பாதைக்கு திரும்பி உள்ளதால், இந்தியாவில் உருக்கு பொருள்கள் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. இந்நிலையில், இரும்புத்தாது ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீதான ஏற்றுமதி தீர்வையை 20 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற உருக்குத் துறை அமைச்சகத்தின் ஆலோசனை வரவேற்கத்தக்கதுÓ என்று தெரிவித்தார்.
அதேசமயம், தீர்வையை அதிகரிப்பதால், இரும்புத்தாது ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் சேசகோவா, எம்.எஸ்.பி.எல்., ரூங்டா மைன்ஸ், எஸ்ஸெல் மைனிங் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத் துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி., கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் இரும்புத்தாதுவை ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்றுமதி தீர்வை உயர்த்தப்பட்டால், இந்நிறுவனத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மும்பை ரியல் எஸ்டேட் மீண்டும் விர்ர்ர்... செயற்கை ஏற்றம் தான்

மும்பை: மும்பையில் சரிவில் இருந்த ரியல் எஸ்டேட் தொழில், தற்போது மீண்டும் ஏற்றத்தை சந்திக்க துவங்கியுள்ளது. இதனால், அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் காலி நிலங்களின் விலை, மீண்டும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே,மகாராஷ்டிரா மாநிலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் 'டல்'லடித்தது. குறிப்பாக, பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட பாதிப்பு, ரியல் எஸ்டேட் தொழிலில் கடுமையாக எதிரொலித்தது. மும்பை நகரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் தான், இதில் அதிகம் பாதிக்கப்பட்டனர். கடந்தாண்டில் மட்டும் குடியிருப்புகளின் விலை 35 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.

மும்பை நகரின் முக்கிய பகுதியான வார்டன் சாலையில், மூன்று படுக்கை அறைகள், ஒரு ஹால், ஒரு சமையல் அறை ஆகியவற்றை கொண்ட ஒரு குடியிருப்பின் விலை, கடந்தாண்டின் துவக்கத்தில் ஒரு சதுர அடிக்கு 50 ஆயிரம் ரூபாயாக இருந்தது. பொருளாதார மந்த நிலையால், ரியஸ் எஸ்டேட் தொழில் கிடு, கிடு வீழ்ச்சியை சந்தித்ததை அடுத்து, அத் தொழிலில் ஈடுபட்டிருந்த பலர், அதில் இருந்து வெளியேறி, வேறு தொழில்களில் கவனம் செலுத்த துவங்கினர். ஆனால், கடந்தாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து,ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் ஏற்றமடைய துவங்கியது. தற்போது அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் காலி நிலங்களின் விலை மெதுவாக அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில மாதங்களில் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் உச்சத்தை அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டின் துவக்கத்தில் வார்டன் சாலையில் ஒரு சதுர அடி 50 ஆயிரம் ரூபாயாக இருந்த, குடியிருப்பின் விலை, தற்போது சதுர அடிக்கு 93 ஆயிரம் ரூபாயாக ஒரேயடியாக அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் மேலும் அதிகரிக்கும் என, தெரிகிறது.


காரணம் என்ன?: இதுகுறித்து, ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக, மும்பையில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கான கிராக்கி மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போதுள்ள நிலையில் மும்பையில், குடியேறுவதற்கு தயரான வகையில் எந்த அடுக்கு மாடி குடியிருப்புகளும் காலியாக இல்லை. மேலும், புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான அனுமதி வழங்குவதில், அரசு தரப்பில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இருந்தாலும், இது ஒரு செயற்கையான ஏற்றமாகவே கருதப்படுகிறது. இவ்வாறு ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும்

சந்தை ஏற்றமும், இறக்கமும் கொண்டதாகவே இருக்கிறது. திங்கள், செவ்வாயின் லாபங்களை, புதன் சரிக்கட்டி விட்டது. திங்களன்று மும்பை பங்குச் சந்தை மிகக் குறைவான லாபமான, 20 புள்ளிகளில் முடிந் தது. நேற்று முன்தினம் சந்தை சிறிது நிமிர்ந் தது. அதாவது, உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் சிறிது தளர்வு தான் காரணம். ஐரோப்பாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் சரிசெய்யக் கூடியவை தான், அவை பல நாடுகளுக்கும் பரவும் அபாயம் இல்லை என்ற செய்திகள் சந்தையை மகிழ் வித்தன. ஆதலால், மும்பை பங்குச் சந்தை 107 புள்ளிகள் கூடி முடிந்தது. நேற்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் விற்றதால், சந்தை கீழே விழுந்தது. சமீபத்தில் அவர்கள் விற்பது தொடர்கதையாகிவிட்டது. பட்ஜெட்டுக்கு பிறகு வாங்குவார் கள். ஆதலால், நேற்று இறுதியாக மும்பை பங் குச் சந்தை 120 புள்ளிகள் குறைந்து, 15,922 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறைந்து 4,757 புள்ளிகளுடனும் முடிந்தது.

