தேசிய நிஃப்டி

திங்கள், 21 டிசம்பர், 2009

தேசிய நிஃப்டி

இந்த வலை பூவிற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ஆனைவருக்கும் நன்றிகள்
உங்கள் கருத்து களை பதிவு செயுங்கள்
இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளின் மேல்நோக்கிய பயணத்தால் நமது சந்தைகளும் மேல்நோக்கிய பயன்களை மேற்கொள்ளும் தேசிய நிஃப்டி இன்று 5010 தாண்டினால் 5025 - 5055வரை தேசிய நிஃப்டி செல்ல கூடிய வாய்புகள் வரை .தாங்கு நிலை 4970 -4050 சப்போர்ட் லெவல4870-4850 .இன்றய சந்தைகளை
I T ,ஆட்டோ,மெட்டல் ,டெலிகாம் வங்கி ரியல்எஸ்டேட் FMCG பங்குகள் வழி நடத்தும் .பங்குகள்.
குறிப்பாக வங்கி,டெலிகாம் i t ,போன்ற பங்குகள் இன்றைய சந்தையில் விளையாடும் .
லாபம் உள்ள பங்குகளை விற்று லாபத்தை பார்த்துவிடுங்கள் .
குறையும் பட்சதில் வாங்கி சேகரித்து கொள்ளுங்கள் .
SEE THE STOCKS
RELIANCE
R COM
TECH MAHINDRA
SBI
UNITECH
IDFC
ICICI BANK
IVRCL
LIC HOUSING
NAGARJUNA CONSTRUCTION
BANK OF INDIA

ஒரு வாரம் அலுவலகத்திற்கு லீவு: செலவை குறைக்க யாகூ புதுமுயற்சி நியூயார்க்: உலக அளவில் உள்ள தனது அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரு வாரம் லீவு விட யாகூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செலவை குறைக்க தான் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதம் (டிசம்பர்) 25 ம் தேதி முதல் ஜனவரி 01ம் தேதி வரை இதற்காக ஒதுக்கி உள்ள யாகூ நிறுவனம், டிசம்பர் 25 முதல் ஜனவரி 01ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் வருவதால் இந்த தேதிகளை தேர்ந்தெடுத்தாக தெரிவித்துள்ளது. யாகூ நிறுவனத்தை போல, அடாப் மற்றும் ஆபிள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 01ம் தேதி வரை லீவு விட முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கப் பொருளாதாரம்... வல்லுனர்கள் கவலைவாஷிடங்டன்: பொருளாதார மந்தத்திலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீ்ண்டு வருவதாக செய்திகளும், வங்கிகளின் அறிக்கைகளும் சொன்னாலும், இதற்கெல்லாம் மூல காரணமான அமெரிக்கப் பொருளாதாரம் மட்டும் மீண்டு வர இன்னும் சில காலம் ஆகும் என்றே பல ஆய்வுகளும் கூறுகின்றன.

இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ், 2010-லும் அமெரிக்கா ஒரு பெரிய சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், இந்த முறை இன்னும் அதிக ஊக்கச் சலுகை திட்டத்தை (Stimulus Package) அது அறிவிக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்.

"2009-ன் பிற்பகுதியில் பல முன்னேற்றங்கள் இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒபாமா அரசு கொடுத்த நிதிச் சலுகைகள் எதிர்ப்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. இன்னும் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் வருவது வேலை நியமனங்கள் அல்ல... வேலை இழப்புகள்தான். இந்த நிலை இன்னும் ஆறு மாதங்களில் தீவிரமடையும் அறிகுறிகள்தான் தெரிகின்றன. அதற்கு இப்போதே தயார்படுத்திக் கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் நிலைமை மிக சிக்கலாகிவிடும்" என்கிறார் ஸ்டிக்ளிட்ஸ்.

நோபல் பரிசு பெற்ற இன்னொரு பொருளாதார அறிஞர் பால் க்ருக்மேனும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார், சில வாரங்களுக்கு முன்பு.

