பங்கு வெளியிட தயாராகும் பொதுத் துறை நிறுவனங்கள்

புதன், 27 ஜனவரி, 2010

அனுமதி வேண்டி ÔசெபிÕக்கு விண்ணப்பம்


பங்கு வெளியிட தயாராகும் பொதுத் துறை நிறுவனங்கள்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறை நிறுவனங்களான என்.எம்.டீ.சி. மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி) ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது பங்கு வெளியீட்டில் களம் இறங்க தயாராகி உள்ளன. பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வேண்டி இந்நிறுவனங்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளன.
பிப்ரவரி மாதத்தில்...
ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனம், கிராமப்புறங்களில் நிர்மாணிக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிறுவனம் அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டை பிப்ரவரி 18&ந் தேதி முதல் 23&ந் தேதி வரையிலான காலத்தில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு கனிமங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.எம்.டீ.சி. நிறுவனம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு, என்.எம்.டீ.சி. நிறுவனத்தின் 8.38 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதன் மூலம் ரூ.18,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதே போன்று ஆர்.இ.சி. நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை வெளியிடுவதன் வாயிலாக ரூ.3,300 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
அரசின் பங்கு மூலதனம்
இரண்டாவது பங்கு வெளியீட்டில் ஆர்.இ.சி. நிறுவனம் 17 கோடிக்கும் அதிகமான அளவில் பங்குகளை வெளியிடுகிறது. இதில் 12.87 கோடி பங்குகள் நிறுவனத்தின் புதிய பங்குகளாகவும், 4.29 கோடி பங்குகள் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளாகவும் இருக்கும். பங்கு வெளியீட்டுக்குப் பிறகு இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் 66 சதவீதமாக குறைந்து விடும். தற்போது அரசின் பங்கு மூலதனம் 81.82 சதவீதமாக உள்ளது.
என்.எம்.டீ.சி.
என்.எம்.டீ.சி. நிறுவனம், அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டில் 33.22 கோடி பங்குகளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் 98.38 சதவீதமாக உள்ளது. பங்கு வெளியீட்டில் இந்நிறுவனம் அதன் பணியாளர்களுக்கும், சில்லரை முதலீட்டாளர்களுக்கும் பங்கின் வெளியீட்டு விலையில் 5 சதவீத தள்ளுபடி சலுகை அளிக்க உள்ளது. சில்லரை முதலீட்டாளர்களுக்கு 33 கோடி பங்குகள் அளிக்கப்பட உள்ளன. 17.43 லட்சம் பங்குகள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன.


பாரத ஸ்டேட் வங்கி


100% இடைக்கால டிவிடெண்டு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பாரத ஸ்டேட் பேங்க், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.2,479 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,478 கோடியாக இருந்தது.
வட்டி வருவாய்
இதே காலாண்டுகளில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 10 சதவீதம் அதிகரித்து, ரூ.5,758 கோடியிலிருந்து ரூ.6,317 கோடியாக உயர்ந்துள்ளது. இதர வருவாய் ரூ.3,226 கோடியிலிருந்து 4 சதவீதம் உயர்ந்து ரூ.3,366 கோடியாக அதிகரித்துள் ளது. இவ்வங்கியின் மூலதன இருப்பு விகிதம் 13.72 சதவீதத்திலிருந்து 13.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் இவ்வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.7,299 கோடியாக உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.6,379 கோடியாக இருந்தது. ஆக, வங்கியின் நிகர லாபம் 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, அக்டோபர்&டிசம்பர் மாத காலத்தில், திரட்டிய டெபாசிட்டுகள் 11.2 சதவீதம் உயர்ந்து ரூ.7,70,985 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி வழங்கிய கடன்கள் 19 சதவீதம் அதிகரித்து ரூ.6,07,154 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வங்கி அதன் பங்குதாரர்களுக்கு 100 சதவீத இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது.