அரசின் சலுகைகள்: கடந்த இரண்டு ஆண்டுகளாக பல நாடுகளும் பலவிதமான சலுகைகளை அறிவித்து வந்தன. அதாவது, நாட்டின் நலனைக் கருதி அரசின் பணம் பல லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது, பலவிதமான சலுகைகள் வழங்கப்பட்டன. தற்போது பல நாடுகளின் நிலைமை திருப்திகரமாக உள்ளது. ஆதலால் அந்த சலுகைகளை திருப்பப் பெற வேண்டும், இல்லாவிடில் அது இன்னொரு நீர்க்குமிழிக்கு காரணமாகி விடும் என்று மார்கன் ஸடான்லியின் தலைவர் ரோச் கூறியுள்ளார். ஆனால், இந்தியாவில் சலுகைகள் எல்லாம் படிப்படியாக தான் குறைக்கப்படும், ஒரேயடியாக குறைக்கப்படாது என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்தியா, சீனாவை விட சிறப்பாக பரிணமிக்கும் என்றும் கூறியுள்ளார்.


சந்தைக்கு கேட்கிறதா? கூடப்போகும் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல், டீசல் விலை கூடவுள்ளதாக அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் பயப்படாமல் கார்கள் விற்பனை கூடிக்கொண்டே செல்கிறது. ஜனவரி விற்பனையும் கூடியுள்ளது. கார்கள் என்ன தண்ணியிலா ஓடுகிறது? பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிச்சயம் பணவீக்கத்தை அதிகரிக்கும். சந்தைக்கும் அபாயம் தான்.


புதிய வெளியீடுகள்: அரசு கம்பெனியான கோல் இந்தியா, தனது புதிய வெளியீடை கொண்டு வரவுள்ளது என்ற செய்தி வந்ததை அடுத்து, பல அரசு கம்பெனிகளின் பங்குகள் சரசரவென கூடின. குறிப்பக இன்ஜினியர்ஸ் இந்தியா, இந்துஸ்தான் காப்பர், டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் போன்றவை. சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வெளியீடான டெமினோஸ் பிட்சாவின் இந்திய துணை நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது 58 சதவீதம் பிரிமியத்தில் சென்று முடிந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது, பிட்சாவிலும் பணம் பண்ணலாம்.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்? திங்கள், செவ்வாய் என சிறிது நிமிர்ந்த சந்தை நேற்று பெரிதாக சரிந்து, இன்னும் சரிவு இருக்கிறது என்று கோடிட்டு காட்டி விட்டு சென்றுள்ளது. பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறது பங்குச் சந்தை.


சேதுராமன் சாத்தப்பன்
ஆம்பிவேலி சிட்டி – மும்பை விமான போக்குவரத்து துவக்கம்
ஆம்பி வேலி சிட்டி: ஆம்பி வேலி சிட்டி மற்றும் மும்பை இடையே வாரத்திற்கு ஆறு விமான போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு பெருநகரங்களான மும்பை மற்றும் புனே இடையே அமைந்துள்ளது ஆம்பி வேலி சிட்டி. இந்த ஆம்பி வேலி சிட்டி மற்றும் மும்பை இடையே, வாரத்திற்கு ஆறு விமான போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த போக்குவரத்து சேவை, கடந்த 5ம் தேதி துவங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்தைச் சேர்ந்த சுப்ரதா ராய் மற்றும் ஆம்பி வேலி சிட்டி தலைவர் சீமன்டோ ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம், ஆம்பி வேலி சிட்டியில் இருந்து 22 நிமிடங்களில், மும்பையை அடைந்து விடலாம். இந்த விமான போக்குவரத்து சேவை மும்பை மற்றும் ஆம்பி வேலி சிட்டி ஆகிய இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் பிரணாப் நம்பிக்கை
புதுடில்லி: 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, மத்திய புள்ளியியல் துறை தெரிவித்த அளவான, 7.2 சதவீதத்தை விட அதிகரிக்கலாம்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி குறித்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: பொருளாதார வளர்ச்சி பற்றிய மூன்றாவது காலாண்டு தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என, மத்திய புள்ளியியல் துறை முன் தெரிவித்திருந்ததை விட அதிகரிக்கலாம் என்பது என் கருத்து. எனினும், தற்போதைய நிலையில், 7.2 சதவீதம் வளர்ச்சி என்பது மோசமானது அல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிபுணர்கள் கணக்கிட்டுள்ளதை விட அதிகமாகவே இருக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, குறிப்பிட்ட காலத்தில், இந்தியா கொள்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதையே, நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது. இவ்வாறு பிரணாப் கூறினார்.


நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளில் இருந்ததை விட, 2.1 சதவீதம் குறைந்து, கடந்த நிதியாண்டில், 6.7 சதவீதமாக இருந்தது. 2008ம் ஆண்டு, செப்டம்பரில், லேமன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து, உலகப் பொருளாதார மந்த நிலை தீவிரமானது. இதை சமாளிக்க, அரசு பல்வேறு விதமான ஊக்கச் சலுகைகளை வழங்கியது. இதையடுத்து, பொருளாதார நிலை சீரடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கிளென் அப்ளையன்சஸ் சிம்னி அறிமுகம்
புதுடில்லி: கிளென் அப்ளையன்சஸ் நிறுவனம், புதிய வகை சிம்னி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: கிளென் அப்ளையன்சஸ் நிறுவனம், வெப்பம் மற்றும் எரிவாயு சென்சார்களுடன் தானே இயங்கும் வகையில், புதிதாக, 'ஜி.எல்., 6052 டச்' என்ற பெயரில் சிம்னி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிம்னி, ஆரோக்கியமான, சுத்தமான மற்றும் பாதுகாப்பான சமையலறைக்கு ஏற்றது. இதில், 'டச் கன்ட்ரோல்' மற்றும் சக்திவாய்ந்த இத்தாலியன் மோட்டார் ஆகியவை உள்ளன. மேலும், இந்த சிம்னி அனைத்து வகையான சமையல் முறைக்கும் ஏற்ற வகையில் உறிஞ்சும் திறன் கொண்டது. இவற்றில் உள்ள சென்சார் கட்டுப்பாட்டால், சமையல் துவங்கியதும், சிம்னி தானே செயல்படத் துவங்கி விடும்.

அதே போன்று, சமையலறையில் வெப்பம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதற் கேற்ப, தன் செயல்படும் வேகத்தை மாற்றியமைத்துக் கொள்ளும். இதில் உள்ள எல்.பி.ஜி., சென்சார் கருவியால், எரிவாயு கசிவு ஏற்பட்டால், சிம்னி தானாகவே செயல்படத் துவங்கி, எரிவாயுவை உறிஞ்சி சமையலறையில் இருந்து வெளியேற்றி விடும். இதனால், எரிவாயு கசிவால் ஏற்படும் தீ விபத்து தவிர்க்கப்படும். இந்த சிம்னியில், தீப்பற்றாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 60 செ.மீ., அளவுள்ள சிம்னி, 13 ஆயிரத்து 990 ரூபாய் விலையிலும், 90 செ.மீ., அளவுள்ள சிம்னி 15 ஆயிரத்து 990 ரூபாய் விலையிலும் கிடைக்கின்றன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

குடியிருப்பு பற்றாக்குறை - ரூ. 3.6 லட்சம் கோடி தேவை: அரசு
புதுடில்லி: குடியிருப்பு பற்றாக்குறையை சரிசெய்ய 3 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் ‌தேவைப் படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 25 மில்லியன் குடியிருப்பு யுனிட்கள் தேவைப் படுவதாகவும், இதற்காக ரூ. 3.6 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்று மத்திய நகரப்புற முன்னேற்றத் துறை அமைச்சர் சியாகேட் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், வருமானம் குறைந்த நகர் வாழ் மக்களுக்கு வீடுகள் அமைத்து தருவது அவசியம். இது அரசின் முக்கிய வேலை. இதற்காக அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

