பங்கு வெளியிட தயாராகும் பொதுத் துறை நிறுவனங்கள்

புதன், 27 ஜனவரி, 2010

அனுமதி வேண்டி ÔசெபிÕக்கு விண்ணப்பம்


பங்கு வெளியிட தயாராகும் பொதுத் துறை நிறுவனங்கள்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறை நிறுவனங்களான என்.எம்.டீ.சி. மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி) ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது பங்கு வெளியீட்டில் களம் இறங்க தயாராகி உள்ளன. பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வேண்டி இந்நிறுவனங்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளன.
பிப்ரவரி மாதத்தில்...
ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனம், கிராமப்புறங்களில் நிர்மாணிக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிறுவனம் அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டை பிப்ரவரி 18&ந் தேதி முதல் 23&ந் தேதி வரையிலான காலத்தில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு கனிமங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.எம்.டீ.சி. நிறுவனம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு, என்.எம்.டீ.சி. நிறுவனத்தின் 8.38 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதன் மூலம் ரூ.18,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதே போன்று ஆர்.இ.சி. நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை வெளியிடுவதன் வாயிலாக ரூ.3,300 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
அரசின் பங்கு மூலதனம்
இரண்டாவது பங்கு வெளியீட்டில் ஆர்.இ.சி. நிறுவனம் 17 கோடிக்கும் அதிகமான அளவில் பங்குகளை வெளியிடுகிறது. இதில் 12.87 கோடி பங்குகள் நிறுவனத்தின் புதிய பங்குகளாகவும், 4.29 கோடி பங்குகள் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளாகவும் இருக்கும். பங்கு வெளியீட்டுக்குப் பிறகு இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் 66 சதவீதமாக குறைந்து விடும். தற்போது அரசின் பங்கு மூலதனம் 81.82 சதவீதமாக உள்ளது.
என்.எம்.டீ.சி.
என்.எம்.டீ.சி. நிறுவனம், அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டில் 33.22 கோடி பங்குகளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் 98.38 சதவீதமாக உள்ளது. பங்கு வெளியீட்டில் இந்நிறுவனம் அதன் பணியாளர்களுக்கும், சில்லரை முதலீட்டாளர்களுக்கும் பங்கின் வெளியீட்டு விலையில் 5 சதவீத தள்ளுபடி சலுகை அளிக்க உள்ளது. சில்லரை முதலீட்டாளர்களுக்கு 33 கோடி பங்குகள் அளிக்கப்பட உள்ளன. 17.43 லட்சம் பங்குகள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன.


பாரத ஸ்டேட் வங்கி


100% இடைக்கால டிவிடெண்டு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பாரத ஸ்டேட் பேங்க், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.2,479 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,478 கோடியாக இருந்தது.
வட்டி வருவாய்
இதே காலாண்டுகளில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 10 சதவீதம் அதிகரித்து, ரூ.5,758 கோடியிலிருந்து ரூ.6,317 கோடியாக உயர்ந்துள்ளது. இதர வருவாய் ரூ.3,226 கோடியிலிருந்து 4 சதவீதம் உயர்ந்து ரூ.3,366 கோடியாக அதிகரித்துள் ளது. இவ்வங்கியின் மூலதன இருப்பு விகிதம் 13.72 சதவீதத்திலிருந்து 13.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் இவ்வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.7,299 கோடியாக உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.6,379 கோடியாக இருந்தது. ஆக, வங்கியின் நிகர லாபம் 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, அக்டோபர்&டிசம்பர் மாத காலத்தில், திரட்டிய டெபாசிட்டுகள் 11.2 சதவீதம் உயர்ந்து ரூ.7,70,985 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி வழங்கிய கடன்கள் 19 சதவீதம் அதிகரித்து ரூ.6,07,154 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வங்கி அதன் பங்குதாரர்களுக்கு 100 சதவீத இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது.

இன்சுலின் மருந்து விலை 15 சதவீதம் அதிகரிக்கும்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் இன்சுலின் மருந்துகளில் குறிப்பிட்ட சில வகை பிராண்டுகளின் அதிகபட்ச சில்லரை விலையை உயர்த்துவதற்கு, தேசிய மருந்துவிலை நிர்ணய ஆணையம் ஐந்து மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இன்னும் சில தினங்களில் சில குறிப்பிட்ட இன்சுலின் மருந்துகள் விலை 15 சதவீதம் உயரும் என தெரிகிறது.
முக்கிய பிராண்டுகள்
இதன்படி, நோவா நார்டிஸ்க் நிறுவனம் அதன் ஆக்ட்ராபிட் ஃபிளக்ஸ்பென், இன்சுலாடர்ட் ஃபிளக்ஸ் பென், மிக்ஸ்டார்ட் 30 ஃபிளக்ஸ் பென் பிராண்டுகளின் விலையை 15 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாரன்ட் பார்மா நிறுவனமும், யுமன் மிக்ஸ்டார்டு என்ற இன்சுலின் ஊசி மருந்தின் விலையை 10 சதவீதம் உயர்த்தி உள்ளது.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையில் 4.3 சதவீதமாகும். வரும் 2030&ஆம் ஆண்டிற்குள் இது 9 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சர்வதேச நீரிழிவு நோய் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
காச நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் Ôமெட்ரோல்Õ என்ற மருந்தை ஃபைசர் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலையை உயர்த்தவும். தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வைட்டமின் ஏ உள்ளிட்ட சில மருந்துகள் விலையை உயர்த்தவும் அனுமதி வழங்கி உள்ளது.
விலை நிர்ணய ஆணையம்
சில குறிப்பிட்ட வகை மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்கிறது. இந்த கட்டுப்பாட்டின் கீழ் வராத மருந்தின் விலையை மருந்து நிறுவனங்கள் 12 மாதங்களில் 10 சதவீதம் உயர்த்தலாம். இந்நிலையில் மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களின் விலை உயரும்போது, நிறுவனங்களின் கோரிக்கை அடிப்படையில் விலையை உயர்த்த அவ்வப்போது இந்த ஆணையம் அனுமதி அளிக்கிறது.