ஆனால் ஒபாமா அரசு, தனது 787 பில்லியன் டாலர் முதல் சலுகைத் திட்டத்தால் நல்ல பலன் தெரிவதாகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்க 157 பில்லியன் டாலர் கூடுதல் நிதிச் சலுகை கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. இப்போது மாதம் 10 சதவிகித அளவு வேலை இழப்புகள் தொடர்கின்றது. ஆனால் வேலை இழப்பின் அளவுக்கு புதிய வேலைகளை உருவாக்கும் ஒபாமா அரசின் முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ள ஒபாமா, இதைச் சரிசெய்யவே கூடுதல் நிதிச் சலுகை தரத் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் பொருளியல் அறிஞர்களோ, அது போதாது என்றும், மேலும் ஒரு பெரிய ஊக்குவிப்புச் சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதே நேரம் கடந்த இரு ஆண்டுகளில் மைனஸில் இருந்த பொருளாதார வளர்ச்சி 2009ன் மூன்றாவது காலாண்டில்தான் 2.8 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

'இந்த வளர்ச்சி நிலையைத் தக்க வைக்கவே மிகப் பெரிய செலவு செய்ய வேண்டி வரும். வேறு வழியில்லை' என்கிறார் ஸ்டிக்ளிட்ஸ்.

சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது -

மெட்டல், ரியாலிட்டு பங்குகள் உயர்வு
மும்பை: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. மெட்டல் மற்றும் ரியாலிட்டு பங்குகளும் உயர்வுடன் முடிந்தன. காலையில் வர்த்தக நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 110.39 புள்ளிகள் உயர்ந்து 16,711.59 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 34.40 புள்ளிகள் உயர்ந்து 4,987 புள்ளிகளோடு முடிந்தது.
அதிகமாக செயில் நிறுவன பங்குகள் 4.90 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 3.03 சதவீதமும், பார்தி ஏர்டெல் பங்குகள் 3.66 சதவீதமும், ஹிந்தால்கோ பங்குகள் 3.43 சதவீதமும், என்.டி.பி.சி., பங்குகள் 2.20 சதவீதமும், ரிலையன்ஸ் கேப்பிட்டல் 2 சதவீதமும் உயர்ந்தன.

இந்திய பங்குச் சந்தை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90.80 புள்ளிகள் உயர்ந்து 16,692.00 புள்ளிகளோடு நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 33.25 புள்ளிகள் உயர்ந்து 4,985.85 புள்ளிகளோடு நிலைபெற்றது.

சொந்தமாக இரண்டு காரா? கூடுதல் வரி கட்டணும்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நகரத்தின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இப்பிரச்னை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

சமீபத்தில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து நெரிசலில் கார்களின் பங்கு 30 சதவீதம், இருசக்கர வாகனங்களின் பங்கு 62 சதவீதம் என கவலை தெரிவிக்கப்பட்டது.

இத்துடன் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஷ் பாவா, நீதிபதிகளிடம் தெரிவித்ததாவது;

