அமெரிக்காவில் மேலும் 9 வங்கிகள் திவால்

திங்கள், 25 ஜனவரி, 2010

நியூயார்க்: இந்த ஆண்டும் தொடர்கிறது அமெரிக்க வங்கிகளின் திவால் சோகம்.

புத்தாண்டு பிறந்து 20 நாட்களுக்குள் 9 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 5 வங்கிகள் ஒரே நாளில் மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டுமே 140 வங்கிகள் திவாலாகின அமெரிக்காவில். இது கடந்த 18 ஆண்டுகளில் அதிகபட்ச வீழ்ச்சியாகும்.

இந்த நிலையில் 2010-ம் ஆண்டும் வீழ்ச்சிக்கு விதிவிலக்காக இல்லை. கொலம்பியா ரிவர் வங்கி, எவர்கிரீன் வங்கி, சார்ட்டர் வஹ்கி, பேங்க் ஆப் லீடன், பிரிமியர் அமெரிக்கன் வங்கி ஆகிய 5 வங்கிகள் ஒரே நாளில் மூடப்பட்டன (ஜனவரி 22). இவற்றால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 531.7 அமெரிக்க டாலர்கள்.

இவற்றைத் தவிர மேலும் 4 வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 2008-ல் லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்த பிறகு 164 வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி லாபம் மூன்று மடங்கு அதிகரிப்பு
மும்பை: மாருதி சுஸுகி நிறுவனத்தின் லாபம் இந்த காலாண்டில் மட்டும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

அக்டோபர் - டிசம்பர் 2009 காலாண்டில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் ரூ 687.53 கோடி. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ 213.57 கோடியை நிகர லாபமாகக் காட்டியிருந்தது மாருதி.

2008-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் லாபம் காட்டிய மிகச் சில கார் உற்பத்தி நிறுவனங்களுள் மாருதியும் ஒன்று.

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மீட்சிக்கு திரும்புவதால், கார் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி நிறுவனம் சாதனை அளவாக 218,910 க்கும் அதிகமான கார்களை விற்று முதலிடத்தில் உள்ளது.

மூன்றாம் காலாண்டில் மாருதியின் மொத்த வருமானம் ரூ 7,591.1 கோடியாக உள்ளது. உள்நாட்டு விற்பனை 37.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குர்கான், மானேசர் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மாருதி, இரண்டிலும் மொத்தம் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் மிக்கதாக உள்ளது. இப்போது மானேசர் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை 3,00,000 லிருந்து ஆண்டுக்கு 5,50,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

என்.எம்.டீ.சி. நிறுவனம்

2&வது பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.20,000 கோடி திரட்ட திட்டம்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறையை சேர்ந்த என்.எம்.டீ.சி. நிறுவனம், இரண்டாவது முறையாக பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி வேண்டி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு இன்று (திங்கள்கிழமை) விண்ணப்பிக்க உள்ளது.
என்.எம்.டீ.சி. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 98.38 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. மீதமுள்ள 1.62 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசம் உள்ளன. என்.எம்.டீ.சி. நிறுவனம், இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.20,000 கோடியை திரட்டிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இப்பங்கு வெளியீட்டின் மூலம் மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 8.38 சதவீத பங்குகளை வெளியிட உள்ளது.
Ôநவரத்னாÕ அந்தஸ்து
Ôநவரத்னாÕ அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம், கனிமவள மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.532.50 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது.
மேற்கண்ட மொத்த பங்கு வெளியீட்டில் 50 சதவீத பங்குகள் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீத பங்குகள் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.
இப்பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, மத்திய அரசு, சமூகநலன் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பன்ஸ்வாரா சின்டெக்ஸ்


நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்நிறுவனம், பல்வேறு ஜவுளி பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், விரிவாக்க நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது. எனவே, பங்கின் விலை குறையும் நிலையில் முதலீடு செய்யலாம்.
தேவங்கி ஜோஷி
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
ராஜஸ்தானை சேர்ந்த பன்ஸ்வாரா சின்டெக்ஸ் (ஙிணீஸீsஷ்ணீக்ஷீணீ ஷிஹ்ஸீtமீஜ்) நிறுவனம், நூலிழைகள் மற்றும் ஆடைகள் தயாரிப்புக்கு தேவையான சிறப்பு வகை துணிகள் போன்றவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட ஜவுளி ஆலைகள் உள்ளன. Ôசென்செக்ஸ்Õ 75 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ஆறு மடங்குகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தி நூலிழைகள்
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், பாலியெஸ்டர், விஸ்கோஸ், உல்லன், அக்ரலிக் உள்ளிட்ட கலப்பின நூலிழைகளுடன் பருத்தி நூலிழைகள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்நிறுவனம் ஆர்டர்களின் அடிப்படையில் சிறப்பு வகை துணிகளையும் தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேரமன் என்ற நிறுவனத்தின் கூட்டுடன் (50 சதவீதம்) 60 விசைத்தறிகளுடன் கூடிய நெசவு ஆலையையும் கொண்டுள்ளது.
அண்மையில், இந்நிறுவனம் லிக்ரா பிராண்டு துணிகள் தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கி உள்ளது. இவ்வகை சிறப்பு துணிகள், பள்ளிச் சீருடைகள், பெண்கள் அணியும் நவீன மற்றும் அலுவலக பயன்பாட்டு ஆடைகள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதி
இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில், துணிகளின் பங்களிப்பு 60 சதவீத அளவிற்கு உள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் நூலிழை வர்த்தகத்தின் மூலம் பெறப்படுகிறது. இதில், பாலியெஸ்டர் நூலிழைகளின் பங்களிப்பு மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிறுவனம் அதன் ஜவுளி வகைகளை சுமார் 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற காலாண்டில், இந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயில், ஏற்றுமதியின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மின் திட்டங்கள்
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயில் அடிப்படையில் செயல்படக்கூடிய இரண்டு அனல் மின் திட்டங்களை கொண்டுள்ளது. இவை, முறையே 18 மெகா வாட் மற்றும் 9 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். மேற்கண்ட இரண்டு மின் பிரிவுகள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், நிறுவனத்தின் சுய பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் கூடுதலாக மேற்கண்ட இரண்டு வகைகளில் 15/18 மெகாவாட் திறனில் இரண்டு மின் திட்டங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு மின் திட்டங்களும், நடப்பு 2010&ஆம் ஆண்டு இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி நிலை
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதல் ஆண்டுக்கு 21 சதவீதம் என்ற அளவிலும், ஒட்டுமொத்த நிகர லாபம் ஆண்டுக்கு 40 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்நிறுவனம், வரும் நிதி ஆண்டில் ரூ.110 கோடி திட்டச் செலவில் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதில், மூன்றில் ஒரு பகுதி நிதி, உள்வள நிதி ஆதாரங்கள் மூலம் திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள நிதி குறித்த கால கடன்கள் வாயிலாக திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. இந்நிறுவனம், இரண்டு திட்டங்கள் அமைப்பதற்காகவும், அதன் ஜவுளி பிரிவுகளை நவீனமயமாக்குவதற்காகவும் மேற்கண்ட விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
இந்நிறுவனத்தின் லிக்ரா பிராண்டு துணிகளுக்கும், இதர சிறப்பு வகை துணிகளுக்கும் வெளிநாடுகளில் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. அண்மையில், ராணுவ துறையிடமிருந்து 57,000 மீட்டர் சிறப்பு வகை துணிகள் வழங்குவதற்காக ஆர்டர் கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வாடிக்கை நிறுவனத்திடமிருந்து, மூன்றாவது முறையாக, 20,000 மீட்டர் சிறப்பு வகை துணி வகைகள் வேண்டி ஆர்டர் கிடைத்துள்ளது.
மதிப்பீடு
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதம் வரையிலான நிதி ஆண்டில் ரூ.598.40 கோடி நிகர விற்பனையில், ரூ.31.40 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இவை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது முறையே 13.6 சதவீதம் மற்றும் 632.90 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று தற்பொழுது ரூ.112.90 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. இது, இந்நிறுவனத்தின் ஒரு பங்கு சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது 4.5 மடங்குகள் என்ற அளவில்தான் உள்ளது. ஜவுளித் துறையில் ஈடுபட்டு வரும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்நிறுவனத்தின் பங்கின் விலை குறைவாகவே உள்ளது. மேற்கண்டவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில், இந்நிறுவனத்தின் பங்கின் விலை குறையும் நிலையில் இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்
அடுத்த 10 ஆண்டுகளில்


கட்டமைப்பு வசதிக்காக ரூ.78 லட்சம் கோடி முதலீடு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும் சாலை போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான நிலைய வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, இத்துறைகளின் முன்னேற்றத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 1.7 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு (ரூ.78.20 லட்சம் கோடி) முதலீடுகள் தேவைப்படும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி புரூக்ஸ் எண்ட்விசில் தெரிவித்தார்.
சராசரியாக ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்படும் முதலீடு ரூ.6.52 லட்சம் கோடியாகும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதித் துறையில் வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. எனவே, இத்துறையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இருப்பினும், உள்நாட்டு நிறுவனங்கள்தான் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் என புரூக்ஸ் மேலும் தெரிவித்தார்.


பொதுத் துறை நிறுவனங்கள்


பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.44,000 கோடி அதிகரிப்பு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு, இவ்வாண்டு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 48 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) நடப்பு 2010&ஆம் ஆண்டின் இதுவரையிலான 15 வர்த்தக தினங்களில் ரூ.44,346 கோடி அதிகரித்து ரூ.18.20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, லாபம் ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 10 சதவீதத்தை பொதுமக்களுக்கு வெளியிடும் என்று சென்ற சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும், இதுவரை பங்குகளை வெளியிடாத, லாபம் ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்கள் புதிதாக பங்கு வெளியீட்டில் இறங்கும் என்று அறிவித்தது.
என்.டி.பி.சி.
இதனால், சென்ற 2009&ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து பொதுத் துறை நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், சென்ற இரண்டு மாதங்களில் பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2.69 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, என்.டி.பி.சி. (ரூ.11,000 கோடி), என்.எம்.டீ.சி. (ரூ.20,000 கோடி), இன்ஜினியர்ஸ் இந்தியா (ரூ.1,000 கோடி) ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (ரூ.3,000 கோடி) ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக சுமார் ரூ.35,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனங்கள், இரண்டாவது முறையாக பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. இந்நிறுவனங்கள், டிவிடெண்டுகள் மற்றும் இலவச பங்குகள் வழங்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.
சென்செக்ஸ்
இதுபோன்ற காரணங்களால் சென்ற 15 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ 3.46 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையில், பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் பங்கின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.606.95&க்கு விலை போனது. எஸ்.டி.சி. நிறுவனப் பங்கின் விலை 41 சதவீதம் உயர்ந்து ரூ.526.05&க்கு கைமாறியது. பொதுத் துறையைச் சேர்ந்த புளுசிப் நிறுவனங்களில் என்.எம்.டீ.சி., எம்.எம்.டி.சி. ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை முறையே 26 சதவீதம், 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்ஜினியர்ஸ் இந்தியா, டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை முறையே 41 சதவீதம், 33 சதவீதம் உயர்ந்து ரூ.2,182.80 மற்றும் ரூ.701.90&க்கு விலை போனது.