இன்சுலின் மருந்து விலை 15 சதவீதம் அதிகரிக்கும்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் இன்சுலின் மருந்துகளில் குறிப்பிட்ட சில வகை பிராண்டுகளின் அதிகபட்ச சில்லரை விலையை உயர்த்துவதற்கு, தேசிய மருந்துவிலை நிர்ணய ஆணையம் ஐந்து மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இன்னும் சில தினங்களில் சில குறிப்பிட்ட இன்சுலின் மருந்துகள் விலை 15 சதவீதம் உயரும் என தெரிகிறது.
முக்கிய பிராண்டுகள்
இதன்படி, நோவா நார்டிஸ்க் நிறுவனம் அதன் ஆக்ட்ராபிட் ஃபிளக்ஸ்பென், இன்சுலாடர்ட் ஃபிளக்ஸ் பென், மிக்ஸ்டார்ட் 30 ஃபிளக்ஸ் பென் பிராண்டுகளின் விலையை 15 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாரன்ட் பார்மா நிறுவனமும், யுமன் மிக்ஸ்டார்டு என்ற இன்சுலின் ஊசி மருந்தின் விலையை 10 சதவீதம் உயர்த்தி உள்ளது.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையில் 4.3 சதவீதமாகும். வரும் 2030&ஆம் ஆண்டிற்குள் இது 9 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சர்வதேச நீரிழிவு நோய் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
காச நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் Ôமெட்ரோல்Õ என்ற மருந்தை ஃபைசர் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலையை உயர்த்தவும். தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வைட்டமின் ஏ உள்ளிட்ட சில மருந்துகள் விலையை உயர்த்தவும் அனுமதி வழங்கி உள்ளது.
விலை நிர்ணய ஆணையம்
சில குறிப்பிட்ட வகை மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்கிறது. இந்த கட்டுப்பாட்டின் கீழ் வராத மருந்தின் விலையை மருந்து நிறுவனங்கள் 12 மாதங்களில் 10 சதவீதம் உயர்த்தலாம். இந்நிலையில் மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களின் விலை உயரும்போது, நிறுவனங்களின் கோரிக்கை அடிப்படையில் விலையை உயர்த்த அவ்வப்போது இந்த ஆணையம் அனுமதி அளிக்கிறது.


திருமலை திருப்பதி தேவஸ்தானம்


500 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறது
ராம் என். சேகல் & அபூர்வ் குப்தா
மும்பை
இந்தியாவிலுள்ள இந்து சமய அறநிலையங்களில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தான் மிகப்பெரியது ஆகும். இந்த தேவஸ்தானம் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறும் உபரி தங்கத்தில் 500 கிலோவை சென்ற ஆண்டைப்போன்று, இவ்வாண்டிலும், வங்கிகளின் தங்க வைப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்ய தீர்மானித்துள்ளது.
வட்டி விகிதம்
சென்ற ஆண்டிலும் இவ்வங்கி 500 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மூன்று ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்தது. இதற்கான ஆண்டு வட்டிவிகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் 500 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்வதற்காக சுமார் 4&5 தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளிலிருந்து விலைப்புள்ளிகளை தேவஸ்தானம் பெற்றுள்ளது.
இவ்வங்கிகள் தெரிவிக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில், தங்கத்தை டெபாசிட் செய்வதற்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கி விரைவில் தேர்வு செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாளை தரிசிக்க தினந்தோறும் சராசரியாக 50,000&க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் ரொக்கப்பணம், தங்க நாணயங்கள், நகைகள் போன்றவற்றையும் காணிக்கைகளாக செலுத்துகின்றனர். இவர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தின் அளவு 500 கிலோவைத்தாண்டும் போது, இந்த தேவஸ்தானம், அதனை வங்கிகளின் தங்க வைப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்கின்றது.
பக்தர்கள்
ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை தரும் பக்தர்கள் மொத்தம் 700&800 கிலோ தங்கத்தை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இந்த தங்கத்தில் ஒரு பகுதி அரசின் தங்கசாலைகளில் உருக்கப்பட்டு வெங்கடாஜலபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கங்களாக மாற்றப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோக எஞ்சியுள்ள தங்கம் கட்டிகளாக மாற்றப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
சென்ற 2009&ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சுமார் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையிலும் பக்தர்கள், தங்க நகைகளை காணிக்கைளாக வழங்குவது உயர்ந்துள்ளது. இது, இவர்களின் பக்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது.
கூட்டு வட்டி
இவ்வாண்டில் தேவஸ்தானம் மூன்று முதல் ஐந்து ஆண்டு முதிர்வு காலத்தில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓர் ஆண்டிற்கு 1&1.5 சதவீதம் கூட்டு வட்டியை வங்கி வழங்கும். இவ்வாறு பெறப்படும் வட்டித்தொகையை, தேவஸ்தானம், பல்வேறு சமூக நல திட்டங்கள் மற்றும் அறப்பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
முதிர்வுகாலம் முடிந்ததும் தேவஸ்தானம் விரும்பினால், தங்கத்தை, வங்கிக்கு அப்போது நிலவும் விலையின் அடிப்படையில் விற்பனை செய்யும்.