4,20,000 கார்களை திரும்ப பெற்றது ஹோண்டா நிறுவனம்
நியூயார்க்: அமெரிக்க மற்றும் கனடாவில், சுமார் 4,20,000 கார்களை திரும்ப பெறுவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2001 மற்றும் 2002ம் ஆண்டில் வெளியிடப் பட்ட மாடல்கள் ஆகும். விபத்தினை தடுக்க உதவும் ஏர்பேக் வசதி தொடர்பாக புகார்கள் எழுவதாகவும், இதனை சரிசெய்வதற்காக கார்கள் திரும்ப பெறப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ஹோண்டா நிறுவனத்தின் கார் ஒன்றில் ஏர்பேக் வேலை செய்யாமல் போனதால் ஒருவர் பலியானதாகவும், 11 பேர் காயம் அடைந்ததாகவும் புகார் எழுத்தது.

இதனை தொடர்ந்து 2001 மற்றும் 2002ம் ஆண்டில் வெளியிடப் பட்ட புதிய மாடல்களான சிவிக், ஓடிசி, சி.ஆர்-வி, மற்றும் 2002ல் அகுரா டி.எல் உள்ளிட்ட வாகனங்கள் திரும்ப பெறப் பட்டுள்ளன.

திரும்ப பெறப் பட்ட வாகனங்களில் ஏர்பேக் சரிசெய்யப் பட்டு அல்லது மாற்றப் பட்டு, மீண்டும் வாடிக்கையாளர்களிடம் அளிக்கப் படும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


ரயில்வே துறையின் வருவாய் உயர்வு
புதுடில்லி: நடப்பு 2009-10ம் நிதியாண்டில், ஜனவரி 31-ந் தேதி வரையிலான காலத்தில், இந்திய ரயில்வே துறையின் வருவாய் ரூ.70,501.65 கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாடின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 8.56 சதவீதம் அதிகமாகும். அதாவது, ரூ.64,943.32 கோடி அதிகமாகும்.

இதே காலத்தில், ரயில்வே துறையின் மொத்த வருவாயில், பயணிகள் போக்குவரத்தின் வாயிலான வருவாய் ரூ.18,057.41 கோடியிலிருந்து ரூ.19,393.26 கோடியாக உயர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய் 8.47 சதவீதம் அதிகரித்து, அதாவது ரூ.44,035.66 கோடியிலிருந்து ரூ.47,763.29 கோடியாக உயர்ந்துள்ளது.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ள பட்ட 10 மாத காலத்தில், இந்திய ரயில்களில் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை 4.59 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.


வரும் 2010-11ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட் இம்மாதம் 24ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவு
நொய்டா: நொய்டா தொழிற்பேட்டையில் குளிர்பதன ஏ.சி., தயாரிப்புக்கு என புதிய பிரிவினை சாம்சங் நிறுவனம் தொடங்கி உள்ளது. மின்சாதன பொருள்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். இந்நிறுவனம் தற்போது, ஏ.சி., விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நொய்டாவில் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவினை தொடங்கியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் ‌தலைவர் ஜூட்ஷி தொடங்கி வைத்தார்.
நிறுவனத்தை தொடங்கி வைத்த ஜூட்லி, இதுகுறித்து கூறும்போது, தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆலை ஆண்டுக்கு 6 லட்சம் ஏ.சி.​ யூனிட்டுகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. ஏற்கெனவே சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் 6 லட்சம் ஏ.சி.​ இயந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது.​ தற்போது புதிய ஆலை தொடங்கப்பட்டுள்ளதால்,​​ இந்நிறுவன உற்பத்தி ஆண்டுக்கு 12 லட்சமாக உயரும் என்று கூறியுள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்கள் புகார் செய்த ஒரு மணி நேரத்தில் பழுது நீக்குவோர் சென்றடையும் வகை செய்யப் பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு மேல் பழுது நீக்க காலதாமதமானால்,​​ மாற்று ஏ.சி.​ பொருத்தித் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ​

இந்த ஆண்டு 10 லட்சம் ஏ.சி.க்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து மேலும் கூறும்போது, மின் அழுத்த வேறுபாட்டின்போது, சீரான செயல்பாட்டினை அளிப்பதற்காக, புதிய வகை ஏ.சி.,களில் யு.டி.ஆர் கம்ப்ரஸர்கள் பயன்படுத்தப் படுவதாகவும், இந்த எஸ் வரிசை கம்ப்ரஸர்களுக்கு ஸ்டெபிலைஸர்கள் தேவையில்லை என்றும் கூறினார்.