டில்லியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர், ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்துள்ளனர். வாகன நெரிசலுக்கு இதுவே முக்கிய காரணம். எனவே, வாகன பதிவை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு, சாலை வரி, பார்க்கிங் சார்ஜ் உள்பட பல வழிகளில் கூடுதல் வரி விதிப்பது பற்றி மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இவ்வாறு விகாஷ் பாவா தெரிவித்தார். இதையடுத்து இதற்கு தகுந்தவாறு ஒரு சட்டத்திருத்தம் கொண்ட வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எம்., நிறுவனத்திற்கு ரூ. 380 கோடி மதிப்பில் ஆடர்
புதுடில்லி: பிரபல ஐ.டி., நிறுவனமான ஐ.பி.எம்., நிறுவனம், டிஜிகேபிள் என்ற நிறுவனத்திடம் ரூ. 380 கோடி மதிப்பில் ஆடர் பெற்றுள்ளது. கேபிள் மற்றும் போர்ட்டுபிரான்ட் உள்ளிட்ட வற்றை அமைக்கும் திட்டத்திற்காக இந்த ஆடரை ஐ.பி.எம்., நிறுவனம் பெற்றுள்ளது. பொதுபோக்கு நிறுவனமான ஸ்டார் டி.வி மற்றும் டாடா ஸ்கை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுடனான ஒப்பந்தத்திலும் ஐ.பி.எம்., நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு
துபாய்: இந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.3 சதவீதம் அதிகரிக்கும் என்று வளைகுடா நாடுகளின் பொருளாதார அமைச்சர் சுல்தான் அல்-மான்செளரி ‌நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதே போல, அடுத்த ஆண்டு(2010ம் ஆண்டு) வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும், முதலீட்டாளர்களை கவரும் விதமாக பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்தில் இருந்து உணவுப் பொருட்களின் விலை குறையும்: மான்டெக்
கோல்கட்டா: கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவு உயர்ந்து வரும் உணவுப் பொருள்களின் விலை, அடுத்த மாதத்தில் இருந்து குறைய தொடங்கும் என்று திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். உருளைக் கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயர்வே உணவு பணவீக்க உயர்விற்கு காரணம் என்றும் இந்த பணவீக்கம் விகித உயர்வும் விரைவில் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்

கலக்க போகும் சிறிய கார் சந்தை: பெரிய நிறுவனங்கள் மோ
இந்தியாவில் சிறிய கார் சந்தை எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறது. இதுநாள் வரை, இச்சந்தையில் மாருதி மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதற்கு போட்டியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார், அறிமுகமாகி பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த ஆண்டு, இந்தியாவின் சிறிய கார் சந்தையில், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா, ஃபோர்டு இந்தியா, நிஸான்மோட்டார்இந்தியா மற்றும் வோக்ஸ்வாகன் இந்தியா ஆகிய பெரிய நிறுவனங்கள் களத்தில் குதிக்கின்றன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பீட், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் பிகோ, நிஸான் நிறுவனத்தின் மைக்ரா, வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் போலோ ஆகிய கார்களே இந்தியாவை கலக்க வருகின்றன.

இந்த புதிய கார்கள், மாருதியின் பல மாடல் கார்கள் மற்றும் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ10, ஐ20 கார்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும், சிறிய கார் சந்தையில் 10 முதல் 15 சதவீதம் வரை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளன. எனவே, சிறிய கார் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பலவகையான சலுகைகள் காத்திருக்கின்றன என்றே கூறலாம்.

இந்தியாவில் சிறிய கார் சந்தை எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறது. இதுநாள் வரை, இச்சந்தையில் மாருதி மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதற்கு போட்டியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார், அறிமுகமாகி பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிராண்டே எம்கே 2 புதிய கார் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில், கிராண்டே எம்கே 2 என்ற புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம, யுடிலிட்டி வைக்கிள் பிரிவில் ஏற்கனவே சுமோ என்ற காரை விற்பனை செய்து வந்தது. இதன் மேம்படுத்தப்பட்ட காராக, கிராண்டே எம்கே 1 கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கிராண்டே எம்கே 2 என்ற புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய காரின் வெளிப்புறத்தில், புதிய குரோமோலைன்டு கிரில், குரோம் இன்செர்ட்டுடன் கூடிய சைட் ரப்ரெயில்ஸ், ரியர் கண்ணாடிகளில் இன்டிகேட்டர் போன்ற வசதிகள் உள்ளன. உட்புறத்தில் பாக்ஸ் வுட் சென்டர் கன்சோல், புதிய பேப்ரிக் அப் ஹோல்ஸ்டரி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய காரின் விலை ரூ.6.43 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை இருக்கும் (எக்ஸ்ஷோரூம் டில்லி). மாதத்துக்கு 4,000 கிராண்டே எம்கே 2 கார்களை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜிஎக்ஸ், இஎக்ஸ், எல்எக்ஸ் என மூன்று பிரிவுகளில் இந்த புதிய கார் கிடைக்கும்.

விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
புதுடில்லி: 'உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவாக, 20 சதவீதத்தை அடைந்தது.