திருமலை திருப்பதி தேவஸ்தானம்


500 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறது
ராம் என். சேகல் & அபூர்வ் குப்தா
மும்பை
இந்தியாவிலுள்ள இந்து சமய அறநிலையங்களில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தான் மிகப்பெரியது ஆகும். இந்த தேவஸ்தானம் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறும் உபரி தங்கத்தில் 500 கிலோவை சென்ற ஆண்டைப்போன்று, இவ்வாண்டிலும், வங்கிகளின் தங்க வைப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்ய தீர்மானித்துள்ளது.
வட்டி விகிதம்
சென்ற ஆண்டிலும் இவ்வங்கி 500 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மூன்று ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்தது. இதற்கான ஆண்டு வட்டிவிகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் 500 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்வதற்காக சுமார் 4&5 தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளிலிருந்து விலைப்புள்ளிகளை தேவஸ்தானம் பெற்றுள்ளது.
இவ்வங்கிகள் தெரிவிக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில், தங்கத்தை டெபாசிட் செய்வதற்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கி விரைவில் தேர்வு செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாளை தரிசிக்க தினந்தோறும் சராசரியாக 50,000&க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் ரொக்கப்பணம், தங்க நாணயங்கள், நகைகள் போன்றவற்றையும் காணிக்கைகளாக செலுத்துகின்றனர். இவர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தின் அளவு 500 கிலோவைத்தாண்டும் போது, இந்த தேவஸ்தானம், அதனை வங்கிகளின் தங்க வைப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்கின்றது.
பக்தர்கள்
ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை தரும் பக்தர்கள் மொத்தம் 700&800 கிலோ தங்கத்தை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இந்த தங்கத்தில் ஒரு பகுதி அரசின் தங்கசாலைகளில் உருக்கப்பட்டு வெங்கடாஜலபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கங்களாக மாற்றப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோக எஞ்சியுள்ள தங்கம் கட்டிகளாக மாற்றப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
சென்ற 2009&ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சுமார் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையிலும் பக்தர்கள், தங்க நகைகளை காணிக்கைளாக வழங்குவது உயர்ந்துள்ளது. இது, இவர்களின் பக்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது.
கூட்டு வட்டி
இவ்வாண்டில் தேவஸ்தானம் மூன்று முதல் ஐந்து ஆண்டு முதிர்வு காலத்தில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓர் ஆண்டிற்கு 1&1.5 சதவீதம் கூட்டு வட்டியை வங்கி வழங்கும். இவ்வாறு பெறப்படும் வட்டித்தொகையை, தேவஸ்தானம், பல்வேறு சமூக நல திட்டங்கள் மற்றும் அறப்பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
முதிர்வுகாலம் முடிந்ததும் தேவஸ்தானம் விரும்பினால், தங்கத்தை, வங்கிக்கு அப்போது நிலவும் விலையின் அடிப்படையில் விற்பனை செய்யும்.

கார் லோன் வாங்க போறீங்களா? இதை கவனியுங்க முதல்ல...

இந்தியாவில், கார் வாங்குவது என்பது இன்று வரை ஒரு கவுரவ சின்னமாகவே கருதப்படுகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறிய கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. எனவே, ஒவ்வொரு இந்தியனும், கார் வாங்குவதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளனர். இதற்கு ஏற்றாற் போல், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கார் கடனுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வீசி வருகின்றன. கடந்த காலங்களை போல காருக்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. ஷோரூம் போனால் உடனே டெலிவிரி, காருக்கான முழு தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்தினால் மட்டும் போதும், மீதி தொகையை மாத தவணையில் செலுத்தலாம் என்றெல்லாம் பல வசதிகள் உள்ளன. புதிய காருக்கு மட்டுமல்ல, செகன்ட் ஹண்ட் காருக்கு கூட கடன் வசதிகள் கிடைக்கின்றன.
நடுத்தர குடும்பங்களை இந்த வசதிகள் தான் ஆட்டிப்படைக்கின்றன. கார் வாங்குவது கடினமான காரியம் இல்லை என்று அவர்கள் நினைக்க தொடங்கி விட்டன. ஆனால், கார் கடன் வாங்கும் முன் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதில் அவர்கள் தங்கள் எண்ணத்தை செலுத்துவதில்லை. அவர்களுக்காக இங்கே சில டிப்ஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

குறைந்த கடன் தொகை: கார் கடன் வாங்கும் முன், எந்த அளவுக்கு கடன் தொகையை வாங்க போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் வட்டி செலுத்த வேண்டும். எனவே, வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கும் போது, குறைந்த அளவில் கடன் வாங்கினால் மட்டும் போதுமானது. இதன் மூலம் வட்டித் தொகை குறையும். கார் கடனையும் விரைவில் கட்டி முடிக்க முடியும். ஆனால், அதிக முன் தொகையை செலுத்த வேண்டும் என்ற பிரச்னை இருப்பதால், இதில் பலரும் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். எனினும், குறைந்த தொகையை கடனாக வாங்கினால் லாபமாகவே இருக்கும்.

பிரபல மாடல்கள்: பிரபலம் இல்லாத, சந்தையில் வரவேற்பு இல்லாத கார்களுக்கு கடன் வாங்குவது என்றால், அதற்கான வட்டியும் அதிகமாகவே இருக்கும். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கார், விற்பனைக்கு பிறகு நிறுவனம் அளிக்கும் சிறப்பான சர்வீஸ், குறைந்த அளவு பராமரிப்பு ஆகியவை தான் ஒரு கார் சிறந்த மாடல் என்பதை நிர்ணயிக்கிறது. இதுபோன்ற கார்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். கார் வாங்கும் போது இதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆன் ரோடு விலை: கார் விலையை, எக்ஸ் ஷோரூம் விலை, ஆன் ரோடு விலை என இரண்டு விதமாக குறிப்பிடுவர். கார் பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், ரோடு வரி மற்றும் பிற கட்டணங்கள் அடங்கியது தான் ஆன் ரோடு விலை. எக்ஸ்ஷோரூம் விலை என்பது இந்த கட்டணங்கள் சேர்க்கப்படாதது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆன் ரோடு விலைக்கு தான் கடனை தருகின்றன. புதிதாக கார் வாங்கும் போது ஆன் ரோடு விலையை குறிப்பிட்டு கடன் வாங்கினால், பிற கட்டணங்களுக்கு கை காசை செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒப்பிட வேண்டும்: ஏராளமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கார் கடன்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுகின்றன. ஆனால், எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் குறைந்த அளவு வட்டி வசூலிக்கப்படுகிறது, மாத தவணையான இ.எம்.ஐ., எவ்வளவு போன்ற விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து கடன் வாங்கினால் லாபமாக இருக்கும்.

புராசசிங் கட்டணம்: நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவரா? அதற்கான கட்டணத்தை முறையாக கட்டுபவரா? உங்களுக்கு கடன் கொடுத்தால் பிரச்னை வராது என்று வங்கி நினைக்கிறதா? இது போன்ற விஷயங்கள் உண்டு. நீங்கள் வங்கி கணக்குகளை முறையாக வைத்திருந்தால், கார் கடனுக்கான புராசசிங் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வங்கிகள் குறைத்து கொள்ள வாய்ப்பு உண்டு.

கவர்ச்சிக்கு மயங்க கூடாது: வாடிக்கையாளர்களை கவருவதற்காக சில டீலர்களும், சிறிய நிதி நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான சலுகைகளை அள்ளி வீசுவார்கள். இதை பார்த்து மயங்கி விட கூடாது. எந்தவித பின்னணியும் தேவையில்லை, உங்கள் வருவாய் எவ்வளவு என்று கூட கேட்ட மாட்டோம், கார் கடன் வாங்கிகொள்ளுங்கள் என்று வலை விரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


முதல் கார் பெரியதா, சிறியதா: பெண்களின் விருப்பம் எது?
இந்திய பெண்கள் தாங்கள் வாங்கும் முதல் கார், பெரியதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
இந்தியாவில், ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில், உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 23 லட்சம் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் வரவேற்பு, வெளிநாட்டு கார் நிறுவனங்களை வியக்க வைத்துள்ளது. எனவே, அனைத்து வெளிநாட்டு கார் நிறுவனங்களும், போட்டிபோட்டுக் கொண்டு, கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.

அதே போல, கார் வாங்கும் முன் அதுகுறித்த தகவல்களை இன்டர்நெட் மூலம் தேடுவதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர். கார் வாங்குபவர்களில் 90 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர், இன்டர்நெட் மூலமே பதிவு செய்து கார் வாங்குகின்றனர். இவர்களில், பாதி பேர், இன்டர்நெட் மூலமே கார் உதிரி பாகங்களையும் வாங்குகின்றனர். இன்டர்நெட் மூலம் வாங்கும் போது கிடைக்கும் பணச்சலுகை மற்றும் டீலர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகியவையே இதற்கு காரணம்.