இதுதவிர, மைக்ரோஸ்கோபிக் வைரஸ்கள் மற்றும் துர்நாற்றங்களை வெளியேற்றுதல், டியோடரைஸிங் பில்டர்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வகை ஏ.சி.,களில் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்திய வங்கித்துறை சிறந்து விளங்குகிறது: பிக்கி பாராட்டு
புதுடில்லி: இந்திய வங்கித் துறை சிறந்து விளங்குவதாக பிக்கி எனப்படும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பொருளாதார சரிவில் வளர்ந்த நாடுகள் கூட, மாட்டி கொண்டு முழித்த நிலையில், இந்திய பொருளாதாரம் நிதிநெருக்கடியில் சிக்காமல் நழுவியது.

நிதிநெருக்கடியில் சிக்காமல் இருந்ததற்கு இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதே காரணம் என்று பிக்கி தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து கூறும் ‌‌போது, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகளை காட்டிலும், இந்திய வங்கித் துறையின் நெறிமுறைகள் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதே, இந்தியா நிதிநெருக்கடியில் சிக்காமல் இருப்பதற்கு காரணம்.

இதனால் மற்ற நாடுகளை விட இந்திய வங்கித் துறை சிறப்பாக செயல்படுகிறது என்று இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் கூறியுள்ளது.

ரூ. 582 கோடியில் எல் அன்ட் டி நிறுவனத்திற்கு புதிய ஆடர்
மும்பை: லார்சன் அன்ட் டியூப்ரோ(எல் அன்ட் டி) நிறுவனத்திற்கு புதிதாக ரூ. 582 கோடி மதிப்பில் நான்கு புதிய ஆடர்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து மும்பை பங்குச்சந்தையிடம் அந்நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியில், ரூ. 267 கோடி( 58 மில்லியன் டாலர்) மதிப்பில் எப்.இ.டபுல்யூ.ஏ., நிறுவனத்திடம் இருந்து புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், இது 13-15 மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதே போல, ரூ. 155 கோடி மதிப்பில் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், இது 10 மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உ.பி., பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்ரேஷனிடம் இருந்து ரூ. 90 கோடி மதிப்பில் புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், இது மார்ச் 15, 2011ல் தொடங்கி ஜூ‌லை 31, 2011க்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

என்.எல்.சி., தமிழக பவர் லிமிடெடிடம் இருந்து 70 கோடி மதிப்பில் புதிய ஆடர் பெறப் பட்டுள்ளது. இது 34 மாதங்களுக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு காரணமாக மும்பை பங்குச்சந்தையில், எல் அன்ட் டி நிறுவன பங்குகள் 1.06 சதவீதம் உயர்வினை கண்டன.


லிவர்பூல் பங்குகளை வாங்க முயற்சி: முகேஷ் அம்பானி மறுப்பு
லண்டன்: ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, லிவர்பூல் பங்குகளை வாங்க முயற்சி செய்வதாக வந்துள்ள தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற, அதிக வெற்றி பெற்ற கிளப், லிவர்பூல் கால்பந்து கிளப்பாகும். இந்த கிளப்பின் 51 சதவீத பங்குகளை முகேஷ் அம்பானி வாங்க முயற்சி மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், லிவர்பூல் கால்பந்து கிளப் பங்குகளை வாங்க தான் முயற்சித்ததாக எழுந்துள்ள செய்தியை முகேஷ் அம்பானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் சார்பில் ரிலையன்ஸ் நிறுவன செய்தி தொட்பாளர் இத்தகவலை நிருபர்களுக்கு தெரிவித்தார்.

உலக அளவில் 4,36,000 கார்களை திரும்ப பெற்றது டொயோட்டா
டோக்கியோ: ‌ஜப்பான் கார் நிறுவனமான டொயோட்டா நிறுவனம், உலக அளவில் 4,36,000 கார்களை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், முதல் கிரீன் கார் என்ற அடைமொழியுடன் வெளியிடப் பட்ட பிரியஸ் உயர் ரக கார்களும் அடங்கும். இந்த வகை மாடலில் பிரேக்கிங் பிரச்னை இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த கார்களை திரும்ப பெறுவதாக ‌டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட பிரியஸ் மாடல், பிரியஸ் பி.ஹெச்.வி., சாய் மற்றும் லெக்ஷியஸ் ஹெச்.எஸ்.250ஹெச் உள்ளிட்ட மாடல் கார்கள் திரும்ப பெறப் பட்டன.