இதை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் கூறியதாவது: இந்த மாதம், உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை என்றால், பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, வட்டி வீதத்தை அதிகரிப்பது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டிய குறிப்பிட்ட ரொக்க கையிருப்பு வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.


இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், கடந்த 18ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசி உள்ளார். இதனால், நிதிக் கொள்கைகள் கடுமையாக்கப்படலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி, அடுத்த நிதிக் கொள்கையை, அடுத்த மாதம் 29ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல், அரசு செயலற்று இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இவ்விவகாரத்தால், பார்லிமென்ட் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. அதே சமயம், முன்பு ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த பிமல் ஜலான் கருத்து தெரிவிக்கையில், 'அதிகப் பணப்புழக்கத்தை உறிஞ்சி எடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால், விலைவாசி குறையும்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவும், வியட்னாமும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து பணவீக்கத்தை சமீபத்தில் குறைத்திருப்பதையும் நிதித்துறையும் ரிசர்வ் வங்கியும் கவனித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாவதால்

சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும்

ஹர்சிம்ரன் சிங்
புதுடெல்லி
கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறிய வகை மடி கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளன. இதனையடுத்து Ôநெட்புக்Õ என்றழைக்கப்படும் சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் விற்பனையில் பெரும் எழுச்சி ஏற்படும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்த கம்ப்யூட்டர்கள் Ôமினி நோட்புக்ஸ்Õ என்றும் அழைக்கப்படுகின்றன.
முதன் முதலில்...
Ôலேப்டாப்Õ என்றழைக்கப்படும் மடி கம்ப்யூட்டர்கள் பேட்டரியில் இயங்கக் கூடியவை. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்லக்கூடிய இந்த கம்ப்யூட்டர்களை தொழிலதிபர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏ.எஸ்.யு.எஸ்., சிறிய வகை மடி கம்ப்யூட்டரை முதன் முதலில் உருவாக்கியது.
அளவில் சிறிய, எடை குறைவான, சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் இணையதளத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் பயன்பாடு இன்னும் அதிகரிக்கத் தொடங்கவில்லை. எனினும் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இப்பிரிவு அபார வளர்ச்சி காணும் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கார்ட்னர் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் தீப்தரூப் சக்ரவர்த்தி கூறும்போது, Òஒரு வாடிக்கையாளர் முதன் முதலாக கம்ப்யூட்டர் வாங்கும்போது, மடி கம்ப்யூட்டரை விரும்புவதில்லை.