கார் குறித்த தகவல்களை தெரிவிப்பதில், காடி.காம் என்ற இணையதளம் முன்னணியில் உள்ளது. இந்த இணையதளம் இரண்டு மாதங்களாக, ஒரு ஆய்வை நடத்தியது. கார் வாங்குவதற்காக இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் மன நிலையை அறிவதற்கான ஆய்வு இது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 28 ஆயிரத்து 934 பேர் பங்கேற்றனர். இவர்களில் 88 சதவீதம் பேர் ஆண்கள். 12 சதவீதம் பேர் பெண்கள். ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, பதவி மற்றும் பாலினம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டது.

ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள் வருமாறு:

பெண்களில் 46 சதவீதம் பேர், தங்களது முதல் காராக செடன் போன்ற பெரிய காராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்தியர்களில் 46 சதவீதம் பேர் கார் நல்ல மைலேஜ் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, கார் ஸ்டைலாக இருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

பெரிய கார்களை வாங்கி, அவற்றை சாலையில் ஓட்டிச் செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவது உண்டு. இப்பிரச்னை இருந்தாலும், இந்தியர்களில் 55 சதவீதம் பேர் நடுத்தரமான காருக்கு பதிலாக பெரிய கார் வாங்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

30 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களின் ஆண்டு வருமானத்தை போல இரண்டு மடங்கு தொகையை புதிய கார் வாங்குவதற்காக செலவிட தயாராக உள்ளனர்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை உள்ளவர்கள், தங்களின் மொத்த ஆண்டு வருமானத்தையும் புதிய கார் வாங்குவதற்காக செலவிட தயாராக உள்ளனர்.

இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பங்குச் சந்தையில் தங்கமயில்

மதுரை: தென் மாவட்டங்களில் பிரபலமான தங்கமயில் ஜுவல்லரி பங்குச் சந்தையில் நுழைகிறது.
இந்நிறுவன இணை நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறியதாவது: தென்மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தங்கமயில் ஜுவல்லரிக்கு, மதுரை உட்பட ஐந்து இடங்களில் கிளைகள் உள்ளன. அடுத்த ஆண்டிற்குள் மேலும் ஆறு கிளைகள் துவக்க உள்ளோம். ஒவ் வொரு நிதி ஆண்டிலும், குறைந்தபட்சம் நான்கு ஷோரூம்கள் திறக்க முடிவு செய்யப் பட்டுள் ளது. கடந்த ஆண்டில், 246 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளோம். பங்கு வெளியீடு மூலம் 35 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். இது நமது பங்கு என நினைத்து, மக்கள் ஆர்வமாக ஈடுபடுவர் என எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு ரமேஷ் கூறினார்.

நிறுவன ஆலோசகர் ஆடிட்டர் ராஜகோபாலன் கூறியதாவது: மார்க்கெட்டில் நல்ல திறமை காட்டியுள்ள நிறுவனம் இது. நிதி நிர்வாகம் நன்றாக உள்ளதால், பங்கு வாங்குபவர்கள் நிச்சயம் பலன் பெறுவர். பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதி, புதிய தொழிலில் முதலீடு செய் யப்படவில்லை. வணிக விரிவாக்கத்திற்கு தான் பயன்படுத்தப்படும். ரேட் டிங்கில் ஐந்துக்கு மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது. ஜன., 27ல் (நாளை) வெளியிடப்படும் 10 ரூபாய் முகமதிப்புள்ள புதிய பங்கு ஒன்றின் விலை 70 முதல் 75 ரூபாய் வரை இருக்கும்.

இவ்வாறு ராஜகோபாலன் கூறினார்.கீநோட் கார்ப்பரேட் நிறுவனத்தின் சூரஜ் சரயாகி அறிமுக உரை நிகழ்த்தினார்.

துபாயில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி முயற்சி: 7 பேர் கைது
துபாய்: துபாயில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்ய ‌முயன்ற 7 பேரை ஐக்கிய அரபு எமிரேட் அரசு கைது செய்துள்ளது. ‌சென்ட்ரல் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் மூலம் 10.3 பில்லியன் டாலர்களை அவர்கள் மோசடி செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதனை உடனடியாக கண்டறிந்த வங்கி, இந்த விஷயத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளது. விரைந்து செயல்பட்ட போலீசார் அவர்களை ‌கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த ஆவணங்களைச் சோதித்தபோது, அவை போலியானவை என்று தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய வங்கி ஒன்றின் கேட்பு ஆணையின் பேரில் இந்தத் தொகையை சென்டிரல் வங்கியிலிருந்து மாற்றத்தக்க வகையில் அந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வரிஏய்ப்பில் மும்பை பிரபலங்கள் : நவி மும்பை மாநகராட்சி
மும்பை : நவி மும்பை மாநகராட்சி மும்பையை சேர்ந்த பிரபலங்கள் சிலர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. இதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனில் அம்பானி , பாலிவுட் பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோர் சிக்கியுள்ளனர். நவி மும்பையில் கார் போன்ற வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி குறைவாக இருப்பதால் பெரும்பாலானோர் அங்கு தங்கள் வாகனங்களை பதிவு செய்ய விரும்பதாக நவி மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவன பங்கு விற்ப‌னை நிறுத்தப் படாது: அருண்யாதவ்

இந்தூர்: பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நிறுத்தப்படாது என்று கனரக தொழில் துறை இணை அமைச்சர் அருண் யாதவ் தெரிவித்தார்.

இந்தூரில் 65 வது அகில இந்திய ஜவுளி மாநாட்டை தொடங்கிவைத்த அவர், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்கு விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொதுத்துறை நிறுவன பங்கு விற்ப‌னை நிறுத்தப்படாது. இந்த வருடத்திற்குள் 10 முதல் 15 விழுக்காடு பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.


மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு, பங்கு விற்பனை செய்யப்படும். பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கான கருத்து கணிப்பு நடை பெற்று வருகிறது. இதில் 80 விழுக்காட்டினர் பங்கு விற்பனை செய்வதற்கு சாதமான பதிலை தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.



இந்தியன் வங்கிக்கு ரூ. 441 கோடி லாபம்
சென்னை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டி கணக்கெடுப்பின வெளியிட்டுள்ளது. இதனை வங்கியின் தலைவர் சுந்தர ராஜன் வெளியிட்டார்.
இதில், வங்கி ரூ. 441 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும்.

வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 1,42,200 கோடி என்றும், இது அதற்கு முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ரூ. 1,20,120 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சேமிப்புகளின் அளவு 21 சதவீதம் அதிகரித்து ரூ. 84,732 கோடியாக உயர்ந்தது. வங்கி வழங்கிய கடன் அளவு 13 சதவீதம் அதிகரித்து ரூ. 57,468 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், வங்கியின் வாராக் கடன் அளவு 0.92 சதவீதத்திலிருந்து 0.92 சதவீதமாகக் குறைந்தது. ஒட்டுமொத்த வாராக்கடன் 0.16 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதத்தில் ரூ. 471.07 கோடி வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


தனலட்சுமி வங்கி புதிய திட்டம்
மும்பை: தனலட்சுமி வங்கி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியை துவக்கியுள்ளது. தனலட்சுமி வங்கி பொது மேலாளர் ஜெயகுமார் கூறியதாவது: நிதியை அதிகரிக்கும் முயற்சியாகவும், பொருளாதாரத்துக்கு உதவும் வகையிலும், 50 ஆயிரம், 'நோ-பிரில்ஸ்' வங்கிக் கணக்குகளை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இதற்காக, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 50 புதிய வாடிக்கையாளர் சேவை மையங்களை திறக்கவுள்ளோம்.