கார் லோன் வாங்க போறீங்களா? இதை கவனியுங்க முதல்ல...

இந்தியாவில், கார் வாங்குவது என்பது இன்று வரை ஒரு கவுரவ சின்னமாகவே கருதப்படுகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறிய கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. எனவே, ஒவ்வொரு இந்தியனும், கார் வாங்குவதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளனர். இதற்கு ஏற்றாற் போல், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கார் கடனுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வீசி வருகின்றன. கடந்த காலங்களை போல காருக்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. ஷோரூம் போனால் உடனே டெலிவிரி, காருக்கான முழு தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்தினால் மட்டும் போதும், மீதி தொகையை மாத தவணையில் செலுத்தலாம் என்றெல்லாம் பல வசதிகள் உள்ளன. புதிய காருக்கு மட்டுமல்ல, செகன்ட் ஹண்ட் காருக்கு கூட கடன் வசதிகள் கிடைக்கின்றன.
நடுத்தர குடும்பங்களை இந்த வசதிகள் தான் ஆட்டிப்படைக்கின்றன. கார் வாங்குவது கடினமான காரியம் இல்லை என்று அவர்கள் நினைக்க தொடங்கி விட்டன. ஆனால், கார் கடன் வாங்கும் முன் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதில் அவர்கள் தங்கள் எண்ணத்தை செலுத்துவதில்லை. அவர்களுக்காக இங்கே சில டிப்ஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

குறைந்த கடன் தொகை: கார் கடன் வாங்கும் முன், எந்த அளவுக்கு கடன் தொகையை வாங்க போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் வட்டி செலுத்த வேண்டும். எனவே, வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கும் போது, குறைந்த அளவில் கடன் வாங்கினால் மட்டும் போதுமானது. இதன் மூலம் வட்டித் தொகை குறையும். கார் கடனையும் விரைவில் கட்டி முடிக்க முடியும். ஆனால், அதிக முன் தொகையை செலுத்த வேண்டும் என்ற பிரச்னை இருப்பதால், இதில் பலரும் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். எனினும், குறைந்த தொகையை கடனாக வாங்கினால் லாபமாகவே இருக்கும்.

பிரபல மாடல்கள்: பிரபலம் இல்லாத, சந்தையில் வரவேற்பு இல்லாத கார்களுக்கு கடன் வாங்குவது என்றால், அதற்கான வட்டியும் அதிகமாகவே இருக்கும். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கார், விற்பனைக்கு பிறகு நிறுவனம் அளிக்கும் சிறப்பான சர்வீஸ், குறைந்த அளவு பராமரிப்பு ஆகியவை தான் ஒரு கார் சிறந்த மாடல் என்பதை நிர்ணயிக்கிறது. இதுபோன்ற கார்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். கார் வாங்கும் போது இதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆன் ரோடு விலை: கார் விலையை, எக்ஸ் ஷோரூம் விலை, ஆன் ரோடு விலை என இரண்டு விதமாக குறிப்பிடுவர். கார் பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், ரோடு வரி மற்றும் பிற கட்டணங்கள் அடங்கியது தான் ஆன் ரோடு விலை. எக்ஸ்ஷோரூம் விலை என்பது இந்த கட்டணங்கள் சேர்க்கப்படாதது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆன் ரோடு விலைக்கு தான் கடனை தருகின்றன. புதிதாக கார் வாங்கும் போது ஆன் ரோடு விலையை குறிப்பிட்டு கடன் வாங்கினால், பிற கட்டணங்களுக்கு கை காசை செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒப்பிட வேண்டும்: ஏராளமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கார் கடன்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுகின்றன. ஆனால், எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் குறைந்த அளவு வட்டி வசூலிக்கப்படுகிறது, மாத தவணையான இ.எம்.ஐ., எவ்வளவு போன்ற விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து கடன் வாங்கினால் லாபமாக இருக்கும்.