எனவே இது இரண்டாவது தேர்வாகத்தான் உள்ளது. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள், சாதாரண கம்ப்யூட்டருக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளன. சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த மடி கம்ப்யூட்டர்கள் விற்பனையில் Ôநெட்புக்Õகுகளின் பங்களிப்பு 20 சதவீத அளவிற்கே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பல இல்லங்களில் சாதாரண கம்ப்யூட்டரே இல்லை. எனவே மடி கம்ப்யூட்டர்கள் பயன்பாடு மெதுவாகத்தான் வளர்ச்சி காணத் தொடங்கும்Ó என்று தெரிவித்தார்.
சாதாரண கம்ப்யூட்டர்
இந்தியாவில் இன்று சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாடு 5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. மூன்றாவது காலாண்டில் (ஜூலை&செப்டம்பர்) நம் நாட்டில் மொத்தம் 21.80 லட்சம் சாதாரண கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இதில், மடி கம்ப்யூட்டர்கள் விற்பனை 7.30 லட்சம் என்பது கவனிக்கத்தக்கது. ஆனாலும் சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் விற்பனை 70,000 என்ற அளவில்தான் இருந்தது. எனினும் வரும் 2010&ஆம் ஆண்டில் இவற்றின் விற்பனை 3,25,000&ஆக உயரும் என கார்ட்னர் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதே சமயம் சர்வதேச அளவில் விற்பனை 6 கோடியாக அதிகரிக்கும் என ஏ.பீ.ஐ. ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
விற்பனை
சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களைப் பெற்றுள்ளன. விலையும் குறைவாக உள்ளது. டெல், எச்.பி., ஏசர், எச்.சி.எல். மற்றும் லினோவா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சிறிய வகை மடி கம்ப்யூட்டர்களை தயாரித்து அளித்து வருகின்றன. நடப்பு 2009&ஆம் ஆண்டில் இதுவரை, 1,35,000 சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. உள்நாட்டில் தற்போது சிறிய மடி கம்ப்யூட்டர் ஒன்றின் விலை சுமார் ரூ.20,000&ஆக உள்ளது. உயர்ந்த பிராண்டு சிறிய வகை மடி கம்ப்யூட்டர் ஒன்று ரூ.15,000 என்ற விலையிலேயே கிடைக்கிறது.
மின்சாரம்
தற்போது சிறிய வகை மடி கம்ப்யூட்டர் ஒன்றில் உள்ள பேட்டரி 7&8 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கூடியது. இவ்வகையில், பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் 10 அங்குல திரையைக் கொண்டுள்ளன. சில மாடல்கள் 12 அங்குல திரையைக் கொண்டுள்ளன. பொதுவாக வழக்கமான மடி கம்ப்யூட்டர்கள் 1.50 முதல் 2 கிலோ வரை எடை உள்ளதாக இருக்கும். அதே சமயம் Ôநெட்புக்Õ ஒன்றின் எடை 1.30 கிலோவாக உள்ளது. ஒரு நுகர்வோர் மடி கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கும் போது அதன் எடை மிகவும் குறைவாக இருப்பதையே விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில், மடி கம்ப்யூட்டர்கள் விற்பனையில் சிறிய வகை கம்ப்யூட்டர்களின் பங்களிப்பு 10 முதல் 11 சதவீதமாக உள்ளது. சாதாரண கம்ப்யூட்டர்களை விஞ்சி இவற்றின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும் என லினோவா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமர் பாபு கூறினார். எனினும் தற்போது, பல நகரங்களில், குறிப்பாக நடுத்தர நகரங்களில் சிறிய மடி கம்ப்யூட்டர்கள் பயன்பாடு உயரத் தொடங்கியுள்ளது. எனவே, முதல் தேர்வாக சிறிய வகை மடி கம்ப்யூட்டர்கள் உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே பல நிறுவனங்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.