இங்குள்ள வங்கி பிரதிநிதிகள், வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், வங்கிக் கணக்குகளின் விவரங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு விளக்குவர். இந்த சேவை மையங்கள், வங்கியின் வர்த்தக தொடர்பு மையங்களாகவும் செயல்படும். காப்பீடு, கடன் திட்டம் முதலான பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயகுமார் கூறினார். வங்கியின் மைக்ரோ பைனான்ஸ் துறை தலைவர் திலிசா குப்தா கவுல் கூறுகையில், 'மிகவும் அதிகளவு வாடிக்கையாளர்களை, அமைப்பு ரீதியான வங்கி நடவடிக்கைகளுக்கு கொண்டு வருவது தான், இத்திட்டத்தின் நோக்கம்' என்றார்

வைர விற்பனை: ஜப்பானை முந்தியது சீனா
பெய்ஜிங்: வைர விற்பனையில் ஜப்பானை சீனா முந்தியுள்ளது. வைர விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஜப்பான் இருந்தது. தற்போது, ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஷாங்காய் வைர விற்பனை சந்தையில் வைர விற்பனை 16.4 சதவீதம் உயர்ந்து 150 கோடி டாலரரை எட்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல், தற்போது நிலவி வரும் நிதிநெருக்கடியிலும், சீனாவில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீனாவில் தற்போது சாதாரண மக்கள் கூட வைர நகைகளை பயன்படுத்த தொடங்கி விட்டதும், பண்டிக்கை காலங்களில் வைரத்தை வாங்குவதற்கு சீனா மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதுமே, சீனாவில் வைர விற்பனை அதிகரித்து இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மேலும் 9 வங்கிகள் திவால்

திங்கள், 25 ஜனவரி, 2010

நியூயார்க்: இந்த ஆண்டும் தொடர்கிறது அமெரிக்க வங்கிகளின் திவால் சோகம்.

புத்தாண்டு பிறந்து 20 நாட்களுக்குள் 9 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 5 வங்கிகள் ஒரே நாளில் மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டுமே 140 வங்கிகள் திவாலாகின அமெரிக்காவில். இது கடந்த 18 ஆண்டுகளில் அதிகபட்ச வீழ்ச்சியாகும்.

இந்த நிலையில் 2010-ம் ஆண்டும் வீழ்ச்சிக்கு விதிவிலக்காக இல்லை. கொலம்பியா ரிவர் வங்கி, எவர்கிரீன் வங்கி, சார்ட்டர் வஹ்கி, பேங்க் ஆப் லீடன், பிரிமியர் அமெரிக்கன் வங்கி ஆகிய 5 வங்கிகள் ஒரே நாளில் மூடப்பட்டன (ஜனவரி 22). இவற்றால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 531.7 அமெரிக்க டாலர்கள்.

இவற்றைத் தவிர மேலும் 4 வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 2008-ல் லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்த பிறகு 164 வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி லாபம் மூன்று மடங்கு அதிகரிப்பு
மும்பை: மாருதி சுஸுகி நிறுவனத்தின் லாபம் இந்த காலாண்டில் மட்டும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

அக்டோபர் - டிசம்பர் 2009 காலாண்டில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் ரூ 687.53 கோடி. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ 213.57 கோடியை நிகர லாபமாகக் காட்டியிருந்தது மாருதி.

2008-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் லாபம் காட்டிய மிகச் சில கார் உற்பத்தி நிறுவனங்களுள் மாருதியும் ஒன்று.

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மீட்சிக்கு திரும்புவதால், கார் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி நிறுவனம் சாதனை அளவாக 218,910 க்கும் அதிகமான கார்களை விற்று முதலிடத்தில் உள்ளது.

மூன்றாம் காலாண்டில் மாருதியின் மொத்த வருமானம் ரூ 7,591.1 கோடியாக உள்ளது. உள்நாட்டு விற்பனை 37.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குர்கான், மானேசர் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மாருதி, இரண்டிலும் மொத்தம் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் மிக்கதாக உள்ளது. இப்போது மானேசர் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை 3,00,000 லிருந்து ஆண்டுக்கு 5,50,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

என்.எம்.டீ.சி. நிறுவனம்

2&வது பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.20,000 கோடி திரட்ட திட்டம்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறையை சேர்ந்த என்.எம்.டீ.சி. நிறுவனம், இரண்டாவது முறையாக பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி வேண்டி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு இன்று (திங்கள்கிழமை) விண்ணப்பிக்க உள்ளது.
என்.எம்.டீ.சி. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 98.38 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. மீதமுள்ள 1.62 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசம் உள்ளன. என்.எம்.டீ.சி. நிறுவனம், இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.20,000 கோடியை திரட்டிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இப்பங்கு வெளியீட்டின் மூலம் மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 8.38 சதவீத பங்குகளை வெளியிட உள்ளது.
Ôநவரத்னாÕ அந்தஸ்து
Ôநவரத்னாÕ அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம், கனிமவள மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.532.50 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது.
மேற்கண்ட மொத்த பங்கு வெளியீட்டில் 50 சதவீத பங்குகள் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீத பங்குகள் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.
இப்பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, மத்திய அரசு, சமூகநலன் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பன்ஸ்வாரா சின்டெக்ஸ்


நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்நிறுவனம், பல்வேறு ஜவுளி பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், விரிவாக்க நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது. எனவே, பங்கின் விலை குறையும் நிலையில் முதலீடு செய்யலாம்.
தேவங்கி ஜோஷி
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
ராஜஸ்தானை சேர்ந்த பன்ஸ்வாரா சின்டெக்ஸ் (ஙிணீஸீsஷ்ணீக்ஷீணீ ஷிஹ்ஸீtமீஜ்) நிறுவனம், நூலிழைகள் மற்றும் ஆடைகள் தயாரிப்புக்கு தேவையான சிறப்பு வகை துணிகள் போன்றவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட ஜவுளி ஆலைகள் உள்ளன. Ôசென்செக்ஸ்Õ 75 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ஆறு மடங்குகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தி நூலிழைகள்
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், பாலியெஸ்டர், விஸ்கோஸ், உல்லன், அக்ரலிக் உள்ளிட்ட கலப்பின நூலிழைகளுடன் பருத்தி நூலிழைகள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்நிறுவனம் ஆர்டர்களின் அடிப்படையில் சிறப்பு வகை துணிகளையும் தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேரமன் என்ற நிறுவனத்தின் கூட்டுடன் (50 சதவீதம்) 60 விசைத்தறிகளுடன் கூடிய நெசவு ஆலையையும் கொண்டுள்ளது.
அண்மையில், இந்நிறுவனம் லிக்ரா பிராண்டு துணிகள் தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கி உள்ளது. இவ்வகை சிறப்பு துணிகள், பள்ளிச் சீருடைகள், பெண்கள் அணியும் நவீன மற்றும் அலுவலக பயன்பாட்டு ஆடைகள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதி
இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில், துணிகளின் பங்களிப்பு 60 சதவீத அளவிற்கு உள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் நூலிழை வர்த்தகத்தின் மூலம் பெறப்படுகிறது. இதில், பாலியெஸ்டர் நூலிழைகளின் பங்களிப்பு மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிறுவனம் அதன் ஜவுளி வகைகளை சுமார் 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற காலாண்டில், இந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயில், ஏற்றுமதியின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மின் திட்டங்கள்
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயில் அடிப்படையில் செயல்படக்கூடிய இரண்டு அனல் மின் திட்டங்களை கொண்டுள்ளது. இவை, முறையே 18 மெகா வாட் மற்றும் 9 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். மேற்கண்ட இரண்டு மின் பிரிவுகள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், நிறுவனத்தின் சுய பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் கூடுதலாக மேற்கண்ட இரண்டு வகைகளில் 15/18 மெகாவாட் திறனில் இரண்டு மின் திட்டங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு மின் திட்டங்களும், நடப்பு 2010&ஆம் ஆண்டு இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி நிலை
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதல் ஆண்டுக்கு 21 சதவீதம் என்ற அளவிலும், ஒட்டுமொத்த நிகர லாபம் ஆண்டுக்கு 40 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்நிறுவனம், வரும் நிதி ஆண்டில் ரூ.110 கோடி திட்டச் செலவில் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதில், மூன்றில் ஒரு பகுதி நிதி, உள்வள நிதி ஆதாரங்கள் மூலம் திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள நிதி குறித்த கால கடன்கள் வாயிலாக திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. இந்நிறுவனம், இரண்டு திட்டங்கள் அமைப்பதற்காகவும், அதன் ஜவுளி பிரிவுகளை நவீனமயமாக்குவதற்காகவும் மேற்கண்ட விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
இந்நிறுவனத்தின் லிக்ரா பிராண்டு துணிகளுக்கும், இதர சிறப்பு வகை துணிகளுக்கும் வெளிநாடுகளில் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. அண்மையில், ராணுவ துறையிடமிருந்து 57,000 மீட்டர் சிறப்பு வகை துணிகள் வழங்குவதற்காக ஆர்டர் கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வாடிக்கை நிறுவனத்திடமிருந்து, மூன்றாவது முறையாக, 20,000 மீட்டர் சிறப்பு வகை துணி வகைகள் வேண்டி ஆர்டர் கிடைத்துள்ளது.
மதிப்பீடு
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதம் வரையிலான நிதி ஆண்டில் ரூ.598.40 கோடி நிகர விற்பனையில், ரூ.31.40 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இவை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது முறையே 13.6 சதவீதம் மற்றும் 632.90 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று தற்பொழுது ரூ.112.90 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. இது, இந்நிறுவனத்தின் ஒரு பங்கு சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது 4.5 மடங்குகள் என்ற அளவில்தான் உள்ளது. ஜவுளித் துறையில் ஈடுபட்டு வரும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்நிறுவனத்தின் பங்கின் விலை குறைவாகவே உள்ளது. மேற்கண்டவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில், இந்நிறுவனத்தின் பங்கின் விலை குறையும் நிலையில் இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்
அடுத்த 10 ஆண்டுகளில்


கட்டமைப்பு வசதிக்காக ரூ.78 லட்சம் கோடி முதலீடு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும் சாலை போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான நிலைய வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, இத்துறைகளின் முன்னேற்றத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 1.7 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு (ரூ.78.20 லட்சம் கோடி) முதலீடுகள் தேவைப்படும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி புரூக்ஸ் எண்ட்விசில் தெரிவித்தார்.
சராசரியாக ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்படும் முதலீடு ரூ.6.52 லட்சம் கோடியாகும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதித் துறையில் வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. எனவே, இத்துறையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இருப்பினும், உள்நாட்டு நிறுவனங்கள்தான் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் என புரூக்ஸ் மேலும் தெரிவித்தார்.


பொதுத் துறை நிறுவனங்கள்


பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.44,000 கோடி அதிகரிப்பு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு, இவ்வாண்டு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 48 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) நடப்பு 2010&ஆம் ஆண்டின் இதுவரையிலான 15 வர்த்தக தினங்களில் ரூ.44,346 கோடி அதிகரித்து ரூ.18.20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, லாபம் ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 10 சதவீதத்தை பொதுமக்களுக்கு வெளியிடும் என்று சென்ற சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும், இதுவரை பங்குகளை வெளியிடாத, லாபம் ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்கள் புதிதாக பங்கு வெளியீட்டில் இறங்கும் என்று அறிவித்தது.
என்.டி.பி.சி.
இதனால், சென்ற 2009&ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து பொதுத் துறை நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், சென்ற இரண்டு மாதங்களில் பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2.69 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, என்.டி.பி.சி. (ரூ.11,000 கோடி), என்.எம்.டீ.சி. (ரூ.20,000 கோடி), இன்ஜினியர்ஸ் இந்தியா (ரூ.1,000 கோடி) ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (ரூ.3,000 கோடி) ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக சுமார் ரூ.35,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனங்கள், இரண்டாவது முறையாக பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. இந்நிறுவனங்கள், டிவிடெண்டுகள் மற்றும் இலவச பங்குகள் வழங்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.
சென்செக்ஸ்
இதுபோன்ற காரணங்களால் சென்ற 15 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ 3.46 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையில், பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் பங்கின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.606.95&க்கு விலை போனது. எஸ்.டி.சி. நிறுவனப் பங்கின் விலை 41 சதவீதம் உயர்ந்து ரூ.526.05&க்கு கைமாறியது. பொதுத் துறையைச் சேர்ந்த புளுசிப் நிறுவனங்களில் என்.எம்.டீ.சி., எம்.எம்.டி.சி. ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை முறையே 26 சதவீதம், 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்ஜினியர்ஸ் இந்தியா, டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை முறையே 41 சதவீதம், 33 சதவீதம் உயர்ந்து ரூ.2,182.80 மற்றும் ரூ.701.90&க்கு விலை போனது.

லார்சன் அண்டு டூப்ரோ அனல் மின் உற்பத்தி பிரிவில் ரூ.25,000 கோடி முதலீடு

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

மும்பை: நாட்டின் மிகப் பெரிய பொறியியல் துறை நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல்-டி) அதன் அனல் மின் உற்பத்தி வணிகப் பிரிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.25,000 கோடி முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து எல்-டியின் முழுமையான துணை நிறுவனமான எல் அண்டு டி பவர், 2015ம் ஆண்டுக்குள் 5,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். பல்வேறு அனல் மின் திட்டங்களுடன், சில நீர்மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக இந்த மின் உற்பத்தி இலக்கு எட்டப்படும். இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நீர்மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஆர்டரைப் பெறும் போட்டியில் ஈடுபட்டுள்ளது. எல்-டி பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி இது குறித்து கூறும்போது, நிறுவனம் பஞ்சாப் மாநிலம் ராஜபுராவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இரண்டு பிரிவுகளாக நிர்மாணிக்கப்படும் இத்திட்டம் தலா 660 மெகா வாட் திறன் கொண்டதாக இருக்கும். இதற்கான பணிகள்
தொடங்கப்பட்டு விட்டன. முதல் பிரிவு 2013ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். எல்-டி பவர் நிறுவனம் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்நிறுவனம் ரூ.16,000 கோடி மதிப்பிற்கு பல்வேறு மின் திட்டங்களை