புராசசிங் கட்டணம்: நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவரா? அதற்கான கட்டணத்தை முறையாக கட்டுபவரா? உங்களுக்கு கடன் கொடுத்தால் பிரச்னை வராது என்று வங்கி நினைக்கிறதா? இது போன்ற விஷயங்கள் உண்டு. நீங்கள் வங்கி கணக்குகளை முறையாக வைத்திருந்தால், கார் கடனுக்கான புராசசிங் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வங்கிகள் குறைத்து கொள்ள வாய்ப்பு உண்டு.

கவர்ச்சிக்கு மயங்க கூடாது: வாடிக்கையாளர்களை கவருவதற்காக சில டீலர்களும், சிறிய நிதி நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான சலுகைகளை அள்ளி வீசுவார்கள். இதை பார்த்து மயங்கி விட கூடாது. எந்தவித பின்னணியும் தேவையில்லை, உங்கள் வருவாய் எவ்வளவு என்று கூட கேட்ட மாட்டோம், கார் கடன் வாங்கிகொள்ளுங்கள் என்று வலை விரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


முதல் கார் பெரியதா, சிறியதா: பெண்களின் விருப்பம் எது?
இந்திய பெண்கள் தாங்கள் வாங்கும் முதல் கார், பெரியதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
இந்தியாவில், ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில், உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 23 லட்சம் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் வரவேற்பு, வெளிநாட்டு கார் நிறுவனங்களை வியக்க வைத்துள்ளது. எனவே, அனைத்து வெளிநாட்டு கார் நிறுவனங்களும், போட்டிபோட்டுக் கொண்டு, கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.

அதே போல, கார் வாங்கும் முன் அதுகுறித்த தகவல்களை இன்டர்நெட் மூலம் தேடுவதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர். கார் வாங்குபவர்களில் 90 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர், இன்டர்நெட் மூலமே பதிவு செய்து கார் வாங்குகின்றனர். இவர்களில், பாதி பேர், இன்டர்நெட் மூலமே கார் உதிரி பாகங்களையும் வாங்குகின்றனர். இன்டர்நெட் மூலம் வாங்கும் போது கிடைக்கும் பணச்சலுகை மற்றும் டீலர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகியவையே இதற்கு காரணம்.

கார் குறித்த தகவல்களை தெரிவிப்பதில், காடி.காம் என்ற இணையதளம் முன்னணியில் உள்ளது. இந்த இணையதளம் இரண்டு மாதங்களாக, ஒரு ஆய்வை நடத்தியது. கார் வாங்குவதற்காக இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் மன நிலையை அறிவதற்கான ஆய்வு இது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 28 ஆயிரத்து 934 பேர் பங்கேற்றனர். இவர்களில் 88 சதவீதம் பேர் ஆண்கள். 12 சதவீதம் பேர் பெண்கள். ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, பதவி மற்றும் பாலினம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டது.

ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள் வருமாறு:

பெண்களில் 46 சதவீதம் பேர், தங்களது முதல் காராக செடன் போன்ற பெரிய காராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்தியர்களில் 46 சதவீதம் பேர் கார் நல்ல மைலேஜ் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, கார் ஸ்டைலாக இருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

பெரிய கார்களை வாங்கி, அவற்றை சாலையில் ஓட்டிச் செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவது உண்டு. இப்பிரச்னை இருந்தாலும், இந்தியர்களில் 55 சதவீதம் பேர் நடுத்தரமான காருக்கு பதிலாக பெரிய கார் வாங்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

30 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களின் ஆண்டு வருமானத்தை போல இரண்டு மடங்கு தொகையை புதிய கார் வாங்குவதற்காக செலவிட தயாராக உள்ளனர்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை உள்ளவர்கள், தங்களின் மொத்த ஆண்டு வருமானத்தையும் புதிய கார் வாங்குவதற்காக செலவிட தயாராக உள்ளனர்.

இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பங்குச் சந்தையில் தங்கமயில்

மதுரை: தென் மாவட்டங்களில் பிரபலமான தங்கமயில் ஜுவல்லரி பங்குச் சந்தையில் நுழைகிறது.
இந்நிறுவன இணை நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறியதாவது: தென்மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தங்கமயில் ஜுவல்லரிக்கு, மதுரை உட்பட ஐந்து இடங்களில் கிளைகள் உள்ளன. அடுத்த ஆண்டிற்குள் மேலும் ஆறு கிளைகள் துவக்க உள்ளோம். ஒவ் வொரு நிதி ஆண்டிலும், குறைந்தபட்சம் நான்கு ஷோரூம்கள் திறக்க முடிவு செய்யப் பட்டுள் ளது. கடந்த ஆண்டில், 246 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளோம். பங்கு வெளியீடு மூலம் 35 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். இது நமது பங்கு என நினைத்து, மக்கள் ஆர்வமாக ஈடுபடுவர் என எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு ரமேஷ் கூறினார்.

நிறுவன ஆலோசகர் ஆடிட்டர் ராஜகோபாலன் கூறியதாவது: மார்க்கெட்டில் நல்ல திறமை காட்டியுள்ள நிறுவனம் இது. நிதி நிர்வாகம் நன்றாக உள்ளதால், பங்கு வாங்குபவர்கள் நிச்சயம் பலன் பெறுவர். பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதி, புதிய தொழிலில் முதலீடு செய் யப்படவில்லை. வணிக விரிவாக்கத்திற்கு தான் பயன்படுத்தப்படும். ரேட் டிங்கில் ஐந்துக்கு மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது. ஜன., 27ல் (நாளை) வெளியிடப்படும் 10 ரூபாய் முகமதிப்புள்ள புதிய பங்கு ஒன்றின் விலை 70 முதல் 75 ரூபாய் வரை இருக்கும்.

இவ்வாறு ராஜகோபாலன் கூறினார்.கீநோட் கார்ப்பரேட் நிறுவனத்தின் சூரஜ் சரயாகி அறிமுக உரை நிகழ்த்தினார்.

துபாயில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி முயற்சி: 7 பேர் கைது
துபாய்: துபாயில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்ய ‌முயன்ற 7 பேரை ஐக்கிய அரபு எமிரேட் அரசு கைது செய்துள்ளது. ‌சென்ட்ரல் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் மூலம் 10.3 பில்லியன் டாலர்களை அவர்கள் மோசடி செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதனை உடனடியாக கண்டறிந்த வங்கி, இந்த விஷயத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளது. விரைந்து செயல்பட்ட போலீசார் அவர்களை ‌கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த ஆவணங்களைச் சோதித்தபோது, அவை போலியானவை என்று தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய வங்கி ஒன்றின் கேட்பு ஆணையின் பேரில் இந்தத் தொகையை சென்டிரல் வங்கியிலிருந்து மாற்றத்தக்க வகையில் அந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வரிஏய்ப்பில் மும்பை பிரபலங்கள் : நவி மும்பை மாநகராட்சி
மும்பை : நவி மும்பை மாநகராட்சி மும்பையை சேர்ந்த பிரபலங்கள் சிலர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. இதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனில் அம்பானி , பாலிவுட் பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோர் சிக்கியுள்ளனர். நவி மும்பையில் கார் போன்ற வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி குறைவாக இருப்பதால் பெரும்பாலானோர் அங்கு தங்கள் வாகனங்களை பதிவு செய்ய விரும்பதாக நவி மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவன பங்கு விற்ப‌னை நிறுத்தப் படாது: அருண்யாதவ்

இந்தூர்: பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நிறுத்தப்படாது என்று கனரக தொழில் துறை இணை அமைச்சர் அருண் யாதவ் தெரிவித்தார்.