ரிலையன்ஸ் ரீடெயில்
85 தங்க ஆபரண விற்பனை மையங்கள்

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் தங்க ஆபரணங்கள் விற்பனை பிரிவு ரிலையன்ஸ் ஜுவல்ஸ் ஆகும். இப்பிரிவின் கீழ், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதுமாக 85 தங்க ஆபரண விற்பனை நிலையங்களை உருவாக்க ரிலையன்ஸ் ரீடெயில் திட்டமிட்டுள்ளது. தற்போது இப்பிரிவில் 15 பிரத்தியேக விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்த அளவில் 100 ரிலையன்ஸ் ஜுவல்ஸ் விற்பனை மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளது என இதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அன்னியச் செலாவணி கொள்கையில் மாற்றம் வரலாம்

பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி நடவடிக்கை காயத்ரி நாயக்
மும்பை
கடந்த ஒரு சில மாதங்களாக நாட்டின் பணவீக்க விகிதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, பல்வேறு உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தன.
பணப்புழக்கம்
இதனை கருத்தில் கொண்டு, பாரத ரிசர்வ் வங்கி, பணவீக்க உயர்வை தடுத்தும் நிறுத்தும் வகையில், ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்க உயர்விற்கு, பொருள்களின் அளிப்பு குறைந்துள்ள அதே நேரத்தில், பணப்புழக்கம் அதிகரித்து வருவதும் காரணமாக உள்ளது.
கடந்த ஒரு சில மாதங்களாக, அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு ஆகஸ்டு முதல் அக்டோபர் வரையிலான மூன்று மாத காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் 800 கோடி டாலரை (சுமார் ரூ.37,600 கோடி) இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதில், 33.60 கோடி டாலரை ரிசர்வ் வங்கி அதன் கையிருப்பில் வைத்துள்ளது. இதே அளவிற்கான தொகையை முன்பேர வர்த்தக சந்தையில் விற்பனை செய்துள்ளது.
அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு தவிர, அன்னிய நேரடி முதலீடு, வெளிநாடுகளில் திரட்டப்படும் கடன்கள், ஏற்றுமதி வாயிலாக பெறப்படும் வருவாய் போன்றவற்றின் வாயிலாகவும் அன்னியச் செலாவணி வரத்து அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலர்
இருப்பினும், இறக்குமதியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீட்டு லாபத்தை திரும்ப பெறுவதன் வாயிலாகவும் அன்னியச் செலாவணிகள், குறிப்பாக அமெரிக்க டாலர் வெளியேறுகிறது.
இந்த நிலையிலும், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஆகஸ்டு & அக்டோபர் மாத காலத்தில் 1,300 கோடி டாலர் (ரூ.61,100 கோடி) உயர்ந்துள்ளது.
நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வாங்கி வருகிறது. இதனால், உள்நாட்டில் ரூபாய் அளிப்பு குறைந்து போகிறது. இதனால், பணப்புழக்கம் குறைகிறது. இந்த நிலையில், வங்கிகள் அவை திரட்டும் டெபாசிட்டுகளில் இருந்து தற்பொழுது குறைந்த அளவிற்கே கடன்களை வழங்கி வருகின்றன. இவ்வகையில், அண்மைக் காலமாக வங்கிகள் வசம் ரூ.50,000 கோடி உபரி தொகை புழக்கத்தில் உள்ளது என ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இது குறித்து யெஸ் பேங்கின் தலைமை பொருளாதார நிபுணர் சுபாதா ராவ் கூறும்போது, Òபாரத ரிசர்வ் வங்கியின் கைவசம் அதிக அளவில் அன்னியச் செலாவணி இருப்பு உள்ளது. இருப்பினும், அன்னிய முதலீடுகள் நாட்டிற்குள் வருவதை தற்போது தடுத்து நிறுத்தும் எண்ணம் இல்லை என பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் தெரிவித்திருந்தது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு அறிவித்த சலுகை திட்டங்களாலும் நாட்டின் பணவீக்க விகிதம் ஓரளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பொருள்களின் அளிப்பு போதிய அளவிற்கு இல்லாததும் இதன் உயர்விற்கு காரணமாகும்Ó என்று தெரிவித்தார்.
புதிய திட்டங்கள்
மேக்கொயர் பொருளாதார ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மாலிக் இது குறித்து கூறும்போது, Òநாட்டின் பொருளாதார கொள்கையில் புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பாக, நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவை குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2010&ஆம் ஆண்டு மார்ச் & ஏப்ரல் ஆகிய இரு மாதங்களில், பணப்புழக்கத்தை குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கைளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதுÓ என்று கூறினார்.
இதன் ஓர் அங்கமாக, பாரத ரிசர்வ் வங்கி, டாலர் உள்ளிட்ட செலாவணிகளை வெளிச் சந்தையிலிருந்து அதிக அளவில் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உள்நாட்டில் பணப்புழக்கம் குறையும். அதே நேரத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு உயரும். இருப்பினும், இந்த நடவடிக்கை தற்போது மிகவும் அவசியமாக இருக்கும். இது தவிர, கடன்பத்திரங்களை அதிக அளவில் வெளியிடுவதன் வாயிலாகவும் உள்நாட்டில் பணப்புழக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற 2008&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது

இணைத்தல் நடவடிக்கைகள் மதிப்பு 50% சரிவு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பின்னடைவு, இந்திய நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களின் இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மற்றும் தனியார் பங்கு முதலீடுகளின் மதிப்பில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தங்கள்
சென்ற 2008&ஆம் ஆண்டில், இந்தியாவில் 4,154 கோடி டாலர் (ரூ.1,95,238 கோடி) மதிப்பிற்கு இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்கள், தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. இவை, நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையிலான காலத்தில், 50 சதவீதம் சரிவடைந்து 2,120 கோடி டாலராக (ரூ.99,640 கோடி) குறைந்துள்ளது. கடந்த 2007&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் 69 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
இணைத்தல் மற்றும் கையகப்படுத்துல் நடவடிக்கைகளில் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இணைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், உள்நாட்டு நிறுவனங்களுக்குள் மேற்கொள்ளப்படும் இணைப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
வெளிநாடுகளில்...
இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு 92 சதவீதம் சரிவடைந்து 1,319 கோடி டாலரிலிருந்து 112 கோடி டாலராக குறைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு 75 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுதான் காரணமாகும்.
அதேசமயம், உள்நாட்டில் நடைபெற்றுள்ள இணைத்தல் மற்றும் கையகப்படுத்துல் நடவடிக்கைகளின் மதிப்பு 521 கோடி டாலரிலிருந்து (ரூ.24,487 கோடி) 580 கோடி டாலராக (ரூ.27,250 கோடி) உயர்ந்துள்ளது. இது, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இதே காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடுகளும் 1,117 கோடி டாலராக குறைந்துள்ளது.
நிறுவனங்கள், புதிதாக ஒரு துறையில் களமிறங்குவதற்குப் பதிலாக, அத்துறையில் ஏற்கனவே ஈடுபட்டு வரும் மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, அத்துறையில் எளிதாக காலூன்ற முடியும். தற்போது, உலக அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதால், வரும் 2010&ஆம் ஆண்டில், இந்த நடவடிக்கைகளில் எழுச்சி ஏற்படும் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
அன்னியச் செலாவணி கொள்கையில் மாற்றம் வரலாம்

புதிய தொழிற்சாலைகளுக்கு இடம் அளிக்க

பொதுத் துறை நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்க திட்டம்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறையைச் சேர்ந்த, தற்போது செயல்பாட்டில் இல்லாத, உரம் மற்றும் சிமெண்டு நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
ஆர்செலர் மிட்டல்
ஆர்சசெலர் மிட்டல் மற்றும் போஸ்கோ போன்ற உருக்கு துறை நிறுவனங்கள், அவற்றின் புதிய தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலத்தைப் பெறுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உரம் மற்றும் சிமெண்டு நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்பனை செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது செயல்பாட்டில் இல்லாத உர, சிமெண்டு நிறுவனங்களிடம் 18,000 ஏக்கருக்கும் மேலான உபரி நிலம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து உருக்கு துறை செயலாளர் அதுல் சதுர்வேதி கூறும்போது, Òநிலம் விஷயத்தில் உண்மையில் சிக்கல் எதுவும் இல்லை. நாட்டில் போதிய அளவு நிலம் உள்ளது. எனினும் அந்த நிலங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அடையாளம் கண்டு, முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளங்களில் அவை பற்றிய விவரத்தை வெளியிட வேண்டியதே தற்போதைய அவசரத் தேவையாகும்Ó என்று தெரிவித்தார்.
ரூ.11 லட்சம் கோடி
உள்நாட்டு உருக்கு துறையில், பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ரூ.11 லட்சம் கோடி முதலீடு செய்வதற்காக அணிவகுத்து நிற்கின்றன. இதில் ஆர்செலர் மிட்டல் மற்றும் போஸ்கோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ள தயாராகி உள்ளன. எனினும், இரும்புத் தாது மற்றும் நிலக்கரி போன்ற கனிம வளங்கள் அதிகம் உள்ள ஜார்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில், உருக்கு தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலத்தைப் பெறுவதில் இந்நிறுவனங்களுக்கு இடர்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலம்
ஆர்செலர் மிட்டல் நிறுவனம் ஜார்கண்ட் மாநிலத்திலும், போஸ்கோ நிறுவனம் ஒரிசாவிலும் தொழிற்சாலைஅமைக்க விரும்புகின்றன. நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக ஆர்செலர் மிட்டல் மற்றும் போஸ்கோ ஆகிய நிறுவனங்கள் வேறு மாநிலங்களில் களமிறங்கவும் தயாராக உள்ளன.
இந்நிலையில், நிலக்கரி, இரும்புத் தாது போன்ற மூலப்பொருள்கள் மற்றும் இடுபொருள்கள் கிடைக்கும் இடத்தில்தான் உருக்கு தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கனிம வளம் உள்ள பகுதியிலிருந்து ஒரு தொழிற்சாலையை 50&60 கிலோ மீட்டர் தொலைவில் கூட அமைத்துக் கொள்ளலாம் என அதுல் சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.
சென்ற 2008&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது

இணைத்தல் நடவடிக்கைகள் மதிப்பு 50% சரிவு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பின்னடைவு, இந்திய நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களின் இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மற்றும் தனியார் பங்கு முதலீடுகளின் மதிப்பில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தங்கள்
சென்ற 2008&ஆம் ஆண்டில், இந்தியாவில் 4,154 கோடி டாலர் (ரூ.1,95,238 கோடி) மதிப்பிற்கு இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்கள், தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. இவை, நடப்பு 2009&ஆம் ஆண்டில், இதுவரையிலான காலத்தில், 50 சதவீதம் சரிவடைந்து 2,120 கோடி டாலராக (ரூ.99,640 கோடி) குறைந்துள்ளது. கடந்த 2007&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் 69 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
இணைத்தல் மற்றும் கையகப்படுத்துல் நடவடிக்கைகளில் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இணைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், உள்நாட்டு நிறுவனங்களுக்குள் மேற்கொள்ளப்படும் இணைப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
வெளிநாடுகளில்...
இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு 92 சதவீதம் சரிவடைந்து 1,319 கோடி டாலரிலிருந்து 112 கோடி டாலராக குறைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு 75 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுதான் காரணமாகும்.
அதேசமயம், உள்நாட்டில் நடைபெற்றுள்ள இணைத்தல் மற்றும் கையகப்படுத்துல் நடவடிக்கைகளின் மதிப்பு 521 கோடி டாலரிலிருந்து (ரூ.24,487 கோடி) 580 கோடி டாலராக (ரூ.27,250 கோடி) உயர்ந்துள்ளது. இது, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இதே காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடுகளும் 1,117 கோடி டாலராக குறைந்துள்ளது.
நிறுவனங்கள், புதிதாக ஒரு துறையில் களமிறங்குவதற்குப் பதிலாக, அத்துறையில் ஏற்கனவே ஈடுபட்டு வரும் மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, அத்துறையில் எளிதாக காலூன்ற முடியும். தற்போது, உலக அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதால், வரும் 2010&ஆம் ஆண்டில், இந்த நடவடிக்கைகளில் எழுச்சி ஏற்படும் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
அன்னியச் செலாவணி கொள்கையில் மாற்றம் வரலாம்



ஜனவரி 14-ல் 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்!

டெல்லி: 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14-ம் தேதி நடக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா அறிவித்துள்ளார்.

3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் விடுவதன் மூலம் ரூ 25000 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் தரப்படும். ஏலத் தொகை மற்றும் ஏலத் தேதியை முடிவு செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு (eGoM) நியமிக்கப்பட்டுள்ளது.

தேச நலன் கருதி எல்லைப்புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை செயலிழக்கச் செய்ய கால அவகாசம் கோரியிருந்தது பாதுகாப்பு அமைச்சகம்.

இதனால் இந்த ஆண்டு நடப்பதாக இருந்த 3 ஜி ஏலம் 2010-க்கு தள்ளிப் போனது.

இந்த நிலையில் 3 ஜி ஏலத் தேதி தொடர்பாக அமைச்சர்கள் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. ஒருமணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் ராசா, திட்டமிட்டபடி ஜனவரி 14-ம் தேதி ஏலம் நடக்கும் என்றும், அதற்குள் பாதுகாப்புத் துறை ஸ்பெக்ட்ரம் அலைகளை எல்லைப் புறங்களில் அப்புறப்படுத்திவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏலத்தில் வெல்லும் 4 நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.