ஜப்பானில் மட்டும் இந்த வகை கார்களை 2,23,068 வரை திரும்ப பெறப் பட்டுள்ளன. ஹைபிரிட் கார்கள் 2,13,000 வரை திரும்ப பெறப் பட்டுள்ளன.

சமீபத்தில்தான் அக்ஸலரேட்டர் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் விற்கப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் 8 மாடல் கார்கள் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்து ஏற்கனவே, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குறைபாடுள்ள காரை விற்றதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், இதற்காக தங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளது. ‌பிரியஸ் கார் திரும்ப பெறப் பட்டு அதன் குறைகள் சரி செய்யப் பட்டு மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப் படும் என்றும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது

4ஜி மொபைல் சேவை : ஆலேசானையை தொடங்கியது டிராய்
புதுடில்லி : தொலைபேசி சேவை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்தியாவில் 4 ஜி மொபைல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆ‌லோசனையை தொடங்கியது.

3ஜி சேவையை மிஞ்சும் வகையில் வைஃபை மற்றும் வைமேக்ஸ் கலவையுடன், மிகத்துல்லியமான வீடியோ, அதிவிரைவான டிஜிட்டல் பரிமாற்றம் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகள் ஈடுபட்டுள்ளன.


மோட்டோரோலா மற்றும் எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் தங்கள் உபகரணங்களில் 4ஜி சேவைகளை சோதித்தும் பார்த்துவிட்டன. இந்நிலையில், 3ஜி சேவையில் இந்தியா பின்தங்கிய நிலைமை 4ஜி சேவைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என 'டிராய்' கருதுகிறது.


இதனால், இப்போதே 4ஜி சேவைக்கான அலைவரிசை மற்றும் இதர விவகாரங்கள் குறித்து இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான 'டிராய்' ஆராயத் தொடங்கியுள்ளது.

புதிய 2 ரூபாய் நாணயம்: ஆர்.பி.ஐ., வெளியிட்டது
சென்னை: கண் பார்வையற்றவர்களுக்கான 'பிரெய்லி' முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய 2 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ.,) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம்.​ மாஜி கூறும்போது,

இந்த நாணயம் ​​ 5.62 கிராம் எடை கொண்ட துருப்பிடிக்காத எவர்சில்வரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.​ இதில் 83 சதவீதம் இரும்பும்,​​ 17 சதவீதம் குரோமியமும் கலந்துள்ளன.இந்த நாணயம் 27 மில்லி மீட்டர் விட்டம் கொண்டது.


நாணயத்தின் பின்புறத்தில் லூயி பிரெய்லியின் படம் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கும்.​ மேற்புறத்தில் அவரது பெயர் ஹிந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் இருக்கும், படத்தின் கீழ்புறம் அவரது பெயர் 'பிரெய்லி' முறையில் எழுதப்பட்டிருக்கும். இதேபோல, முன்புறத்தில் நாணயத்தின் முகம் இரு படுக்கைக் கோடுகளால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.​ நடுப்பகுயின் இடதுபுறம் அசோகா தூணின் சிங்க முகம் பொறிக்கப்பட்டிருக்கும்.​ நடுப்பகுதியின் வலப்புறத்தில் நாணயத்தின் மதிப்பு இலக்கம் '2' என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும். மேற்புறத்தில் இந்தியா என்று ஹிந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.
தங்க கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் வசதி: ஹெச்.டி.எப்.சி., அறிமுகப் படுத்தியது
புதுடில்லி: தங்க கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் புதிய வசதியை ஹெச்.டி.எப்.சி., வங்கி அறிமுகப் படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் அமைந்துள்ளது புகழ் பெற்ற தங்க கோவில். இந்த கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையை செலுத்தும் வசதியை ஹெச்.டி.எப்.சி., வங்கி செய்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைமா செயல் அதிகாரி ஏ.ராஜன் கூறும் போது, பக்தர்கள் தங்க கோவிலுக்கு பல காரணங்களால் நேரடியாக வரமுடியாமல் உள்ளது. இவ்வாறு கோவிலுக்கு வர முடியாதவர்களுக்கு வசதியாக, நேரடியாக காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கியின் இணைய தளத்தின் வாயிலாக நேரடியாக தங்க கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம்.


தற்போது வங்கியின் மூலம் பல மதத்தை சேர்ந்த 37 புனித தலத்திற்கு காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என்று கூறினார்.