நிறைவேற்றுவதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. மத்திய அரசு, தனியார் பங்களிப்புடன் 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்களை நிர்மாணிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இதற்கான ஒப்பந்தங்களைப் பெறும் முயற்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட உள்ளது. தற்போது முந்த்ரா (குஜராத்), சாசன் (மத்தியபிரதேசம்), கிருஷ்ணப்பட்டினம் (ஆந்திரா) திலையா (ஜார்க்கண்ட் மாநிலம்), ரோஸா (உத்தரபிரதேசம்) ஆகிய இடங்களில் தலா 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு இது போன்ற மேலும் ஐந்து திட்டங்களை நிர்மாணிக்கும் வகையில் சில பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் போட்டி அடிப்படையில் ஏலப்புள்ளி மூலம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.4,008 கோடி

தனியார் துறையை சேர்ந்த, முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.4,008 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 14.48 சதவீதம் (ரூ.3,501 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர விற்பனை ரூ.31,563 கோடியிலிருந்து ரூ.56,856 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலாண்டில், இந்நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததன் காரணமாகவே இதன் நிகர லாபம் உயர்ந்துள்ளது. மூன்றாவது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோரசாயன பொருள்கள் வர்த்தகம், முந்தைய ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 17 சதவீதம் அதிகரித்து ரூ.14,756 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.சில ஆய்வு நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற மூன்றாவது காலாண்டில் ரூ.52,297 கோடி விற்பனையில் ரூ.3,912 கோடியை நிகர லாபமாக ஈட்டும் என மதிப்பீடு செய்திருந்தன. ஆனால், சந்தை மதிப்பீட்டையும் விஞ்சி ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குறைந்த விலை ஷாப்பிங் : 'பிக் பஜார்' அறிவிப்பு
சென்னை: இந்த ஆண்டின் மிக மிகக் குறைந்த விலையில், நான்கு நாள் ஷாப்பிங் திருவிழாவை, 'பிக் பஜார்' அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி: இந்தியாவில், 70 நகரங்களில் அமைந்துள்ள பிக் பஜாரின் 120 கிளைகளில், இன்று முதல் வரும் 26ம் தேதி வரை, நான்கு நாட்கள், இந்த ஷாப்பிங் திருவிழா நடைபெறுகிறது. இந்திய நுகர்வோருக்கு மனநிறைவான சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தொடர் முயற்சியின் விளைவாக, இது போன்ற திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பிக் பஜார், புட் பஜார் தவிர பியூச்சர் குழுமத்தின்,இதர சில்லறை விற்பனை நிறுவனங்களான பர்னிச்சர் பஜார், எலக்ட்ரானிக் பஜார், ஹோம் பஜார் உள்ளிட்டவையும், இந்த மாபெரும் திருவிழாவில் இடம் பெறும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி சர்ட்டுகள் இரண்டு வாங்கினால், இரண்டு இலவசம், ஜீன்ஸ் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம், சல்வார் கம்மீஸ் துப்பட்டா செட் பல்வேறு ரகங்களில் 50 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும்.நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் மொபைல் போன் ஆகியவை 25 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டுமே, இந்த

சலுகைகள் பொருந்தும். இதை தவிர, இன்னும் ஏராளமான பொருட்களுக்கு, பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை, பிக் பஜார் வழங்குகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

டெனிம் பேன்ட் விலை அதிகரிக்கும்
அமதாபாத்: காட்டன் விலை மற்றும் பாலியஸ்டர் விலை ஏற்றத்தின் காரணமாக துணி விலை, மீட்டருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை உயர்ந்துள்ளது; டெனிம் பேன்ட் விலை அதிகரிக்கும். இந்தியாவில் குஜராத் மாநிலம் தான் துணி உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்குகிறது. இது நூற்பாலைகள் செரிந்த மாநிலமாகும். அரவிந்த் மில்ஸ், ஆர்வி டெனிம்ஸ், அஸீம்மா, நந்தன் எக்ஸீம், ஜிந்தால் வேர்ல்டு ஒய்டு போன்ற பிரசித்தி பெற்ற, பெரிய ஆலைகள் உள்ளன. ஆண்டுக்கு 25 கோடியில் இருந்து 30 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. காட்டன் விலை, பாலியஸ்டர் விலை உயர்ந்ததன் காரணமாக, ஆலை உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் துணியின் விலையை, ஒரு மீட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளனர். கடந்த மாதம் முதல் இந்த விலை அமலில் உள்ளது. வரும் மார்ச் மாதத்தில், விலை மேலும் 3 முதல் 4 சதவீதம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வி டெனிம் ஆலையின் இயக்குனர் ஆஷிஸ் வி ஷா கூறுகையில், 'எங்கள் ஆலையில் ஆண்டுக்கு 6 கோடி மீட்டர் வரை துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 20 முதல் 25 சதவீதம் வரை ஏற்றுமதி செய்கிறோம். பணப் புழக்கத்துக்கு தகுந்தாற் போல் ஏற்றுமதியை கூட்டியும் குறைத்தும் மேற்கொண்டு வருகிறோம். ஒரு மாதத்துக்கு முன்னர் ஒரு மீட்டர் துணி 87 ரூபாயாக இருந்ததை, 92 ஆக உயர்த்தி உள்ளோம். காட்டன் விலை, பாலியஸ்டர் விலை ஏற்றம் காரணமாக, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது என்றார் ஷா.

சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்


முக்கிய 6 துறைகளின் உற்பத்தி எட்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முக்கிய 6 துறைகளின் உற்பத்தி, கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் எட்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
அடிப்படை கட்டமைப்பு வசதி
உருக்கு, சிமெண்டு, மின்சாரம், நிலக்கரி, கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆகிய ஆறு அடிப்படை கட்டமைப்பு வசதி துறைகளின் உற்பத்தி கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 0.7 சதவீதம் உயர்ந்து இருந்தது. இது, சென்ற டிசம்பர் மாதத்தில், 8 மடங்கிற்கு மேல் அதிகரித்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய நவம்பர் மாத வளர்ச்சியுடன் (5.3 சதவீதம்) ஒப்பிடும்போதும் இது அதிகமானதாகும்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் இத்துறைகளின் உற்பத்தி 4.8 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் 3.2 சதவீதமாக இருந்தது. ஆக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழும் ஆறு முக்கிய துறைகளின் உற்பத்தியில் எழுச்சி ஏற்படத் தொடங்கி உள்ளது என்று கூறலாம்.
தொழில்துறை
நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் இந்த துறைகளின் பங்களிப்பு 26.7 சதவீதமாக உள்ளது. சென்ற நவம்பர் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இந்நிலையில், சென்ற டிசம்பர் மாதத்தில் இந்த முக்கிய துறைகளின் உற்பத்தியில் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால், டிசம்பர் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 12 சதவீதத்தை எட்ட வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் உற்பத்தி
பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாததால், உள்நாட்டில் வேளாண் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முந்தைய காலாண்டைப் போன்று உத்வேகம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற டிசம்பர் மாதத்தில் முக்கிய ஆறு துறைகளின் உற்பத்தி வளர்ச்சியில் சிமெண்டு துறை முதலிடத்தில் உள்ளது. இத்துறையின் உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்து 1.81 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் சிமெண்டு உற்பத்தி 13.52 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் 11 சதவீதம் அதிகரித்து 15.01 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
சிமெண்டிற்கு அடுத்தபடியாக உருக்கு உற்பத்தியில் நல்ல அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதத்தில் இதன் உற்பத்தி 9.6 சதவீதம் அதிகரித்து 46.40 லட்சம் டன்னிலிருந்து 50.85 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் உருக்கு உற்பத்தி 4.03 கோடி டன்னிலிருந்து 4.17 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
வீட்டு வசதி
இது குறித்து இந்திய கனிம தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.கே.சர்மா கூறும்போது, Òவீட்டு வசதி மேம்பாடு மற்றும் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, கட்டுமானப் பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளதால், உருக்கு மற்றும் சிமெண்டு விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால், இத்துறைகளின் உற்பத்தியில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுÓ என்று தெரிவித்தார்.
மின்சாரம்
சென்ற டிசம்பர் மாதத்தில், அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் ஆதாரமாகத் திகழும் மின் துறையின் உற்பத்தி 5.4 சதவீதம் உயர்ந்து 6,341.70 கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மின் உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து 53,995.40 கோடி யூனிட்டுகளிலிருந்து 57,252.20 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 1.1 சதவீதம் உயர்ந்து 29.05 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கான உற்பத்தி திறன் 6,86,800 பீப்பாய்கள் ஆகும். கடந்த ஆறு மாதங்களில் டிசம்பர் மாதத்தில்தான் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி உயர்ந்துள்ள நிலையிலும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 0.9 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.டீ.எப்.சி. நிறுவனம்