இந்தூரில் 65 வது அகில இந்திய ஜவுளி மாநாட்டை தொடங்கிவைத்த அவர், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்கு விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொதுத்துறை நிறுவன பங்கு விற்ப‌னை நிறுத்தப்படாது. இந்த வருடத்திற்குள் 10 முதல் 15 விழுக்காடு பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.


மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு, பங்கு விற்பனை செய்யப்படும். பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கான கருத்து கணிப்பு நடை பெற்று வருகிறது. இதில் 80 விழுக்காட்டினர் பங்கு விற்பனை செய்வதற்கு சாதமான பதிலை தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.



இந்தியன் வங்கிக்கு ரூ. 441 கோடி லாபம்
சென்னை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டி கணக்கெடுப்பின வெளியிட்டுள்ளது. இதனை வங்கியின் தலைவர் சுந்தர ராஜன் வெளியிட்டார்.
இதில், வங்கி ரூ. 441 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும்.

வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 1,42,200 கோடி என்றும், இது அதற்கு முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ரூ. 1,20,120 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சேமிப்புகளின் அளவு 21 சதவீதம் அதிகரித்து ரூ. 84,732 கோடியாக உயர்ந்தது. வங்கி வழங்கிய கடன் அளவு 13 சதவீதம் அதிகரித்து ரூ. 57,468 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், வங்கியின் வாராக் கடன் அளவு 0.92 சதவீதத்திலிருந்து 0.92 சதவீதமாகக் குறைந்தது. ஒட்டுமொத்த வாராக்கடன் 0.16 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதத்தில் ரூ. 471.07 கோடி வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


தனலட்சுமி வங்கி புதிய திட்டம்
மும்பை: தனலட்சுமி வங்கி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியை துவக்கியுள்ளது. தனலட்சுமி வங்கி பொது மேலாளர் ஜெயகுமார் கூறியதாவது: நிதியை அதிகரிக்கும் முயற்சியாகவும், பொருளாதாரத்துக்கு உதவும் வகையிலும், 50 ஆயிரம், 'நோ-பிரில்ஸ்' வங்கிக் கணக்குகளை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இதற்காக, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 50 புதிய வாடிக்கையாளர் சேவை மையங்களை திறக்கவுள்ளோம்.

இங்குள்ள வங்கி பிரதிநிதிகள், வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், வங்கிக் கணக்குகளின் விவரங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு விளக்குவர். இந்த சேவை மையங்கள், வங்கியின் வர்த்தக தொடர்பு மையங்களாகவும் செயல்படும். காப்பீடு, கடன் திட்டம் முதலான பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயகுமார் கூறினார். வங்கியின் மைக்ரோ பைனான்ஸ் துறை தலைவர் திலிசா குப்தா கவுல் கூறுகையில், 'மிகவும் அதிகளவு வாடிக்கையாளர்களை, அமைப்பு ரீதியான வங்கி நடவடிக்கைகளுக்கு கொண்டு வருவது தான், இத்திட்டத்தின் நோக்கம்' என்றார்

வைர விற்பனை: ஜப்பானை முந்தியது சீனா
பெய்ஜிங்: வைர விற்பனையில் ஜப்பானை சீனா முந்தியுள்ளது. வைர விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஜப்பான் இருந்தது. தற்போது, ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஷாங்காய் வைர விற்பனை சந்தையில் வைர விற்பனை 16.4 சதவீதம் உயர்ந்து 150 கோடி டாலரரை எட்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல், தற்போது நிலவி வரும் நிதிநெருக்கடியிலும், சீனாவில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீனாவில் தற்போது சாதாரண மக்கள் கூட வைர நகைகளை பயன்படுத்த தொடங்கி விட்டதும், பண்டிக்கை காலங்களில் வைரத்தை வாங்குவதற்கு சீனா மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதுமே, சீனாவில் வைர விற்பனை அதிகரித்து இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.