நிகர லாபம் ரூ.671 கோடி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
வீட்டு வசதி கடன் வழங்கி வரும் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (எச்.டீ.எஃப்.சி) நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.671.25 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.546.83 கோடியாக இருந்தது.
இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.2,827.97 கோடியிலிருந்து ரூ.2,705.57 கோடியாக குறைந்துள்ளது.

யெஸ் பேங்க்


நிகர லாபம் ரூ.126 கோடி


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்க், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.125.93 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.105.79 கோடியாக இருந்தது.
இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் வட்டி வருவாய் ரூ.532.68 கோடியிலிருந்து ரூ.626.36 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வங்கியின் வட்டிச் செலவினம் ரூ.412.27 கோடியிலிருந்து ரூ.415.44 கோடியாக சற்று உயர்ந்துள்ளது.


இந்திய செல்போன் சேவை துறை


டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வு



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
செல்போன் சேவையைப் புதிதாக பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்ற டிசம்பர் மாதத்திலும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்திலும், அதிக எண்ணிக்கையில் புதிய இணைப்புகள் வழங்கியதில் டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
டாட்டா டெலிசர்வீசஸ்
டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம், டிசம்பர் மாதத்தில் மட்டும் 33 லட்சத்துக்கும் அதிகமான அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. புதிய வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்ப்பதில் இந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 5.70 கோடியை தாண்டி உள்ளது.
இதனையடுத்து பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, செல்போன் சேவையில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக டாட்டா டெலிசர்வீசஸ் உருவெடுத்துள்ளது. இதற்கு முன்பாக, ஐடியா செல்லுலார் நிறுவனம் பீ.எஸ்.என்.எல்&ஐ ஐந்தாவது இடத்துக்கு தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறியது.
இரண்டு தொழில்நுட்பங்கள்
டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் செல்போன் சேவை வழங்குகிறது. டாட்டா இண்டிகாம் பிராண்டில் சி.டீ.எம்.ஏ. சேவையும், டாட்டா டோகோமோ பிராண்டின் கீழ் ஜி.எஸ்.எம். சேவையும் அளித்து வருகிறது. ஒரு நொடிக்கு ஒரு காசு என்ற புரட்சித் திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த இந்நிறுவனம் இதர நிறுவனங்களை விஞ்சிடும் வகையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
பார்தி ஏர்டெல்
இந்திய செல்போன் சேவைத் துறையில் முதல் இடத்தில் இருந்து வரும் பார்தி ஏர்டெல், சென்ற டிசம்பர் மாதத்தில் 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. தற்போது இந்நிறுவனம் மொத்தம் 11.90 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 84 லட்சம் புதிய இணைப்புகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
செல்போன் சேவையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. வோடாஃபோன் எஸ்ஸார் மூன்றாவது இடத்திலும், ஐடியா செல்லுலார் நான்காவது இடத்திலும் உள்ளன. டாட்டா டெலிசர்வீசஸ் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. பீ.எஸ்.என்.எல். ஆறாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

அக்டோபர் & டிசம்பர் மாத காலத்தில்


2 சிமெண்டு நிறுவனங்களின் நிகர லாபம் சரிவடைந்தது

மிதுன் ராய்
மும்பை
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்&டிசம்பர்), இரண்டு முன்னணி சிமெண்டு நிறுவனங்களின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது. உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பாடு குறைந்துள்ளதும், சிமெண்டு விலை சரிந்துள்ளதுமே இதற்கு முக்கிய காரணமாகும்.
அல்ட்ராடெக் சிமெண்ட்
அல்ட்ராடெக் சிமெண்ட், உற்பத்தி திறன் அடிப்படையில், நாட்டின் இரண்டாவது பெரிய சிமெண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் அண்மையில் மூன்றாவது காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் குறைந்துள்ளது. இதே போன்று, இக்காலாண்டில் டெல்லியைச் சேர்ந்த ஜே.கே. லட்சுமி சிமெண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 19 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்நிலையில் மெட்ராஸ் சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ், ஏ.சி.சி., அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட இதர நிறுவனங்களின் லாப வரம்பும் சரிவடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீசிமெண்ட் நிறுவனத்தின் நிகர லாபம், மூன்றாவது காலாண்டில 35 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அக்டோபர்&டிசம்பர் மாத காலத்தில் இந்நிறுவனம் ரூ.167 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.124 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் சிமெண்டு விற்பனை 30 சதவீதம் உயர்ந்து, ரூ.664 கோடியிலிருந்து ரூ.866 கோடியாக அதிகரித்துள்ளது.
எதிர்கால வளர்ச்சி
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.எம்.பாங்கூர் கூறும்போது, Òசிமெண்டு விலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவி வருவதால் எதிர்கால வளர்ச்சி குறித்து முன்னறிவிப்பு செய்வது கடினமாக உள்ளது. சிமெண்டு விலையை அதிகரிக்க இயலவில்லை என்றால் இத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு பாதிக்கப்படும்Ó என்று தெரிவித்தார்.
மெட்ராஸ் சிமெண்ட், டால்மியா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இம்மாதம் 28&ந் தேதியன்று மூன்றாவது காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.சி.சி. மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை பிப்ரவரி 4&ந் தேதியன்று நிதி நிலை முடிவுகளை வெளியிடும் என தெரிகிறது.
உற்பத்தி திறன்
தற்போது நம் நாட்டில் 70&க்கும் அதிகமான அளவில் சிமெண்டு நிறுவனங்கள் உள்ளன. சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் சிமெண்டு துறை அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு நிறுவனங்களின் சிமெண்டு உற்பத்தித் திறன் ஆறு கோடி டன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறுவனங்கள் விரிவாக்கத்துக்காக ரூ.50,000 கோடி முதலீடு மேற்கொள்ள உள்ளன. அப்போது நாட்டின் சிமெண்டு உற்பத்தி திறன் மேலும் 11 கோடி டன் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேவைப்பாட்டை விஞ்சி அளிப்பு உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

15 மாதங்களில் முதல் முறையாக லாபம் கண்ட ரிலையன்ஸ்!
மும்பை: கிட்டத்தட்ட 5 காலாண்டுகள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முதல் முறையாக இந்த காலாண்டில் லாபம் பார்த்துள்ளது.

அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் ரிலையன்ஸுக்கு 16 சதவிகித லாபம் அதாவது ரூ 4008 கோடி கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ 3,462 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த உற்பத்தி இந்த 3 மாதங்களில் மட்டும் 93 சதவிகிதம் உயர்ந்து ரூ 58,848 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் பங்குகள் மூலம் கிடைத்த வருவாய் இதில் சேர்க்கப்படவில்லை.

ஆனால் கடந்த மூன்று காலாண்டுகளிலும் சேர்த்து அதாவது 9 மாதங்களின் நிகர லாபம் என்று பார்த்தால் அதில் லேசான வீழ்ச்சியையே காட்டுகிறது. கடந்த நிதியாண்டில் 9 மாதங்களில் ரூ 11682 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த ஆண்டு 11526 கோடியாக குறைந்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் இந்த நிறுவனத்துக்கு கிடைத்த வரும் வருவாய் இந்த காலாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா!
பெய்ஜிங்: 8.7 சதவீத அபார வளர்ச்சியுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது கம்யூனிஸ்ட் சீனா.

இதுவரை அந்த நிலையிலிருந்த ஜப்பான் இப்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 21ம் தேதி சீனா வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாடு 33.5 ட்ரில்லியன் யான் (யான் என்பது சீன கரன்ஸி. டாலரில் 4.9 ட்ரில்லியன்) அளவு மொத்த உற்பத்தியை எட்டியுள்ளது.

இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் 10.7 சதவிகிதம் அளவு சீனாவின் மொத்த உற்பத்தி GDP வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் இந்த காலகட்டத்தில் எந்த நாட்டுப் பொருளாதாரமுமே இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொட முடியாத நிலையில் சீனா இதைச் சாதித்திருப்பது முக்கியமானது. ஜப்பான் 6 சதவிகித வளர்ச்சியையே பெற்றுள்ளது.

அமெரிக்காவோ 2 சதவிகித வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. நிலைமை இப்படியே போனால் தனது முதலிடத்துக்கே ஆபத்து வந்துவிடும் சூழல் உள்ளதால் கைபிசைந்து நிற்கிறது அமெரிக்கா.

சன் டிவி லாபம் 35 சதவீதம் உயர்வு!
சென்னை: மீடியா உலகில் முன்னணி வகிக்கும் சன் டிவி நெட்வொர்க்கின் மூன்றாம் காலாண்டு லாபம் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் சன் டிவியின் நிகர லாபம் ரூ.112.2 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது அது அது ரூ. 151.9 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 45.88 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.270.8 கோடியாக இருந்த வருவாய் ரூ 395.1 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் முதல் மூன்று காலாண்டிலும் சேர்த்து நிகர லாபம் ரூ.402.3 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.323 கோடியாக இருந்தது.

பங்கு விற்பனை மூலம் இந்த நிறுவனம் திரட்டிய ரூ.572 கோடியில், ரூ 8.73 கோடி, புதிய சேனல்கள் துவங்க ஒதுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் அலுவலகங்கள் அமைக்க மட்டுமே ரூ.62.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் ஐரோப்பா லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் சன் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

டிடிஎச், ஐபிடிவி, எச்ஐடிஎஸ் மற்றும் எம்எம்டிஎஸ் போன்ற தொழில் நுட்பத்தை விநியோகிக்கும் வர்த்தகத்தில் பல புதிய மாறுதல்களைச் செய்யவும் சன் திட்டமிட்டுள்ளது.

விளம்பர கட்டணம் உயர்வு:

தனது தெலுங்கு மற்றும் கன்னட சேனல்களின் விளம்பரக் கட்டண விகிதங்களை 6 முதல் 16 சதவீதம் வரை உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளது சன். மலையாள சேனல்களில் 10 சதவீகித கட்டண உயர்வு இருக்குமாம்.

கேடிவி, சன் டிவி, சன் நியூஸ், ஆதித்யா, சுட்டி மற்றும் சன் மியூசிக் போன்றவற்றில் 9 முதல் 33 சதவீதம் வரை கட்டண உயர்வை அறிவித்துள்ளது சன்.

14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்! - ஆசாத் தகவல்

டெல்லி:​ நாடு முழுக்க 14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

போலி மருந்​து​கள் தயா​ரிக்​கும் நிறு​வ​னங்​கள் குறித்து தக​வல் தரும் நபர்​க​ளுக்கு ரூ.25 லட்​சம் வரை பரி​ச​ளிக்​கப்​ப​டும் என்று மத்​திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு, இது​வரை 14 போலி நிறு​வ​னங்​கள் பற்​றிய தகவல்களை பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளதாக, டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆசாத் குறிப்பிட்டார்.

இந்த 14 போலி மருந்து தயா​ரிப்பு நிறு​வ​னங்​க​ளி​லும் சோதனை நடத்தி,​​ அவை தயா​ரிக்​கும் போலி மருந்​து​களை பறி​மு​தல் செய்​ய​வும் அவர்​க​ளைக் கைது செய்​ய​வும் நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டுள்​ளதாகவும் அவர் கூறினார்.

இந்​தப் போலி நிறு​வ​னங்​கள் எந்​தெந்த மாநி​லங்​க​ளில் செயல்​ப​டு​கின்​றன என்​பதை இப்போதைக்கு தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்ட அமைச்சர், "ஆய்வின் முடிவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகள் போலி என்பது உறுதி செய்யப்பட்டால், அந்த நிறு​வ​னத்​தின் உரி​மை​யா​ளர்​க​ளுக்கு அதி​க​பட்​சம் ஆயுள் ​தண்​டனை வழங்க சட்​டத்​தில் இடம் இருக்​கி​றது" என்​றார்.​

பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து...

ஆசாத் மேலும் கூறுகையில், "தடுப்பு மருந்​து​கள் தயா​ரித்து வந்த பொதுத் ​துறை நிறு​வ​னங்​க​ளான சென்னை​​ கிண்​டி​யில் உள்ள பி.சி.ஜி.​ வாக்​ஸின் நிறு​வ​னம்,​​ குன்​னூ​ரில் உள்ள பாஸ்​டர் இந்​தியா நிறுவனம்,​​ கசோ​லி​யில் உள்ள மத்​திய ஆய்வு நிறு​வ​னம் இவை மூன்​றும் தர​மான உற்​பத்தி முறை​க​ளைக் கையா​ள​வில்லை என்ற கார​ணத்​தால் அவற்​றின் உரி​மம் தற்காலிகமாக ரத்து செய்​யப்​பட்​டுள்ளது.​

எனினும் குறைபாடுகளைக் களைந்து இந்த மூன்று நிறு​வ​னங்​க​ளை​யும் மீண்​டும் செயல்​பட வைக்​கும் பணி​யில் சுகா​தா​ரத் துறை ஈடு​பட்​டுள்​ளது.​ ​
கிண்டி பிசிஜி வாக்​ஸின் நிறு​வ​னத்​தைப் பொருத்​த​வரை,​​ இதனை ஏன் மூடி​னார்​கள் என்று கண்​ட​றிய அமைக்​கப்​பட்ட ஜாவீத் சவுத்ரி கமிட்​டி​யின் அறிக்கை கிடைத்ததும் இது மீண்​டும் திறக்​கப்​ப​டும்" என்​றார்.